பாரிஸ் தமிழர்களின் மனதை தொட்டு கண்ணீர் விட வைத்த சம்பவம்!
பாரிஸில் வெளியான ஒரு தமிழ் படத்தை பார்த்து இங்கு வாழும் மூத்த தமிழ் மக்காள் கண்ணீர் சிந்திய சம்பவம்இடம்பெற்றுள்ளது..அப்படி என்ன அந்த படம்? டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ் படம்தான்.. எத்தனையோ படங்கள்இதுவரை பாரிஸ் வந்திருக்கின்றன..ஆனால் எதுவும் சொல்லிகொள்ளும்படி மனதை தொடவில்லை. ஆனால்இந்த படம் ஈழதமிழரின் இதயத்தை தொட்டிருக்கின்றது என்பதற்கு பாரிஸ் மூத்த தமிழ் குடிகளின் கண்ணீரேசாட்சி! நீங்களும் கட்டாயம் பாருங்கள்!
தற்செயலாக..வோ அல்லது இறைவன் அழைப்போ தெரியவில்லை..இப் படத்தை பாரிஸ் திரையரங்கில்குடும்பமாக பார்க்க முடிந்தது.எனது நாற்பத்தியொரு ஆண்டு கால புலம்பெயர்ந்த வாழ்வில்,
எமது ஈழத்தமிழ் மக்களின் மனங்களை மகிழ்வால் நிறைத்து..
சிரித்து..
நாமெல்லோரும் இணைந்து கொண்டாடும் வகையில் ஒரு ஆத்மசாந்தியான ஒரு அழகான மனிதர்களோடுஅமைந்த இக்காவியத்தை எமக்களித்த அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எமது
ஈழத்தமிழன்பு நிறை நன்றிகள்.
அன்பினால் மட்டுமே இணைந்தால்..
இன்பமே யாவருக்கும் என்பது
மூத்தோர் வாக்கு.
உண்மை தான். இவ்வளவு காலமும் அகதிகளாக இருப்பவர்களை ஏளனமாக பார்க்க வைத்த காலத்தைஇப்போது இப்படி ஒரு படத்தை ஏற்று தன் நடிப்பால் இவர்களும் வாழவந்த மனிதர்கள்தான் என்பதை தன்நடிப்பால் என்பவர்களை திரும்ப பார்க்கவைத்துள்ளது இப்படம்.
இப்போது நம்மவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொழுதுபார்த்து மகிழுங்கள். அதேவேளையில் சில இடங்களில் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றுநினைக்கின்றேன். இப்படத்துக்கு நாம் கொடுக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்பு அவர்களுக்கு மனம்மகிழ்ந்து கொடுக்கும் நன்றி. நான் பார்த்த திரையரங்குகளில் மண்டபம் நிறைந்த ரசிகர்கள்.
கதை பல முறை பார்த்ததுதான். ஒரு குடியிருப்புப் பகுதிக்குப் புதிதாக வருகிற ஒருவன் படிப்படியாகஅனைத்துக் குடும்பங்களிலும் தங்களில் ஒருவனாக ஏற்கப்படுகிறான்.
கதாபாத்திரங்கள் பல படங்களில் வந்திருப்பவர்கள்தான். பல வீடுகளிலும் பல வகை மனிதர்கள்.ஆனாலும்புத்தம் புதிய திரையனுபவத்தைத் தருகிறது இந்த சுற்றுலாக் குடும்பம். அந்தக் குடும்பமே குடியிருப்புவாசிகளின்நேசத்தை வெல்வதும் புதுசுதான்.
உள்நாட்டுப் படுகொலைச் சூழலில் அடைக்கலம் தேடி வந்தவர்கள், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில்வாய்ப்புகளுக்காக வந்தவர்கள் - இருவர்க்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. “கள்ளத்தோணி” பயணத்தில்வந்தது மட்டுமே ஒற்றுமை. முதல் காரணத்திற்காக வந்தவர்களைப் போல இரண்டாவது காரணத்திற்காகவந்தவர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆதரவைப் பெறுவதில்லை.
இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து இரண்டாவது காரணத்திற்காக ராமேஸ்வரம் வரும் தர்மதாஸ் - வசந்தி குடும்பத்திற்குத் தொடக்கத்திலிருந்தே, கைது செய்யாமல் விட்டுவிடுகிற காவல்துறை அதிகாரியில்தொடங்கி, சென்னையில் குடியேறும் பகுதியில் வாழ்கிறவர்கள் வரையில் ஆதரவு கிடைக்கிறது.
இப்படித்தான் முடியும் என்று ஊகிப்பது போலவே முடிவடைகிற படங்கள் ஒரு அலுப்பையும் ஏமாற்றத்தையும்தரும். ஊகிப்பது போலவே முடிவடைகிற இந்தப் படம் ஒரு வியப்பையும் நிறைவையும் தருகிறது. ஊகித்தமுடிவை நோக்கிக் கதை எப்படி நகர்கிறது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. எப்படி?
ஒரு குண்டுவெடிப்போடு அந்தக் குடும்பத்தைத் தொடர்புபடுத்தித் தேடலைத் தொடங்கும் காவல்துறையினர்அவர்களை நெருங்க நெருங்க ஒரு புதிர்ச்சுவை இணைகிறது.
நாட்டைவிட்டுப் புலம் பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளான குடும்பத்தின் பின்னணியை, கட்டாயச்சூழலைத் தொட்டுக்காட்டவும் முயலவில்லை. திரைக்கதையில் அதற்கான மெனக்கிடல்களுக்குஇடமளிக்கப்படவில்லை. எல்லாமே எளிதாக நடக்கின்றன. ஆகவே அவர்களோடு ஓர் உணர்வார்ந்த ஈடுபாடுஏற்படுவதற்கு அதிகக் காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.
இரண்டாவது காரணத்திற்காக, வந்தவர்களை எடுத்துக்கொண்டதால் கதையைப் பின்னுவதற்குநகைச்சுவையை இழையாக்கியிருப்பது பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு, மனம்பிடித்துச் சிரிக்க முடிகிற படமாக வந்திருக்கிறது.
சசிகுமார் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பதென்று முடிவு செய்துவிட்டாரா, அல்லது இப்படிப்பட்டபடங்களுக்கு அவரைப் பிடித்துப்போடுகிறார்களா? இணையராக சிம்ரன், மச்சானாக யோகிபாபு, மகன்களாகவரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், அண்டை வீட்டார்களாக வாழும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா, பகவதி, ஆய்வாளர் ரமேஷ் திலக் என அனைவரும் ஈர்க்கிறார்கள். அவர்களில் சிலரின் தனிக் கதைகள்சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகள் வெகுதொலைவு விலக்கிவிடவில்லை.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, சீன் ரோல்டன் இசையமைப்பு, பரத் விக்கிரமன் படத்தொகுப்பு எல்லாமேஇளையோரின் கலைத்தொழில் முதிர்ச்சிக்குச் சான்றளிக்கின்றன. புதிய முயற்சிக்குத் துணைசெய்த மில்லியன்டாலர் தயாரிப்புக் குழுமம் பாராட்டுக்குரியது. அந்தத் துணையை நியாயமான முறையில் பயன்படுத்தியிருக்கும்புதிய இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் வரவேற்புக்குரியவர்.
குடியிருப்புவாசிகள் எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசுவதை விசாரணைக்கு உட்படுத்தும் காவல்துறைஅதிகாரியிடம், “இந்தத் தமிழ் பேசுறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா, இல்லை தமிழ் பேசுறதேபிரச்சினையா,” என்று அந்தப் பெரியவர் கேட்பதில் என்னவொரு சமகால மொழித்திணிப்பு அரசியல் விமர்சனம்! படம் பற்றிய எல்லா விமர்சனங்களிலும் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற காட்சி இது.
