அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!
City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025
இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide
City Tamils News Desk | February 24, 2025
As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite Requests
(Pure Tamil Words Only – No Sanskrit Influence)
வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊
In this lesson, we will learn:✅ How to ask for permission...
பாரிஸில் மூடப்படும் முக்கிய வீதி! பயணிகள் அவதி!
பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத்திறப்பது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப்போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று தெரிகின்றது..
தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென்குளூட் (Saint-Cloud) - வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில்
தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல்நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள்அவதானிக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதைஇல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பைஇப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இல்-தூ-பிரான்ஸில் ரயில் விபத்து! ஒருவர் பலி! சேவைகள் ரத்து!
செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய...
பாரிஸில் பிரபலமாகும் 50€ மோசடி! தமிழர்கள் அவதானம்!
தகவல் பாதுகாப்பு எச்சரிக்கை: கார் விண்ட்ஷீல்டில் 50 யூரோ நோட்டு வைக்கப்படுவது தொடர்பான மோசடி முயற்சி குறித்து கவனமாக இருங்கள். தேசிய காவல்துறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மோசடி...
பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!
மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார்.
ஜூலை 8ஆம்...
பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!
பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.
பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.
இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.
அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.
நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர்.
எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்..
நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு!
உங்களுக்கு நடக்கும நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது..
வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை
பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்...உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்...
உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது...ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்..
ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும்.
இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..