Thursday, March 12, 2026
No menu items!
Home Blog Page 113

The Greatest Secret Chapter – One : Spoiler Review.

0

கோடிக்கணக்கானோர் இருக்கின்ற இந்த உலகில் ஒரு சிலரே பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் தங்களுடைய துன்பங்கள் மற்றும் வாழ்க்கையின் எதிர்மறைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று நிரந்தர மகிழ்ச்சி மற்றும் அமைதியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் இங்கு முற்றிலும் விடுதலை என்பதும் நிரந்தர மகிழ்ச்சி என்பதும் எவ்வாறு வருகின்றது என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வருவதாலோ அல்லது  ஒன்றை விட்டு விட்டு விலகுவதால் வருவதில்லை, இரண்டுக்கும் இடையே ஏற்படுகின்ற சமநிலைத் தன்மை தான் இந்த முற்றிலும் விடுதலை மற்றும் நிரந்தரமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொண்டு வருகின்றது.

மீதி மக்களும் இதைத்தான் ஒவ்வொரு நாளும் தேடுகின்றனர். இந்த சமநிலை தன்மையைத்தான் மக்கள் தேடி வருகின்றனர். வரலாறு நெடுகிலும் விஞ்ஞானிகள் தீர்க்கதரிசிகள் மதத் தலைவர்கள் ஆகியோர் இந்த ரகசியத்தை தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வைத்துள்ள போதிலும் நம்மில் பெரும்பாலானோர் இந்த மாபெரும் கண்டுபிடிப்பு குறித்து ஏதும் அறியாதவர்களாக இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது.நாம் எல்லோருமே அதனை நோக்கியே பயணப்பட்டு கொண்டுள்ளோம்.ஆனால் அந்த உண்மையான சமனிலை தன்மையில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் பயணத்தில் உண்மை சமனிலை தன்மைக்கு அருகில் இருப்பதால் பின்னால் வரும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது,அதே போல் பயணத்தில் மற்றவர்கள் பின்னால் இருப்பதால் முன்னாள் இருப்பவர்தான் எல்லாமும் என்று பின்னால் வருபவர்களும் நினைக்க கூடாது.முன்னால் இருப்பவர் பின்னால் இருப்பவர் புரிந்து கொண்டவர்கள்,புரியாதவர்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் நாம் தேடி பயணப்பட்டு கொண்டிருக்கும் உண்மை சமனிலைதன்மை.

சில மதங்களில் இந்த பேருண்மை பிற மதங்களில் கூறப்பட்டுள்ளது போல் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்படவில்லை என்றாலும் அனைத்து மதங்களின் அடிநாதமாக விளங்குவது இந்த உண்மை தான் மாபெரும் உண்மை. நம் எல்லோரின் பார்வையும் படும்படியாக தான் வைக்கப்பட்டுள்ளது நம் சுவாசத்தை விட மிக அருகிலேயே அது நமக்கு இருக்கின்றது ஆனால் நாம் அதை தவறவிட்டு விடுகிறோம் என்று நினைப்பதே தவறான விடயம்

 நாம் அதை பார்க்கும் அதை உணர்ந்து கொள்ளும் தூரத்தில் இன்னும் எமது பயணம் எமது அதன் அருகில் வரவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். அந்த இரகசியத்தை அந்த சமநிலைத் தன்மையை நோக்கி ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளும் படியோ அல்லது அந்த உண்மைக்கு அருகில் வர வேண்டிய தூரம் இன்னும் வரவில்லை. ஆனால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும் அதைத்தான் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கு எதுவுமே இரகசியம் அல்ல ஒரு ரகசியத்தை ஒளித்து வைக்க சிறந்த இடம் அதை எல்லோர் பார்வையிலும் படும்படியாக ஓர் இடத்தில் வைக்க வேண்டும் என்று புராதான பாரம்பரியம் அறிந்து வைத்திருக்கின்றனர் என்று சொல்வது தவறு இங்கு எதுவுமே ரகசியம் இல்லை இங்கு எல்லோருக்கும் படும்படியாக எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அது இருக்கின்றது. அது குறித்த ஆழமான விழிப்புணர்வும் எல்லோருக்கும் இங்கு உண்டு. ஆனால் அவர்கள் அதற்கு பயணப்படும் பயண தூரத்தை வைத்துக் கொண்டு அந்த ரகசியம் தொடர்பான அறிவு இல்லை என நம்மால் முடிவெடுக்க முடியாது.

எல்லோருமே அந்த ரகசியத்தை நோக்கியும் அந்த உண்மையை நோக்கிய பயணப்பட்டு கொண்டிருக்கிறோம்.இங்கு அந்த பயணம் மட்டுமே நடைபெற்று கொண்டுள்ளது.

நாம் இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறவிட்டு வந்திருக்கிறோம் என்று நினைப்பது தவறு நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உண்மையை நெருங்கி வந்திருக்கின்றோம். 

நம்முடைய பிரச்சனைகளால் நம்முடைய வாழ்க்கை எனும் நாடகத்தின் காட்சிகளால் உலக நடப்புகளால் ஏற்படும் கவன சிதறல்களால் நம் பயணம் தடைப்படவில்லை.இங்கு  எந்த வாய்ப்பையும் நாம் தவறவிடவில்லை.அவரவருக்குரிய வாய்ப்புக்கள் பயணத்தில் அவரவருக்கு கிடைத்து கொண்டுள்ளது.

எந்த ஒரு ரகசியங்களும் உங்கள் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடப் போவதில்லை.எந்த  ஒரு கண்டுபிடிப்பும் நம்மை துன்பங்களில் இருந்து விடுவித்து நிறைந்த மகிழ்ச்சியுடன் வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் இங்கு எதுவுமே நம்மை புரட்டிப் போடப் போவதில்லை. ஒவ்வொரு மாற்றங்களுமே மாறாத ஒன்றை சுற்றித் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அந்த மாறாத ஒன்றை நோக்கிதான்  நாம் பயணப்பட்டு கொண்டுள்ளோம்.

எங்கள் மாற்றங்களிடையே ஒரு மாறாத தன்மை இருக்கின்றது என்ற விழிப்புணர்வு கிடைக்கும் வரை நம் பயணம் தொடரும்.

எதிர்மறை சிந்தனைகள்,மனதளர்ச்சி,கவலை,மனகாயம்,துன்பங்கள் என உங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் எல்லாமே இரகசிய பயணத்தில் உங்களின் எரிபொருட்கள்.அவற்றை எரித்து அதன் சக்தியை கொண்டு நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுள்ளோம்.எமது நீண்ட பயணத்தில் நாம் கடந்து வரும் எல்லாமே நமக்கான எரிபொருட்கள்தான்.

நம்முடைய துன்பங்களுக்கான அடிப்படை காரணமாக நம்முடைய உண்மையான இயல்பு குறித்து அறியாமை என்று சொன்னால் தவறு 

அந்த அறியாமையால் ஏற்படும் துன்பங்களை எரிபொருளாக கொண்ட அந்த இயல்பை அறியும் பொருட்டு  நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்றே எடுத்து கொள்ள வேண்டும்.

நம்மை குறித்து நாம் நம்பிக் கொண்டு இருக்கின்ற ஒன்று உண்மை அற்றதாக இருப்பதால்தான் நாம் துன்புறுகிறோமா?  

உண்மையற்று இருப்பதுதான் தான் மாற்றத்துக்கு உள்ளாகும் மாற்றத்தின் மூலமே எமது பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கு நமது வாழ்க்கையில் வருகின்ற விஷயங்கள் குறித்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இருக்கா இல்லையா என்பதை இங்கு முக்கியமே 

இல்லை ஏனென்றால் நாங்கள் எல்லோருமே ஒரு பயணத்தில் ஒவ்வொரு தூரத்தில் பயணப்பட்டு கொண்டுள்ளோம். அது எம்மை எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு 

கொண்டு சேர்த்துக் கொள்ளும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். நாம் இங்கு எதுவுமே செய்ய தேவை இல்லை அந்தப் பயணம் காலத்தை தாண்டி நிறைவு பெறும் நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.மாறி கொண்டிருக்கும் உலகியல் காரணிகள் உங்கள் வாழ்வில் குறைய குறைய நீங்கள் மாறாத ஒன்றை உங்கள் பயணத்தில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

நம்முடைய உண்மையான இயல்பை புரிந்து கொள்வது என்றால்? எது என்னுடைய உண்மை இயல்பு? அந்த உண்மையை எது , யார் புரிந்து கொள்ள வேண்டும்?  நாம்தான் உண்மை இயல்பாக இருக்கும் போது எதற்கு நாம் அதனை புரிந்து கொள்ளவேண்டும்? அந்த புரிந்துணர்வு எம்மிடம்தானே எப்போதும் உண்டு.நாமே மருந்தாக இருக்கின்ற போது எமக்கு எதற்கு மருந்து? 

