மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.
இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5 சரியான இலக்கங்களையும், 12 இலக்கங்களில் இருந்து 2 நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கணிக்க வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம், அதிர்ஷ்டசாலி ஒருவர் €52.4 மில்லியன் பரிசை வென்றுள்ளார். அதேநேரம், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 8 நபர்கள் தலா €20,632 வென்றிருந்தனர்.
குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஒரு பிரெஞ்சு நபர் €220 மில்லியன் பரிசு வென்றமை குறிப்பிடத்தக்கது.
கவனிக்க வேண்டியவை
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் உள்ளன. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உதவிக்காக: 09 74 75 13 13 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.