செய்திகள்
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரித்தானியா: மாணவர்கள், தொழிலாளர்கள் விசா ! கடும் மாற்றங்கள்!
லண்டன், மார்ச் 14:பிரித்தானிய அரசு விசா விதிகளில் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ளது. இது மாணவர்கள், பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் என அனைத்து முக்கிய பிரிவுகளையும் பாதிக்கிறது. விசா முறைகேடுகளை தடுக்கவும்,...
பிரான்ஸ்: அதிகரிக்கும் வன்முறைகள்! பெரும் சமூக சிக்கல்!
Maurepas (Yvelines), மார்ச் 13:பிரான்ஸின் Maurepas நகரில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கத்திக்குத்து தாக்குதலாக மாறி, 42 வயதுடைய பெண் ஒருவர் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📌 சம்பவத்தின் விவரங்கள்🔹...
பிரித்தானியா: தீவிரமாகப் பரவும் வைரஸ்! எச்சரிக்கை விடுப்பு!
லண்டன், மார்ச் 14:ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் மணல்வாரி அல்லது (measles) மண்ணன் அல்லது தட்டம்மை (Measles) வைரஸ் வேகமாக பரவி வருவதால், பிரித்தானியாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்...
கனடாவுக்கே இந்த நிலையா?
ஒட்டாவா, கனடா – மார்ச் 14:அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின்...
பிரான்ஸ்: 30 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை
இன்று(மார்ச் 14) மாலை முதல் நாடின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Meteo France விடுத்துள்ள அறிவிப்பின்படி, வடக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்பதால், 30 மாவட்டங்களுக்கு...
பிரித்தானியா: உடைமைகள் அனைத்தையும் விற்ற பெண்! காரணம் என்ன?
தனது உடைமைகளை அனைத்தையும் விற்று, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த 33 வயது ராபின் ஸ்வான், கிராமப்புற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். வாழ்க்கைச் செலவின் உயர்வு காரணமாக, வாடகை செலுத்தாமல் இயற்கையைச் சார்ந்து வாழத் தீர்மானித்த அவர்,...