Kuruvi

182 Articles written
செய்திகள்

பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!

தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார் ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார். மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள் உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.

Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!

டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...

கடும் எதிர்ப்புக்குள்ளாகும் அனுரவின் சர்ச்சை கருத்து!

இலங்கையின் ஜனாதிபதி, தேர்தல் பிரச்சாரத்தின் போது, மன்னார் நகரசபைக்கு நிதிஒதுக்கீடு செய்யும் முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அனுர வெளியிட்டுள்ளார். “நிதிஒதுக்குவதற்கு முன், முன்மொழிவு அனுப்புபவர் யார் என்பதை ஆராய வேண்டும். மன்னார் நகரசபை தேசியமக்கள் சக்தியுடன் (NPP) இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்குவோம். ஆனால், வேறு கட்சியுடன்இருந்தால், முன்மொழிவை குறைந்தது பத்து முறை ஆராய வேண்டும். ஏனெனில், அந்த மக்களைப் பற்றிநமக்கு உறுதியில்லை,” என்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து, இலங்கையின் ஆளுமை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜனாதிபதியின் கருத்து: பாகுபாடு காட்டும் அணுகுமுறையா ஜனாதிபதியின் இந்தக் கருத்து, நிதி ஒதுக்கீட்டில் அரசியல் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்என்பதை வெளிப்படுத்துகிறது. தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மன்னார் நகரசபைக்கு எவ்விதஆராய்ச்சியும் இன்றி நிதி வழங்கப்படும் என்பது, அரசியல் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளைசுட்டிக்காட்டுகிறது. மாறாக, பிற கட்சிகளுடன் இணைந்த நகரசபைகளின் முன்மொழிவுகள் கடுமையானஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது, பாகுபாடு காட்டும் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது, தகுதி அல்லதுதேவையை விட அரசியல் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது. மன்னார் மக்களுக்கு ஏற்படும் தாக்கம் மன்னார், இலங்கையின் வடமாகாணத்தில் முக்கியமான பிரதேசமாகும், இது இன மற்றும் அரசியல்சிக்கல்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளைப் பெரிதும்நம்பியுள்ளனர். ஜனாதிபதியின் கருத்து, மன்னார் நகரசபை தேசிய மக்கள் சக்தியுடன் இணையவில்லைஎன்றால், அவர்களின் திட்டங்கள் தாமதமாகலாம் அல்லது நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தைஏற்படுத்துகிறது. இது, உள்ளூர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உட்கட்டமைப்பு, கல்வி, மற்றும்சுகாதார வசதிகளை பாதிக்கலாம். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அச்சுறுத்தல் பொது நிதி ஒதுக்கீடு, வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். ஆனால், ஜனாதிபதியின் கருத்து, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தவர்களுக்கு ஆய்வு இல்லாமல் நிதிவழங்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இது, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம். மாறாக, பிற கட்சிகளின் முன்மொழிவுகளுக்கு அதிகப்படியான ஆய்வு மேற்கொள்ளப்படுவது, தேவையற்றதாமதங்களை ஏற்படுத்தி, பொது நலனை பாதிக்கலாம்.அதே போன்று தேர்தல் கால வெருட்டலாகபார்க்கப்படும். இலங்கையின் அரசியல் பின்னணி தேசிய மக்கள் சக்தி, இலங்கையில் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் ஆதரவைப்பெற்று வருகிறது. ஆனால், ஜனாதிபதியின் இந்தக் கருத்து, அவர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும்நேர்மைக்கான உறுதிப்பாட்டிற்கு முரணாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கலாம். இருப்பினும், இது அரசியல் பிளவுகளைஆழப்படுத்தி, எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பை சவாலாக்கலாம். நெறிமுறை மற்றும் சட்டரீதியான கவலைகள் ஜனநாயக ஆளுமையில், அனைத்து மக்களும் அரசியல் கட்சி பாகுபாடு இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் கருத்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பாகுபாட்டை பரிந்துரைப்பதாக உள்ளது, இதுஇலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், பொது நிதி மேலாண்மை சட்டங்களுக்கும் முரணாக இருக்கலாம். மேலும், இது மக்களின் நம்பிக்கையை குறைத்து, மத்திய மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு இடையிலானஒத்துழைப்பை பலவீனப்படுத்தலாம். இந்தக் கருத்து உண்மையாக இருந்தால், அது இலங்கையின் இறையாண்மைக்கு கடுமையான சவால்களைஏற்படுத்துகிறது. மன்னார் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களின் மக்களும் நியாயமான மற்றும்வெளிப்படையான நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கின்றனர். அரசு, அரசியல் விசுவாசத்தை விட தகுதி மற்றும்தேவையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு, தேசிய மக்கள் சக்திதலைமையிலான அரசு, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அனைத்து மக்களுக்கும் நீதியை உறுதி செய்யவேண்டும்.

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
செய்திகள்
Kuruvi

பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!

மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet  அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார். ஜூலை 8ஆம்...
Kuruvi

பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!

பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.  பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர். இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன. அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
Kuruvi

Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்

கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்  உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர். எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்.. நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு!  உங்களுக்கு நடக்கும  நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது.. வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை  பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்...உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்... உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது...ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்.. ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும். இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..
Kuruvi

The Secret | இரகசியம் | Book Review in Tamil

இரகசியம் - Book Roast  பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது. முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது. மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன.. எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை  தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான். பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன. உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான். இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை. இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்.. இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல், அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.
Kuruvi

காலை எழுந்தவுடன் தவளை | Book Review

காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது. இன்று ஒரு நாள் காலையிலிருந்து  வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது. உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை.. நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.  உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது. வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். 
Kuruvi

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கை

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்  தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி  உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது. நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது. பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் "கும்பல் மனோபாவத்தில்" இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது. ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது. நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.