பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!
பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து, நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த 40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..
நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.
கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும்...
பாரிஸில் கடத்தப்பட்ட தந்தை! மகனிடம் கப்பம்!
பாரிஸில் cryptocurrency தொழில்முனைவரின் தந்தை கடத்தல்: விரல் வெட்டப்பட்டு மீட்பு
France-ஐச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை Paris-இல் கடத்தப்பட்டு, சனிக்கிழமை Essonne மாகாணத்தின் Palaiseau-வில் காவல்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டார்....
கனடா,Toronto: வேகமாக பரவும் தொற்று!எச்சரிக்கை!
Toronto, Canada பொது சுகாதார எச்சரிக்கைகள்
Toronto Public Health, downtown Toronto இல் உள்ள Ripley’s Aquarium இல் ஏற்பட்ட சாத்தியமானதட்டம்மை (measles) தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், Health Canada, Seasonique என்ற birth control மாத்திரைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மாத்திரைகள் இல்லாததால், அவற்றை நாடு முழுவதும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள்உடனடியாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார எச்சரிக்கைகள் Toronto மற்றும் Greater Toronto Area (GTA) மக்களுக்கு மிகவும்முக்கியமானவை. தட்டம்மை ஒரு தொற்று நோயாகும், இது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். Seasonique மாத்திரைகளின் திரும்பப் பெறுதல், கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாற்று வழிகளைத் தேட வேண்டிய தேவையைஉருவாக்கியுள்ளது. Toronto Public Health மற்றும் Health Canada ஆகியவை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Toronto மற்றும் Greater Toronto Area மக்களுக்கு, தட்டம்மை வெளிப்பாடு மற்றும் மருந்து திரும்பப் பெறுதல்போன்ற பொது சுகாதார எச்சரிக்கைகளின் மத்தியில், நம்பகமான health insurance Canada பெறுவதுஅவசியமாகும். விரிவான health insurance...
பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!
மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார்.
ஜூலை 8ஆம்...
பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!
பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.
பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.
இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.
அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.
நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்
உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர்.
எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்..
நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு!
உங்களுக்கு நடக்கும நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது..
வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை
பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்...உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்...
உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது...ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்..
ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும்.
இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..
The Secret | இரகசியம் | Book Review in Tamil
இரகசியம் - Book Roast
பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது.
முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது.
மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன..
எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான்.
பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன.
உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான்.
இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை.
இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்..
இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல்,
அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.
காலை எழுந்தவுடன் தவளை | Book Review
காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது.
இன்று ஒரு நாள் காலையிலிருந்து வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது.
உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை..
நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.
உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது.
வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கை
நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்
தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி
உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது.
நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது.
பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் "கும்பல் மனோபாவத்தில்" இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது.
ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது.
நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.