பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நடந்த,நடந்து கொண்டிருக்கின்ற கலவரங்களைஇன்டைக்கு பாரிஸில் பார்த்து கொண்டே வேலை செய்கிற உணவகத்துக்கு வந்த ரஞ்சனை முதலாளி வெறித்துபார்த்து கொண்டிருந்தார்.
வந்தவன் சட்டு புட்டென வழமையான தன் வேலையை பார்க்க தொடங்கிட்டான்..முதலாளி அப்பப்ப அவனைபார்த்து கொண்டேயிருந்தார்..காரணம் அன்று வேலைக்கு வந்த எல்லாரிட்டயும் கடந்த நாளில் நடந்த சூட்டுசம்பவத்தை பற்றி அலம்பி போட்டுதான் விட்டவர்.
அவன் மட்டும் எந்த ரியாக்சனும் இல்லாம அவன்பாடு தன் வேலை உண்டு என இருந்தது முதலாளி மனசைஉறுத்தியிருக்கு,கிட்ட போய் கதையை குடுத்தார்..சுத்தி ஒரே கலவரமா கிடக்கு.. இதுகள பற்றி என்னநினைக்கிறாய் என்று கேட்டார்.நீ ஒரு ரியாக்சனும் இல்லாம இருக்கியே என...
ரஞ்சன் சொன்னன் உதுகள விட பெரிசு பெரிசா ஊர்லயே பாத்திட்டுதான் இங்க வந்தனாங்க... எதாச்சு பெரிசாசெய்யுங்க பிறகு கதைக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்!
பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது.
குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.