பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?
மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா?
கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...
பிரான்ஸ் மாப்பிளைக்கு நாமம் போட்ட யாழ்.இளம் பெண்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூகஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த யுவதி, தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன்குடும்பத்தினருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, யுவதிக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரான்ஸைச் சேர்ந்தமணமகனே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு இறுதியில், அவருக்கு பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகனுக்கு பிரான்ஸில் நிரந்தர குடியுரிமை இல்லாததால், யுவதியை சட்டப்பூர்வமாக அழைத்துச் செல்வதில்சிக்கல்கள் எழுந்தன. இதனால், சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக, யுவதி தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக கொழும்பில் சிகிச்சைகள் பெற்றார் மற்றும் பலாலிவீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக மணமகன் கணிசமானபணத்தை செலவிட்டதாக தெரிகிறது. மேலும், விசா சந்தேகங்களைத் தவிர்க்க, யுவதி தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு மணமகனை சந்தித்தபோது, அவர் சில அந்தரங்கப்புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பிரான்ஸ் பயணம் தொடர்ந்து தாமதமான நிலையில், யுவதி உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில்பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் அவருடன் சென்றுவிட்டார். இதன்பின், அனாமதேய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் இந்தக் கணக்குகளை முடக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் புகைப்படங்கள் தொடர்ந்துபரவி வருகின்றன.
இந்தச் சம்பவத்தில், யுவதி தன்னை விட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த மணமகனே இந்த செயலில்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இரு பக்கத்தாலும்தேவைப்படுகின்றன.
உறவுகளில் தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இன்றியமையாதவை. தாமதங்கள் அல்லதுதெளிவற்ற திட்டங்கள் பெண்கள் நம்பிக்கையை பாதிக்கின்றன...இப்படி ஏமாறு முதலாவது பிரான்ஸ்மாப்பிள்ளை இல்லை... எத்தனையோ பேர்,, ஆண்கள் இதே மாதிரி ஏமாந்து இருக்கிறார்கள் இன்னும் இதுதொடரபோகுது...
உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்படிதான் வாழ்க்கை... இவ்வளவுதான் காசு... இத்தனை கஷ்டத்தில்தான் இந்த பணம் உழைக்கப்படுகின்றது என்பதை ஒரு நாளும்மறைக்காதீர்கள்.
கோவத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரின் அனுமதியின்றி பகிர்வது தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலுமாகும். இது மன உளைச்சலையும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும்ஏற்படுத்தும்.நாளை இன்னொரு பெண் உங்களை திருமண செய்ய யோசிக்க கூடும்..ஆகையால்புத்திசாலிதனமாக நடந்து கொள்ளுங்கள்...வீண் கோவமும் வெறியும் உங்களையே அழித்து விடும்... இன்னொரு பெண் செய்த தவறுக்கு ஏன் நீங்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளுகிறீர்கள்..?
தோல்வியில் இருந்து கற்கவும் : ஒரு உறவு முறிந்தால், அதைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்தில் சிறந்தமுடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பழிவாங்குதல் உங்களை மேலும் கீழிறக்கும்.
சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் மன, உடல், மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறமுயற்சியுங்கள். சுயமரியாதையும் நோக்கமும் உள்ளவர்கள் சிறந்த பெண்களை ஈர்ப்பார்கள்.
உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பகிரப்பட்ட இலக்குகளால் செழிக்கின்றன. இவைஇல்லாதபோது, தவறான புரிதல்களும் வலியும் ஏற்படுகின்றன. அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வது போன்றபழிவாங்கல் செயல்கள் வலியை அதிகரிக்கின்றன மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும். சமூகமும் இத்தகைய செயல்களை கண்டிக்க வேண்டும்,
Greater Toronto: தொடர்ந்து விலை குறையும் வீடுகள்!
கிரேட்டர் டொராண்டோ பகுதியில் வீட்டு விற்பனை குறைவு: பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணம்
கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) வீட்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற...
பிரான்சில் ஈஸ்டரில் உயிர்தெழுந்த மனிதர்
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர்.
எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்..
நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு!
உங்களுக்கு நடக்கும நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது..
வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை
பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்...உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்...
உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது...ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்..
ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும்.
இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..
The Secret | இரகசியம் | Book Review in Tamil
இரகசியம் - Book Roast
பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது.
முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது.
மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன..
எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான்.
பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன.
உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான்.
இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை.
இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்..
இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல்,
அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.
காலை எழுந்தவுடன் தவளை | Book Review
காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது.
இன்று ஒரு நாள் காலையிலிருந்து வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது.
உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை..
நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.
உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது.
வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கை
நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்
தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி
உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது.
நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது.
பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் "கும்பல் மனோபாவத்தில்" இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது.
ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது.
நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.
The Cosmic Evolution of Wealth Creation
When an individual decides to embark on the journey to greatness and wealth, that singular thought initiates a colossal process akin to the Big...
The Psychology Behind Billionaires: Unveiling the Big Bank Theory and Universal...
In the realm of immense wealth and the ascent to becoming a billionaire, the psychological underpinnings are as crucial as the strategic maneuvers and...