Read More

பிரான்சில் எரிவாயு மீதான வரி உயர்வு


சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சர் மந்திரி ஆக்னஸ் பன்னியர்-ருனாசர், அரசிற்கு வருவாய் சேர்ப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக எரிவாயு மீதான வரியை உயர்த்துவது குறித்து கூறியிருந்த நிலையில், பட்ஜெட் மந்திரி லாரன்ட் செயின்ட்-மார்டின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதனைப் பயனற்றதெனவும் கூறியுள்ளார்.


இரு வேறு மந்திரிகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை, பட்ஜெட் மாற்றம் மற்றும் , எரிவாயு மீதான வரி உயர்வை குறித்த திருத்தங்களை சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்தியிருந்தார், ஆனால் பட்ஜெட் மந்திரி லாரன்ட் செயின்ட்-மார்டின், அக்டோபர் 12 சனிக்கிழமை இதற்குப் எதிர்ப்பு கருத்து தெரிவித்திருக்கின்றார்.

அவர் TF1 தொலைக்காட்சியில் பேசும் போது, எரிவாயு மீதான வரியை உயர்த்துவதை “நான் ஆதரிக்கவில்லை” என்று கூறினார். குறிப்பாக, அவர், இந்த வாரம் முன்வைக்கப்பட்ட நிதி மசோதா எரிவாயு மீதான வரி உயர்வை உள்ளடக்கவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் ம அமைச்சர் மந்திரி, அரசின் வருவாய் உயர்த்தும் முயற்சிகளை வலியுறுத்தி சில குறிப்புகளை முன்வைத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here