Read More

spot_img

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் (14) வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வீதியை கடக்க முற்பட்ட யாழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | Jaffna Youth Dies In Batticaloa Accident

விபத்தை அடுத்து , ஹயஸ் சாரதியை கைது செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து : ஆண்கள் அவசரப்படுகிறார்கள் என நோகாமல் வீட்டிலுருந்து பலர் இந்த செய்தி பகிர்வுகளின் கீழ் கருத்துகளை இடுவதை பார்த்தோம்… ஆண்கள் தினமும் விரும்பியோ விரும்பாமலோ இந்த மாதிரி ஒரு அவசர சுழற்சிக்குள்தான் இயங்கி வருகிறார்கள்… குடும்பத்தை பார்க்க,உழைக்க,நேரத்தை சிக்கனமாக பயன்படுத்த என்று ஒரு ஆண் அடிமாடாக குடும்பத்தால் சமூகத்தால் மாற்றப்பட்டு அவசர கதியில் இயக்கபடுகின்றான்.. இவ்வாறு ஆங்காங்கே பலியும் கொடுக்கப்படுகின்றார்கள்…

தினமும் எத்தனை பேர் இவ்வாறு விபத்தில் இறக்கின்றனர்,எத்தனை பேர் அருந்தப்பில் தப்புகின்றனர்… இன்னும் எத்தனை பேர் காயப்படுகின்றனர்.. அதென்ன அவசரம் என்று கண்டபடி வாய் விடாதீர்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img