மற்றொரு கேள்விதான் மையக்கரு. அதற்கான தேவையை உணர்த்தும் வகையில், அந்தக் குடும்பம்ஒதுக்கப்படுவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இல்லாதது ஒரு பெருங்குறை. இருந்தபோதிலும்சிந்தனையில் பதிகிற கேள்வி அது: “யார் சொன்னது, நீ அகதின்னு?”
யார் சொன்னது, தமிழ் சினிமா உலகத் தரத்திற்குப் போகாதுன்னு???
லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!
பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!
பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து, நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த 40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..
நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.
கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும்...
Discovering the Enigmatic Charms of Jaffna 4D | 3N
Welcome to an extraordinary journey to Jaffna, the cultural and historical hub of Northern Sri Lanka. If you're seeking a destination that blends rich...
பிரான்சில் Insurance : ஆரோக்கியம், வீடு மற்றும் கார் Insurance விரிவான வழிகாட்டி
அறிமுகம்
எதிர்பாராத அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளிலிருந்து தனிநபர்களையும் அவர்களதுசொத்துக்களையும் பாதுகாப்பதில் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சில், பல நாடுகளைப் போலவே, காப்பீடு என்பது நிதித் திட்டமிடலின் இன்றியமையாத அம்சமாகும். ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில்இருந்து அவர்களின் வீடு மற்றும் காரைப் பாதுகாப்பது வரை, பல்வேறு காப்பீட்டுக் கொள்கைகள் பல்வேறுதேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இந்தக் கட்டுரையில், உடல்நலக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு மற்றும் கார் காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பிரான்சில் கிடைக்கும் பல்வேறு வகையான காப்பீட்டுக் கொள்கைகளை ஆராய்வோம்.
மருத்துவ காப்பீடு
பிரான்சில், சுகாதார காப்பீடு என்பது ஒரு அடிப்படை உரிமையாகும், மேலும் நாடு உலகின் சிறந்த சுகாதாரஅமைப்புகளில் ஒன்றாகும். சுகாதார அமைப்பு இரட்டை அடிப்படையில் செயல்படுகிறது: அரசு நடத்தும்"Sécurité Sociale" மற்றும் தனியார் காப்பீடு. பிரான்சில் சுகாதார காப்பீட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே:
a) Sécurité Sociale (சமூக பாதுகாப்பு): Sécurité Sociale என்பது குடியிருப்பாளர்கள் மற்றும்பணியாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கும் தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பாகும். இது மருத்துவர்வருகைகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உட்பட மருத்துவச்செலவுகளின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியது.
ஆ) நிரப்பு மருத்துவக் காப்பீடு (Mutuelle): Sécurité Sociale மருத்துவச் செலவுகளின் பெரும் பகுதியைஉள்ளடக்கும் அதே வேளையில், பல பிரெஞ்சு குடிமக்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும்கூடுதல் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். பல் பராமரிப்பு, ஆப்டிகல் சேவைகள்மற்றும் மாற்று மருத்துவம் போன்ற கூடுதல் கவரேஜை இந்த "முட்யூல்ஸ்" வழங்குகிறது.
c) யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் (CMU-C மற்றும் ACS): குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு யுனிவர்சல்ஹெல்த் கவரேஜையும் (Couverture Maladie Universelle Complementaire அல்லது CMU-C) பிரான்ஸ்வழங்குகிறது மற்றும் மிதமான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு சுகாதாரக் காப்பீட்டைவழங்குவதற்காக Aide à la Complementaire Santé (ACS) வழங்குகிறது.
