பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நடந்த,நடந்து கொண்டிருக்கின்ற கலவரங்களைஇன்டைக்கு பாரிஸில் பார்த்து கொண்டே வேலை செய்கிற உணவகத்துக்கு வந்த ரஞ்சனை முதலாளி வெறித்துபார்த்து கொண்டிருந்தார்.
வந்தவன் சட்டு புட்டென வழமையான தன் வேலையை பார்க்க தொடங்கிட்டான்..முதலாளி அப்பப்ப அவனைபார்த்து கொண்டேயிருந்தார்..காரணம் அன்று வேலைக்கு வந்த எல்லாரிட்டயும் கடந்த நாளில் நடந்த சூட்டுசம்பவத்தை பற்றி அலம்பி போட்டுதான் விட்டவர்.
அவன் மட்டும் எந்த ரியாக்சனும் இல்லாம அவன்பாடு தன் வேலை உண்டு என இருந்தது முதலாளி மனசைஉறுத்தியிருக்கு,கிட்ட போய் கதையை குடுத்தார்..சுத்தி ஒரே கலவரமா கிடக்கு.. இதுகள பற்றி என்னநினைக்கிறாய் என்று கேட்டார்.நீ ஒரு ரியாக்சனும் இல்லாம இருக்கியே என…
ரஞ்சன் சொன்னன் உதுகள விட பெரிசு பெரிசா ஊர்லயே பாத்திட்டுதான் இங்க வந்தனாங்க… எதாச்சு பெரிசாசெய்யுங்க பிறகு கதைக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்!
- பிரான்ஸ்: வாடகை கொடுக்காததால் ஓனர் எடுத்த விபரீத முடிவு!
- பாரிஸ்: உணவகங்கள் மூடும் நேரம் மாற்றம் ?
- இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்கள் கவனம்! எச்சரிக்கை!
- பாரிஸ்: ஆரம்ப பாடசாலை முதல் ஆண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
- பாரிஸில் ஆட்களை இறக்கிய ஏஜென்சி கைது! பலரை தேடும் போலீஸ்!