Kuruvi

181 Articles written
செய்திகள்

Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!

டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...

கடும் எதிர்ப்புக்குள்ளாகும் அனுரவின் சர்ச்சை கருத்து!

இலங்கையின் ஜனாதிபதி, தேர்தல் பிரச்சாரத்தின் போது, மன்னார் நகரசபைக்கு நிதிஒதுக்கீடு செய்யும் முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அனுர வெளியிட்டுள்ளார். “நிதிஒதுக்குவதற்கு முன், முன்மொழிவு அனுப்புபவர் யார் என்பதை ஆராய வேண்டும். மன்னார் நகரசபை தேசியமக்கள் சக்தியுடன் (NPP) இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்குவோம். ஆனால், வேறு கட்சியுடன்இருந்தால், முன்மொழிவை குறைந்தது பத்து முறை ஆராய வேண்டும். ஏனெனில், அந்த மக்களைப் பற்றிநமக்கு உறுதியில்லை,” என்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து, இலங்கையின் ஆளுமை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜனாதிபதியின் கருத்து: பாகுபாடு காட்டும் அணுகுமுறையா ஜனாதிபதியின் இந்தக் கருத்து, நிதி ஒதுக்கீட்டில் அரசியல் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்என்பதை வெளிப்படுத்துகிறது. தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மன்னார் நகரசபைக்கு எவ்விதஆராய்ச்சியும் இன்றி நிதி வழங்கப்படும் என்பது, அரசியல் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளைசுட்டிக்காட்டுகிறது. மாறாக, பிற கட்சிகளுடன் இணைந்த நகரசபைகளின் முன்மொழிவுகள் கடுமையானஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது, பாகுபாடு காட்டும் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது, தகுதி அல்லதுதேவையை விட அரசியல் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது. மன்னார் மக்களுக்கு ஏற்படும் தாக்கம் மன்னார், இலங்கையின் வடமாகாணத்தில் முக்கியமான பிரதேசமாகும், இது இன மற்றும் அரசியல்சிக்கல்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளைப் பெரிதும்நம்பியுள்ளனர். ஜனாதிபதியின் கருத்து, மன்னார் நகரசபை தேசிய மக்கள் சக்தியுடன் இணையவில்லைஎன்றால், அவர்களின் திட்டங்கள் தாமதமாகலாம் அல்லது நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தைஏற்படுத்துகிறது. இது, உள்ளூர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உட்கட்டமைப்பு, கல்வி, மற்றும்சுகாதார வசதிகளை பாதிக்கலாம். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அச்சுறுத்தல் பொது நிதி ஒதுக்கீடு, வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். ஆனால், ஜனாதிபதியின் கருத்து, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தவர்களுக்கு ஆய்வு இல்லாமல் நிதிவழங்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இது, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம். மாறாக, பிற கட்சிகளின் முன்மொழிவுகளுக்கு அதிகப்படியான ஆய்வு மேற்கொள்ளப்படுவது, தேவையற்றதாமதங்களை ஏற்படுத்தி, பொது நலனை பாதிக்கலாம்.அதே போன்று தேர்தல் கால வெருட்டலாகபார்க்கப்படும். இலங்கையின் அரசியல் பின்னணி தேசிய மக்கள் சக்தி, இலங்கையில் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் ஆதரவைப்பெற்று வருகிறது. ஆனால், ஜனாதிபதியின் இந்தக் கருத்து, அவர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும்நேர்மைக்கான உறுதிப்பாட்டிற்கு முரணாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கலாம். இருப்பினும், இது அரசியல் பிளவுகளைஆழப்படுத்தி, எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பை சவாலாக்கலாம். நெறிமுறை மற்றும் சட்டரீதியான கவலைகள் ஜனநாயக ஆளுமையில், அனைத்து மக்களும் அரசியல் கட்சி பாகுபாடு இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் கருத்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பாகுபாட்டை பரிந்துரைப்பதாக உள்ளது, இதுஇலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், பொது நிதி மேலாண்மை சட்டங்களுக்கும் முரணாக இருக்கலாம். மேலும், இது மக்களின் நம்பிக்கையை குறைத்து, மத்திய மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு இடையிலானஒத்துழைப்பை பலவீனப்படுத்தலாம். இந்தக் கருத்து உண்மையாக இருந்தால், அது இலங்கையின் இறையாண்மைக்கு கடுமையான சவால்களைஏற்படுத்துகிறது. மன்னார் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களின் மக்களும் நியாயமான மற்றும்வெளிப்படையான நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கின்றனர். அரசு, அரசியல் விசுவாசத்தை விட தகுதி மற்றும்தேவையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு, தேசிய மக்கள் சக்திதலைமையிலான அரசு, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அனைத்து மக்களுக்கும் நீதியை உறுதி செய்யவேண்டும்.

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
செய்திகள்
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...
Kuruvi

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est...
Kuruvi

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை...
Kuruvi

பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்! காவல்துறை மயக்கம்!

பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!  பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான். அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
Kuruvi

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது. பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை. உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.