Read More

spot_img

பிரான்ஸ்: புயல் அபாயம்: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், Haute-Garonne, Tarn, Hérault, Gard, Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை மற்றும் Pyrénées-Orientales, Aude, Hérault ஆகிய மாவட்டங்களுக்கு கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை:
மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மரங்கள் முறிவு, மின் இணைப்புகள் பாதிப்பு மற்றும் கட்டிடங்களின் சேதங்களை ஏற்படுத்தக் கூடும்.

மக்களிடம் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை:
Pyrénées-Orientales, Aude, Hérault மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டம் உயர்வதால் கடற்கரைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Hérault மாவட்டம்:
இந்த மாவட்டத்திற்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு என இரண்டு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் நிலைமையை மிகப்பெரிய ஆபத்தாக மாற்றியுள்ளது.

நடவடிக்கைகள்:
பொதுமக்களுக்கு அவசர எண்களைக் கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என்பதால், அவசர விளக்குகள் மற்றும் மின் பேட்டரிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

கடற்கரைகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

விவசாயிகள் மற்றும் மிருகங்களை பராமரிக்கும்வர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த அபாய எச்சரிக்கை, பிரான்சின் அவசரச் சேவை மற்றும் மாவட்ட நிர்வாகங்களை அதிதுரிதமாக செயல்படச்செய்துள்ளது.

புயலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மக்களும் அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img