நம்முடைய வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியின்மை,அதிருப்தி,இன்னல்கள் அனைத்தும் நாம் யார் என்ற அறியாமை அல்லது தெளிவின்மை காரணமாக விளைபவை அல்ல..நாம் யார் என்ற அறியாமை குறித்த தெளிவை உண்டாக்க உதவுபவை.நாம் இங்கு எவற்றிலிருந்தும் விடுபட தேவையில்லை.எல்லாமுமாக நாமே இருக்கின்றோம்.

நீங்கள் துன்பங்கள் என நினைத்து கொண்டிருப்பவையில் இருந்து தற்காலிகமாக விடுபடுபட்டு விலகி வந்திருப்பது மகிழ்ச்சி இல்லை.ஆனால் அதிகமாக அதுவே மகிழ்ச்சியாக தோன்றும்.இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் தெளிவு உங்கள் பயணத்தில் அடையும் போதே உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி பிறக்கும்.அந்த அமைதியே பேரானந்தம்.இன்பமும் துன்பமும் எமது பயணத்தில் இரு கரைகள்.கரைகள் தொடரும் வரை பயணம் தொடரும்.இலக்கை அடைந்த பிறகே கரைகள் காணாமல் போகும்.இங்கு பயணமும் நீங்கள்தான்,கரைகளும் நீங்கள்தான்,இலக்கும் நீங்கள்தான்.

பெளதீக பொருட்கள் மூலம் மகிழ்ச்சி நீடித்திருக்காது என்பது தவறு.பொருட்கள் அழிவதால் மகிழ்ச்சியும் மறைந்து போகவில்லை.எம்மிடம் மகிழ்ச்சி மாறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அந்த மாறாத மகிழ்ச்சியை மாறி கொண்டிருக்கின்ற ( அழிந்து கொண்டுள்ள ) பெளதீக பொருட்கள் மூலம் நிரப்பி கொள்கிறோம்.அல்லது நிலையற்ற அழியும் தன்மையுடைய பெளதீக பொருட்கள் ஒவ்வொன்றாக தம்மை அழித்து நமக்கு தம்மால் ஆன மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கின்ற என்று எடுத்து கொள்ளலாம்.

உண்மையான சுயத்தை நோக்கி உலகம் பயணப்பட்டு கொண்டுள்ளது. உண்மையான சுயத்திலேயே மகிழ்ச்சி உள்ளது.உலகம் உண்மையான சுய மகிழ்வாக உள்ளது.எந்த பக்கம் போனாலும் அதற்கு அது கிடைக்கதான் போகின்றது.பிறகு என்ன கவலை?

நாம் நம்முடைய உண்மையான இயல்பிலேயே இருக்கின்றோம்.எல்லையற்ற எம் இயல்பை எல்லையுடைய உலகத்தால் தடுக்க முடியாது.நாம் யார் என்ற நிலையான சுயவிழிப்புணர்வில்தான் நாம் இருக்கின்றோம்.அது நமக்கு போதும்.அழிய போகும் மாறி கொண்டிருக்கின்ற உடல்,மனத்திற்கு அது தேவையில்லை.உடல் மனதிற்கு அந்த விழிப்புணர்வு கிடைக்காது,தவிர அவை எம்மை அதை அடைவதில் இருந்து தடுத்து கொண்டும் இல்லை.அவற்றால் தடுக்கவும் முடியாது.ஏனென்றால் நாம் ஏற்கனவே நாமாக சுய விழிப்புணர்வில்தான் இருக்கின்றோம்.

எல்லோருமே அதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் உள்ள எல்லா பயங்களுக்கும் மூல பயமான மரண பயத்தில் இருந்து ஒருவர் விடுபடும் போதே நீங்கள் யார் என்று முழுமையை உணர்ந்து கொள்ளுவதற்கான முதல் படியாகும்.

