Tuesday, March 3, 2026
No menu items!

பிரான்ஸ்: மூடப்படும் நிலையில் அமெரிக்க நிறுவனம்! 316 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, பிரான்சில் உள்ள அமெரிக்க நிறுவனமான Owens-Illinois (O-I) தனது தொழிற்சாலைகளில் பணியாற்றிய 316 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கண்ணாடி போத்தல் உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ள O-I, மதுபான கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சில் Vergèze (Gard) மற்றும் Vayres (Gironde) என இரண்டு நகரங்களில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.

மொத்தம் 2,200 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், தற்பொழுது Vergèze பகுதியில் 164 பேரையும், Vayres பகுதியில் 81 பேரையும் வேலையிலிருந்து நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேசமயம், தொழிற்சங்கமான CGT, இந்த வேலைநீக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 20% வரி உயர்வை அமுல்படுத்தியது. இந்த வரி உயர்வு மதுபான விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் (Wine) உள்ளிட்ட முக்கிய மதுபானங்கள், விலை உயர்வால் போட்டியில் பின்னடைவு கண்டுள்ளன.
இதன் நேரடி தாக்கமாக, O-I நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடர் கிடைக்காததால் உற்பத்தி அளவை குறைத்து, அதன் விளைவாக ஊழியர்களை நீக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த வேலை இழப்புகள் பிரான்சின் உற்பத்தித் துறையில் நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியுள்ளதுடன், சர்வதேச வர்த்தக கொள்கைகள் உள்நாட்டு வேலைவாய்ப்பில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டாகிறது. மேலும், இந்தத் தீர்மானம் ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும், உள்நாட்டு தொழிற்துறையின் ஸ்திரத்தன்மையிலும் கேள்வி எழுப்புகிறது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

பாரிஸ் வீதியில் முக்கிய மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

பாரிஸ், ரிங் வீதி மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்புக்குட்படுத்தப்படும்: மத்திய அரசு  அழுத்தம்இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது பிரான்ஸ் பாரிஸ் இன் செவ்வாய் காலை அழைக்கப்பட்ட போக்குவரத்து துறை துணை அமைச்சர் (EELV) டேவிட் பெல்லியார்ட், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் மறுநாள், ரிங்சாலையின் அதிகபட்ச வேக வரம்பைக் குறைக்க பாரிஸ் நகர சபையின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். நகரம் மற்றும் மாநிலம் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. புறநகர்பகுதிகளில் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், மேலும் அவர்கள் அதிக சத்தம் மற்றும் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது பொது சுகாதார பிரச்சினை என்று பெரும்பான்மை பிரதிநிதிநினைவுபடுத்தினார்.   மாநில ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டேவிட் பெல்லியார்ட் நம்பிக்கையுடன்இருக்கிறார். "நாங்கள் நிச்சயமாக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற விரும்புகிறோம், மேலும் இந்தநடவடிக்கையின் நன்மைகளைப் பற்றி புதிய போக்குவரத்துத்துறை அமைச்சரை நம்ப வைக்ககலந்துரையாடல்களை நடத்த முடியும் என்று நம்புகிறோம், என்று அவர் கூறினார். 2024 இறுதிக்குள் இந்தநடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img