இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்கள் கவனம்! எச்சரிக்கை!
இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
இலங்கை முழுதும் வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா ரக நோயால் ஏற்கனவே சென்று இறங்கிய பலர்பாதிக்கப்பட்டுள்ளதக தெரிகிறது.வெறும் காய்ச்சலை தாண்டி கொடுமையான இருமல்,உடலை முறிக்கும்நோவு என 3-5 நாட்கள் உங்களை இருத்தி எழுப்பி போட்டுதான் விடும் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்கருத்துக்களை கூறியுள்ளனர்.
வரட்டு இருமல்,லேசான உடல் சூடு,சளி என்பனவே இதன் அறிகுறிகள் எனவும்,ஏர்போர்ட்,மக்கள் அதிகமாககூடும் இடங்களிலிருந்து உங்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. இத்தகைய இடங்களில் கவனமாகஇருங்கள்..தவிர ஆவி பிடித்தல்,மூலிகை தேநீர்,புளிகஞ்சி,முருங்கை இலை சூப் போன்ற இத்தகையநோய்களுக்கு எந்த பக்கவிளைவுகளமற்ற தீர்வுகளாகும்.
எனக்கு சரியாகும் என அடாத்தா ஊரில் திரிந்து அடுத்தவர்களுக்கு பரப்பி விட்ராதீர்கள்..அது கொடும்பாவம்..அறிகுறிகள் தென்பட்டால் உடனே மேல குறிப்பிட்ட இயற்கை தமிழ் முறை மருத்துவத்தை வீட்டிலேயேகையாளுங்கள்..சிறுவர்கள் என்றால் கொஞ்சம் கவனம் அதிகம் தேவை!
பாரிஸ் தமிழரின் ஐந்து லட்சம் சுவாகா! திருத்த கஷ்டம்!
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.
மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது.
கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்..
இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.
நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...
உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று.
À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent soixante mille roupies lors du...
பிரான்ஸ்: தீ விபத்தில் இரு குழந்தைகள்,தந்தை பலி!
லில் நகருக்கு தெற்கே உள்ள அட்டிச்ஸஸ் (Attiches) என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலைஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ஆண் மற்றும் இரு சிறு குழந்தைகள் உயிரிழந்தனர் என்று மாவட்ட நிர்வாகம்உறுதிப்படுத்தியது.
நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளின்வயது மூன்று முதல் பத்து வரை இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. தீ விபத்துக்கான காரணத்தைக்கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
அட்டிச்ஸஸ் மேயர் லூக் ஃபவுட்ரியின் கூற்றுப்படி, உயிரிழந்த இரு குழந்தைகளும் சுமார் ஆறு மற்றும் எட்டுவயது உடைய ஆண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் அந்தக் குடும்பத்தின் அத்தையிடம் பராமரிப்பில் இருந்தமருமகன் என்று வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது.
முதலில் ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு பணிகள்முடிந்து இடிபாடுகள் தோண்டப்பட்ட பின்னர் மற்றொரு குழந்தையின் உடல் கண்டறியப்பட்டது. மற்ற இருகுழந்தைகளும் குடும்பத்தின் தாயும் தீயில் இருந்து தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் வசிக்கும் மேரி-பியர் லாரன்ட் என்ற பெண், தீ விபத்து குறித்து AFP செய்தியாளரிடம் பேசுகையில், தாய் “தீ! தீ!” என்று கத்தியதையும், வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் கூரை உருகத் தொடங்கியபோதுஅதன் வழியாக தப்பிக்க முயன்றதையும் கூறினார். “நான் உள்ளே சென்று மற்ற மூவரையும் காப்பாற்றியிருக்கவேண்டும், ஆனால் தீ பரவியிருந்தது, ஜன்னல்கள் வெடித்திருந்தன,” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
காலை 3:30 முதல் 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது வேகமாகப் பரவியதாகவும் மேயர் லூக்ஃபவுட்ரி தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தில் இருந்திருக்கலாம்,” என்று அவர் கூறினார். அருகிலுள்ள வீடுகள் இணைந்து இருப்பதால், அக்கம் பக்கத்தினர் அனைவரும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
காவல்துறை, மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் செவ்வாய் காலை வரை பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குழந்தைகள் உட்பட, மருத்துவ மனநல ஆலோசனைக் குழுவினருடன்இடத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் assurance habitation (வீட்டுக் காப்பீடு) மற்றும் protection incendie (தீ பாதுகாப்பு) ஆகியவற்றின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.தீயின் காரணத்தைக் கண்டறிய enquête sur l'incendie (தீ விபத்து விசாரணை) நடைபெறுகிறது. தீவேகமாகப் பரவியதால், பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தில் இருந்திருக்கலாம் என்று மேயர் லூக் ஃபவுட்ரிதெரிவித்தார்.
இந்த துயர சம்பவம் assurance habitation இல்லாததால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைஎடுத்துக்காட்டுகிறது. Détecteurs de fumée (புகை கண்டறிதல் கருவிகள்), extincteurs d'incendie (தீயணைப்பு கருவிகள்), மற்றும் plans d'évacuation d'urgence (அவசர வெளியேறும் திட்டங்கள்) ஆகியவை வீட்டு பாதுகாப்பை உறுதி செய்யும். Assurance incendie...
பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!
பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!
பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து முடித்து பின்னர் தேலதிக பல கற்கைநெறிகளையும்...
பாரிஸை நோக்கி வரும் ரயில் பழுதடைவு! 7 மணிநேர நிறுத்தம்!
இந்த ஞாயிறு காலை லியோனில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஒரு TGV எஞ்சின் பழுது காரணமாக நூவில்-சூர்-சாவோனில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
லியோனில் இருந்து இந்த ஞாயிறு காலை பாரிஸுக்கு செல்லும்...
பாரிஸில் கட்டாயமாகும் பாஸ் நடைமுறை!
ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகப் பாரிஸ் நகரின் சில இடங்களில் வசிப்போர் மற்றும் அந்தப்பகுதிகளுக்குச் சென்று வருவோர் விசேட பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒலிம்பிக் ஆரம்ப விழா நடைபெறவுள்ள செய்ன்...
பிரான்ஸில் குழந்தைகளுக்கான சுகாதார காப்பீடு!
பிரான்சில் சுகாதார காப்பீடு (சுகாதார பாதுகாப்பு தேசிய அமைப்பு - Assurance Maladie) பொதுவாக குழந்தைகளுக்கான அடிப்படை மருத்துவ தேவைகளை உள்ளடக்கியிருந்தாலும், எதிர்பாராத மருத்துவ செலவுகளால் பெற்றோர்கள் நிதிச் சுமையைச் சந்திக்க நேரிடலாம்....
பாரிஸில் மலிவு விலை HLM வீடுகள்!
பாரிஸில் வீடமைப்புச் சந்தையில், betaalbare வீடுகள் (betaalbare vidugal - affordable housing) எப்போதும் ஒரு முக்கிய கவலையாக இருந்து வருகிறது. இந்த தேவையைச் சமாளிக்கும் வகையில், "habitation à loyer modéré"...
பாரிஸில் மூடப்படும் முக்கிய வீதி! பயணிகள் அவதி!
பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத்திறப்பது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப்போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று தெரிகின்றது..
தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென்குளூட் (Saint-Cloud) - வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில்
தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல்நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள்அவதானிக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதைஇல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பைஇப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இல்-தூ-பிரான்ஸில் ரயில் விபத்து! ஒருவர் பலி! சேவைகள் ரத்து!
செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய...