Kuruvi

187 Articles written
தாயகம்

பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?

மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா? கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...

பிரான்ஸ் மாப்பிளைக்கு நாமம் போட்ட யாழ்.இளம் பெண்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூகஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த யுவதி, தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன்குடும்பத்தினருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, யுவதிக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரான்ஸைச் சேர்ந்தமணமகனே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு இறுதியில், அவருக்கு பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகனுக்கு பிரான்ஸில் நிரந்தர குடியுரிமை இல்லாததால், யுவதியை சட்டப்பூர்வமாக அழைத்துச் செல்வதில்சிக்கல்கள் எழுந்தன. இதனால், சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, யுவதி தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக கொழும்பில் சிகிச்சைகள் பெற்றார் மற்றும் பலாலிவீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக மணமகன் கணிசமானபணத்தை செலவிட்டதாக தெரிகிறது. மேலும், விசா சந்தேகங்களைத் தவிர்க்க, யுவதி தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு மணமகனை சந்தித்தபோது, அவர் சில அந்தரங்கப்புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரான்ஸ் பயணம் தொடர்ந்து தாமதமான நிலையில், யுவதி உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில்பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் அவருடன் சென்றுவிட்டார். இதன்பின், அனாமதேய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் இந்தக் கணக்குகளை முடக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் புகைப்படங்கள் தொடர்ந்துபரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில், யுவதி தன்னை விட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த மணமகனே இந்த செயலில்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இரு பக்கத்தாலும்தேவைப்படுகின்றன. உறவுகளில் தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இன்றியமையாதவை. தாமதங்கள் அல்லதுதெளிவற்ற திட்டங்கள் பெண்கள் நம்பிக்கையை பாதிக்கின்றன...இப்படி ஏமாறு முதலாவது பிரான்ஸ்மாப்பிள்ளை இல்லை... எத்தனையோ பேர்,, ஆண்கள் இதே மாதிரி ஏமாந்து இருக்கிறார்கள் இன்னும் இதுதொடரபோகுது...  உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்படிதான் வாழ்க்கை... இவ்வளவுதான் காசு... இத்தனை கஷ்டத்தில்தான் இந்த பணம் உழைக்கப்படுகின்றது என்பதை ஒரு நாளும்மறைக்காதீர்கள்.  கோவத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரின் அனுமதியின்றி பகிர்வது தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலுமாகும். இது மன உளைச்சலையும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும்ஏற்படுத்தும்.நாளை இன்னொரு பெண் உங்களை திருமண செய்ய யோசிக்க கூடும்..ஆகையால்புத்திசாலிதனமாக நடந்து கொள்ளுங்கள்...வீண் கோவமும் வெறியும் உங்களையே அழித்து விடும்... இன்னொரு பெண் செய்த தவறுக்கு ஏன் நீங்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளுகிறீர்கள்..?  தோல்வியில் இருந்து கற்கவும் : ஒரு உறவு முறிந்தால், அதைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்தில் சிறந்தமுடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பழிவாங்குதல் உங்களை மேலும் கீழிறக்கும். சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் மன, உடல், மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறமுயற்சியுங்கள். சுயமரியாதையும் நோக்கமும் உள்ளவர்கள் சிறந்த பெண்களை ஈர்ப்பார்கள். உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பகிரப்பட்ட இலக்குகளால் செழிக்கின்றன. இவைஇல்லாதபோது, தவறான புரிதல்களும் வலியும் ஏற்படுகின்றன. அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வது போன்றபழிவாங்கல் செயல்கள் வலியை அதிகரிக்கின்றன மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும். சமூகமும் இத்தகைய செயல்களை கண்டிக்க வேண்டும், 

Greater Toronto: தொடர்ந்து விலை குறையும் வீடுகள்!

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் வீட்டு விற்பனை குறைவு: பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணம் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) வீட்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற...

பிரான்சில் ஈஸ்டரில் உயிர்தெழுந்த மனிதர்

தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார் ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார். மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள் உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
வழிகாட்டி
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...
Kuruvi

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est...
Kuruvi

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை...
Kuruvi

பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!  பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான். அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
Kuruvi

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது. பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை. உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
Kuruvi

பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!

குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில  இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களே கவனம்... அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்..