வீட்டுக் காப்பீடு
"உறுதிப்படுத்தல் குடியிருப்பு" எனப்படும் வீட்டுக் காப்பீடு, பிரான்சில் சட்டப்பூர்வமாககட்டாயமாக்கப்படவில்லை, ஆனால் இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் பெரும்பாலும்குத்தகைதாரர்களுக்கு நில உரிமையாளர்களால் தேவைப்படுகிறது. வீட்டுக் காப்பீடு வீட்டு உரிமையாளர்கள்மற்றும் குத்தகைதாரர்களுக்கு அவர்களின் சொத்து தொடர்பான பல்வேறு அபாயங்களுக்கு எதிராகபாதுகாப்பை வழங்குகிறது. பிரான்சில் வீட்டுக் காப்பீட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே:
அ) தீ மற்றும் இயற்கை பேரழிவுகள்: தீ, வெள்ளம், புயல், பூகம்பம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் ஏற்படும்சேதங்களை வீட்டு காப்பீடு வழங்குகிறது.
b) திருட்டு மற்றும் காழ்ப்புணர்ச்சி: இது திருட்டு, கொள்ளை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படும்சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
c) சிவில் பொறுப்பு: வீட்டுக் காப்பீட்டில் சிவில் பொறுப்புக் கவரேஜ் அடங்கும், பாலிசிதாரரை அவர்கள்தற்செயலாக மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சேதங்களுக்கு எதிராகப் பாதுகாத்தல்.
ஈ) விருப்ப கவரேஜ்: வீட்டு உரிமையாளர்கள் மதிப்புமிக்க பொருட்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் வீட்டுமேம்பாடுகள் போன்ற கூடுதல் கவரேஜையும் தேர்வு செய்யலாம்.
மோட்டார் வாகன காப்பீடு
கார் காப்பீடு அல்லது "உறுதி
ஆட்டோமொபைல்" என்பது பிரான்சில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாகும். இதுமூன்று முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
அ) மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீடு (பொறுப்பு சிவில்): இது பிரான்சில் உள்ள அனைத்துஓட்டுநர்களுக்கும் குறைந்தபட்ச சட்டத் தேவை. காயங்கள் மற்றும் சொத்து சேதம் உட்பட மூன்றாம்தரப்பினருக்கு ஏற்படும் சேதங்களை இது உள்ளடக்கியது.
b) திருட்டு மற்றும் நெருப்புடன் மூன்றாம் தரப்பு பொறுப்பு (Au tiers étendu): இந்த வகையான காப்பீடு, திருட்டு, தீ மற்றும் பிற அபாயங்களை உள்ளடக்கிய அடிப்படைக் காப்பீட்டை விரிவுபடுத்துகிறது.
c) விரிவான காப்பீடு (Tous Risques): இது மிகவும் விரிவான கவரேஜ் ஆகும், விபத்து உங்கள் தவறுதான்என்றாலும், உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
முடிவுரை
எதிர்பாராத ஆபத்துகள் மற்றும் நிதிச் சுமைகளிலிருந்து தன்னையும், ஒருவரின் வீட்டையும், ஒருவரின்வாகனத்தையும் பாதுகாப்பதற்கு பிரான்சில் காப்பீட்டைப் புரிந்துகொள்வது அவசியம். உடல்நலக் காப்பீடுதரமான உடல்நலப் பாதுகாப்புக்கான அணுகலை உறுதிசெய்கிறது, சொத்து தொடர்பான ஆபத்துகளுக்குஎதிராக வீட்டுக் காப்பீட்டுப் பாதுகாப்புகள் மற்றும் கார் காப்பீடு சாலைகளில் மன அமைதியை வழங்குகிறது. Sécurité Sociale முதன்மை சுகாதாரக் காப்பீட்டை வழங்கும் அதே வேளையில், பல தனிநபர்கள் கூடுதல்நலன்களுக்காக நிரப்பு மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்கிறார்கள்.
இதேபோல், வீட்டுக் காப்பீடு சட்டப்பூர்வமாகத் தேவையில்லை என்றாலும், ஒருவரின் சொத்தைப்பாதுகாப்பதற்கான ஒரு விவேகமான தேர்வாகும். பிரான்சில் வாகனம் ஓட்டும் போது, கார் இன்சூரன்ஸ்கட்டாயம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நிலை கவரேஜை வழங்குகிறது.
