Read More

spot_img

பிரான்சில் 14வயது சிறுவன் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடாத இந்த சிறுவன், கடந்த புதன்கிழமை தனது வீட்டிலிருந்து பெற்றோரின் வாகனத்தை திருடி, தனது தந்தையின் வங்கிக் கார்ட்டையும் எடுத்து சென்று விட்டார். அவரது ஆபத்தான அதிவேக வாகன ஓட்டம்(180கிமீ வேகம்) விபத்தை ஏற்படுத்தி , மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றதால் போலீஸாருடன் ஆபத்தான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட சிறுவன், மொன்பெலியார்ட் காவல் அதிகாரியால் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

சிறுவன் மீது ஆபத்தான அதிவேக வாகன ஓட்டம், மற்றும் பிற வாகனங்களை இடித்து சேதம் ஏற்படுத்தியது, (ஒரு போலீஸ் வாகனமும் அடங்கும்) அத்துடன் மூன்று பேர் இலேசாக காயமடைந்தனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, “அவன் மனமாற்றத்துடன் மன்னிப்பு கேட்டான்” என்று அதிகாரி கூறினார். மற்றும் சிறுவன் நீதிபதியிடம் தான் பாடசாலையில் சில பிரச்சனைகளை சந்தித்ததாகவும் விசாரணையின் போது கூறியதாக செல்லப்படுகின்றது

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img