ஏனென்றால் உடல்,மனதால் உண்டாகும் விம்பம் நீங்கள் இல்லை.ஆனால் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகி அழிய போகும்,அழிந்து கொண்டுள்ள இயல்பை கொண்ட உடலும் மனமும் உங்களின் உண்மை இயல்பில் இருந்து உங்களை விலக்கி வைக்க முடியாது.உங்களை உங்கள் இயல்பில் இருந்து விலக்கி வைக்க முயல்வதால்/தடுப்பதால்தான் அவை அழிகின்றன.

நீங்கள் முழுமையானவர் என்ற உண்மை இயல்பை நீங்கள் பயங்களுக்கு எல்லாம் மூல பயமான மரண பயத்தில் இருந்து விடுதலை அடைவதன் மூலமே அடையமுடியும்.அதன் பிறகு உங்களுக்கு எதுவுமே தேவைப்படாது.

நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை,உணர வேண்டும் என நினைப்பது தவறு.உண்மை உங்களிடத்தில்தான் உண்டு.உங்களை நோக்கி நீங்கள்தான் பயணப்பட்டு கொண்டுள்ளீர்கள்.முழுமை தொடர்பான உணர்வு உங்கள் எல்லோருக்கும் இருப்பதால்தான் நாம் எல்லோரும் அதனை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். 

உங்களை எதுவும் பிடித்து இழுத்து கொண்டும் இல்லை,நீங்கள் எதையும் ஈர்த்து கொண்டும் இல்லை.உங்களிடத்தில் எல்லாம் உண்டு.இங்கு மாறாத மகிழ்வை நோக்கிய பயணம் என்பது கூட மாறி கொண்டிருக்கின்றவைகளில் இருந்து வரும் இன்ப துன்பங்களின் விம்பம்தான் அவைதான் மாறாத முழுமையான மகிழ்ச்சியான நம்மில் இருந்து மாறி மாறி மறைந்து கொண்டிருக்கின்றன.

நன்றி.

நான் ஒரு முட்டாளுங்க! இந்த புத்தகத்தை படிக்க முதல்ல…

0

ஆம் நான்தான் நானே தான். என்னடா இவள் கூட எதையோ எழுத தொடங்கி விட்டாள்  என்று நினைக்க தோன்றும் என்று நம்புகின்றேன். என் பேனையை எடுத்து வெள்ளைக்காகிதத்தில் இதை எழுதத்தொடங்கும் போதே என் தங்கை இவளிற்கு  ஏதோ நடந்துவிட்டது புத்தகமும் பேனையுமாக இருக்கின்றாள் என்று சிரித்து என்னை விமர்சித்துக்கொண்டு இருந்தாள்.

அதென்னவோ தெரியவில்லை ஒரே ஒரு புத்தகம்தான் எல்லாவற்றிக்கும் காரணம். என்ன செய்வது கா/பொ/த உயர்தர பரீட்சைக்கு பின்பு பெரிதாக எழுதுவதும் இல்லை என்னிடம் உடைமையாக  ஒரு பேனை கூட இல்லை.

தரம் 5 படிக்கும் எனது குட்டி தங்கையிடம் பேனை கடன் கேட்டுத்தான் இதை எழுதவே ஆரம்பிக்கின்றேன். அவள் அந்த நீல நிற பேனையை தரும்போது ஏதோ ஒன்றரைகோடி பணம் கடன் வாங்கி இருக்கின்றாய்  என்ற ஒரு முக தோற்றத்துடன் என்னை பார்த்து விட்டு கவனமாக கையாளு  என்று சற்று விறுமாப்புடன் தந்தாள். இருப்பினும் அந்த பேனை என் வாழ்க்கை போல எழுதுவதற்கு சற்று சோம்பேறித்தனமாக காணப்பட்டது. இதை மீண்டும் மாற்றிவிட்டு வந்து மிகுதியை தொடரலாம் என தோன்றுகின்றது. மீண்டும் என் அன்பு தங்கையிடம் சென்று ஒரு கருப்பு நிற பேனாவை கடன் வாங்கி வந்து எழுத ஆரம்பிக்கின்றேன்.