காப்பீட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்குசிறந்த பொருத்தத்தைக் கண்டறிய பல்வேறு புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களின் சலுகைகளை ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியம். கூடுதலாக, காப்பீட்டு விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் சமீபத்திய புதுப்பிப்புகளைப்பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது, நன்கு அறியப்பட்ட முடிவுகளை எடுக்கவும் உங்களையும் உங்கள்சொத்துக்களையும் திறம்பட பாதுகாக்கவும் உதவும். காப்பீட்டில் முதலீடு செய்வது உங்கள் மன அமைதி மற்றும்நிதிப் பாதுகாப்பிற்கான முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாரிஸ்: தமிழ் அம்மாவை பொலிசில் மாட்டி விட்ட மகள்!
பெற்றோராக இருந்தாலும், 'குழந்தைகளைத் திருத்துகிறேன்' என்ற பெயரில் அவர்களை அடித்தல், சித்திரவதை செய்தல், பாரிஸில் சட்டப்படி குற்றமாகும். பெற்றோருக்கான தண்டனை, குழந்தை தன் ஆசிரியரிடமோ சக நண்பனிடமோ அல்லது பொலிஸாரிடமோ கொடுக்கும் ஒரு...
பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!
பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.
கோடிகளில் புரளும் பிரான்ஸ் தமிழ் ஏஜென்சிகள்!
பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
பிரான்ஸ்: வீடு கனவை எப்படி நிறைவேற்றலாம்?
உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு பணம் வீடு வாங்க நீங்க வரி இல்லாமல் கொடுக்க முடியும்..?
ரியல் எஸ்டேட் சொந்த வீடு வாங்குவதற்கு எனது பிள்ளையின் தனிப்பட்ட பங்களிப்பைக் கட்ட நான் பணம்கொடுத்தால், வரி செலுத்தாமல் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்? இந்த கேள்வி பிரான்ஸில் பலபெற்றோர்களுக்கு உள்ள ஒரு கேள்வியாகும்.
முதலாவது பண நன்கொடை, அதிகபட்சம் 31,865 யூரோக்கள். "உங்கள் சந்ததியினருக்கும்குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும். கொடுப்பவர் 80 வயதுக்கு உட்பட்டவராகவும், பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்
இந்த நன்கொடை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.இந்த தொகையை தந்தையும் தாயும்கொடுக்கலாம், எனவே இது தொகையை இரண்டால் பெருக்குகிறது. இந்த தொகை மொத்த வரி விலக்குமூலம் பயனடைகிறது. இது ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்
இந்தத் தொகை பணமாக வழங்கப்படலாம், அசையும் சொத்து (கார், நகைகள்...), ரியல் எஸ்டேட் மற்றும்பத்திரங்கள் (பங்குகள், பங்குகள்...) ஆகியவற்றிலும் கொடுக்கப்படலாம். "ஒவ்வொரு பெற்றோரும் ஒருகுழந்தைக்கு 100,000 யூரோக்கள் வரை நன்கொடை கட்டணம் செலுத்தாமல் கொடுக்கலாம்.
எனவே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு 200,000 யூரோக்களை உரிமைகளில் இருந்து விலக்குஅளிக்கலாம். இந்த 100,000 யூரோக்கள் குறைப்பு ஒன்று அல்லது பல முறை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, முதல் நன்கொடையின் போது குறைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாவிட்டால், இன்னும் 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பிரான்ஸ் வரிஇணையதளம் நினைவுபடுத்துகிறது.
ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து 200,000 யூரோக்கள் (100,000 x2) மற்றும் 127,460 யூரோக்கள்(31,865 x 4) அவரது நான்கு தாத்தா பாட்டிகளிடமிருந்து ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் நன்கொடை உரிமைஇல்லாமல் பெறலாம்...