விடுப்பு

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது. பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை. உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பாரிஸ் உணவகத்தில் ஈழதமிழர் ரஞ்சனை அறுத்த முதலாளி!

பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நடந்த,நடந்து கொண்டிருக்கின்ற கலவரங்களைஇன்டைக்கு பாரிஸில் பார்த்து கொண்டே வேலை செய்கிற உணவகத்துக்கு வந்த ரஞ்சனை முதலாளி வெறித்துபார்த்து கொண்டிருந்தார். வந்தவன் சட்டு புட்டென வழமையான தன் வேலையை பார்க்க தொடங்கிட்டான்..முதலாளி அப்பப்ப அவனைபார்த்து கொண்டேயிருந்தார்..காரணம் அன்று வேலைக்கு வந்த எல்லாரிட்டயும் கடந்த நாளில் நடந்த சூட்டுசம்பவத்தை பற்றி அலம்பி போட்டுதான் விட்டவர். அவன் மட்டும் எந்த ரியாக்சனும் இல்லாம அவன்பாடு தன் வேலை உண்டு என இருந்தது முதலாளி மனசைஉறுத்தியிருக்கு,கிட்ட போய் கதையை குடுத்தார்..சுத்தி ஒரே கலவரமா கிடக்கு.. இதுகள பற்றி என்னநினைக்கிறாய் என்று கேட்டார்.நீ ஒரு ரியாக்சனும் இல்லாம இருக்கியே என... ரஞ்சன் சொன்னன் உதுகள விட பெரிசு பெரிசா ஊர்லயே பாத்திட்டுதான் இங்க வந்தனாங்க... எதாச்சு பெரிசாசெய்யுங்க பிறகு கதைக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்!