செய்திகள்
பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!
தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார்
ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார்.
மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள்
உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.
Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!
டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரெஞ்ச் வாழ் தமிழ் பெற்றோர் மிக கவனம்! சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!
பிரான்சு வாழ் பெற்றோர்களே உங்கள் மகனோ அல்லது மகளோ இன்றய நாட்களில் இரவு நேரங்களில் வெளிசெல்வதை கவனத்தில் கொள்ளுங்கள்..
வன்முறைகளில் இளம் வயதினர் ஈடுபட்டிருப்பதே காரணம்..அவதானம்.
தவிர வேடிக்கை பார்த்தாலும் இத்தகைய சிக்கல்களில் மாட்டும் சந்தர்ப்பங்கள் உண்டு,கலவரம் செய்பவர்கள்இவர்களை கேடயங்களாக கூட பயன்படுத்தலாம்,பொலிசாருக்கும் கலவரகார ர்களுக்கும் எங்கடபிள்ளைகளையும் பிரித்தறிவது கடினமாக இருக்கலாம்...
நடைமுறை சிக்கல்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக எங்கள் வாழ்க்கைபார்த்து கொள்வதே சிறந்தது.கவனத்திற்கு கொள்க...
அதுமட்டுமல்ல இளம்வயதினர் வனமுறையில் ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டால் பெற்றோருக்கு 30000€ வரை அபராதமும் சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரெஞ்ச் தமிழர்களுக்கு கொதிப்பு வியாதி! மருந்து கொடுத்த ஐநா!
பிரான்ஸ் அதன் காவல்துறைக்குள் காணப்படும் இனவெறி மற்றும் இனப்பாகுபாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பாரிஸில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்ற ஐ....
சூரியப் புள்ளிகளும், இள வயது மரணங்களும் : அறியப்படாத அறிவியல் உண்மைகள்
கதிரவன் கருணையால் உயிர்த்திருப்பது நம் பூமி. ஒளி, வெப்பம், மழை என அனைத்திற்கும் காரணம் அந்த பகலவனே. பூமியில், உயிர்கள் உயிர்த்திருக்கக் காரணமான அந்த சூரியனே, குறிப்பிட்ட காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் இளம்வயது...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...