Read More

spot_img

பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தின்போது, இளைஞர்கள் குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு, சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் தொடர்புடையவர்களை அடையாளம் காண முயன்று வருகின்றனர்.

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img