செய்திகள்
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரித்தானியா: மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போர் தற்போது இரண்டாண்டுகளைக் கடந்து நீடிக்கின்றது. இந்தப் போர் விரைவில் முடிவடைவதற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லையென ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக, போரின் தாக்கம் விரிவடையலாம் என கருதப்படும்...
பிரான்ஸ்: குற்றச்செயல்கள் அதிகரிப்பு – அரசின் கடும் நடவடிக்கை!
பிரெஞ்சு கடற்படை, ஆபிரிக்க கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவான OFAST வழங்கிய தகவலின் பேரில் ஒரு முக்கியமான மீட்புப்பணியை மேற்கொண்டது.
சனிக்கிழமை, 15 ஆம் திகதி, பிரெஞ்சு எல்லைக்கு உட்பட்ட...
கனடா: PG Work Permit விதிகளில் மாற்றம்!
கனடாவில் Post-Graduation Work Permit (PGWP) விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2024 நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள்:
பட்டம்...
பிரான்ஸ்: ஆயுதங்களுடன் பாடசாலைக்கு வந்தவர்கள்!
Yvelines மாவட்டத்தின் Poisy நகரில் அமைந்துள்ள Le Corbusier பாடசாலையில், மார்ச் 14, வெள்ளிக்கிழமை நண்பகலில் ஒரு பதற்றமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ விவரம்:பெண் ஒருவரும், அவரது இரு மகன்களும் ஆயுதத்துடன் பாடசாலை வளாகத்துக்குள்...
பிரான்ஸ்: சிறுவனின் தாக்குதல் திட்டம்! மடக்கி பிடித்த பொலிசார்!
பிரான்ஸ் நாட்டின் Vesoul (Haute-Saône) நகரில், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் ஒருவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (PNAT) கைது செய்துள்ளனர்.
கைது தொடர்பான தகவல்கள்இந்த கைது...
பிரான்ஸ்: ஆடை தொடர்பில் சர்ச்சை – மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது!
விளையாட்டு போட்டிகளில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும்பான்மையினரின் ஒப்புதல்!
மக்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விளையாட்டு போட்டிகளில் இஸ்லாமிய கலாச்சார உடையான புர்கா (veil) அணிவதை தடை செய்ய வேண்டும்...