முன்பு  சொன்னது போலவே ஒரே ஒரு புத்தகம் தான் இப்பொழுது நான்  இங்கு கிறுக்கிய வண்ணம் இருப்பதற்கு காரணம். புத்தக வாசிப்பு அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்க்கியமான ஒன்றுதான். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நாம் அனைவரும் பாலர் பாடசாலை தொடக்கம் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்த வண்ணமே காணப்படுகின்றோம் . அப்போது தெரியவில்லை நாம் பேசுவதற்கும் எழுதுவதற்க்கும்  வாசித்த புத்தகங்கள் பெரும் துணையாக நிற்கின்றன  என்று. “வசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” என்று சும்மாவா சொன்னார்கள். எப்பொழுதும் தொலைபேசியும் கையுமாக இருந்த என்னை இப்படி பேனையும் காகிதமுமாக மாற்றியதை எண்ணி அந்த அற்புத புத்தகம் கொஞ்சம் கர்வம் கொள்ளத்தான் செய்கின்றது. ஏனெனில் எனது அம்மா சொல்லியே திருந்தாத என்னை  ஒரு செம்மஞ்சள் நிற புத்தகம் மாற்றி விட்டது.

என்னடா புத்தகம் புத்தகம் என்கின்றாளே  அதைப்பற்றி கூறுகிறாள் இல்லை என்று சற்று சினமுடன் இருந்திருப்பீர்கள். என்ன செய்வது என்னுடைய கிறுக்கல் சற்று பெரிய இடத்தை பெற வேண்டும் என்பதற்காக புத்தகம் பற்றிய விமர்சனம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இப்பொழுதும்  சொல்லவில்லை எனில் என் வீடு தேடி வந்து நீங்கள் என்னை அடிக்ககூடும். சரி சொல்கின்றேன். அந்த அற்புதபுத்தகம்  நான் சென்ற வேலைத்தளத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். ஆம் ஒரு பிரசித்தி பெற்ற கனேடிய எழுத்தாளர் , தலைமை பேச்சாளர் மற்றும்  வழக்கறிஞர் ரொபின் சர்மாவால் எழுதப்பட்டது. அவரை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். அவருடைய ஒரு அற்புத களஞ்சியம் என்றே சொல்லலாம் “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி”  என்ற புத்தகம். ஆனால்  ஒன்று இந்த புத்தகத்தை வாசித்தவரிடம் ஏதோ ஒரு வகையில் ஒரு சிறு மாற்றம் கூட வராமல் இருந்திருக்காது. அப்படியொரு அருமையான கற்பனைக்காட்சி நிறைந்த புத்தகம்.

மனித வாழ்க்கை என்றால் என்ன? எதை நோக்கி நம் வாழ்க்கை  சென்று கொண்டு இருக்கின்றது? எதை நோக்கி செல்ல வேண்டும் என்று கற்பனைகளால் உலக உண்மையை உணர்த்திய ஒரு புத்தகம். வாழ்க்கையை எவ்வாறு நாம் கொண்டு செல்ல வேண்டும் நமது வாழ்க்கைக்கு எது மிகமுக்கியமானது என்பது பற்றிய  ஒரு சிறப்பானபுத்தகம்  இது. இப்புத்தகத்தை படிக்கும் போது நாம் வேறு ஒரு உலகத்திற்கு  செல்வது போன்ற ஒரு பரவச நிலையை அடைய முடிகிறது. இரு மனிதர்களின் உரையாடல் தொடர்பு மூலம் இக்கதையை கொண்டு சென்றது சிறப்பாக காணப்படுகின்றது.ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கை தத்துவங்களால் நிறைந்த ஒரு சிறப்பு மிக்க கற்பனை கதையாக காணப்படுகின்றது . இதில் மேலைத்தேய கலாசாரம், கீழத்தேய கலாசாரம், அவர்களின் வாழ்க்கை சூழல்கள் என எப்படி ஒருவரது வாழ்க்கை சிக்கல் மிக்கதாக இருந்து  சந்தோஷம்  நிறைந்த ஒன்றாக மாறுபடுகின்றது என்பது பற்றிய ஒரு சிறப்பான   திருப்புமுனையை கொண்ட படைப்பம்சமாக காணப்படுகின்றது. நாம் அனைவரும் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான சூழலிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட  ஒரு வெளியுலக உணர்வை தருவதாக இப்புத்தகம் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

இப்புத்தகத்தை படிப்பதற்க்கு முதல் என் வாழ்க்கை வேறானது. படித்து முடிந்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட  ஒன்றாக காணப்படுகின்றது. முன் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையற்ற வாழ்க்கையுடன் காணப்பட்டேன் என்றே கூறலாம் . என்ன செய்வது? என்ற குழப்பம் தினமும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குழப்பமான மனநிலை இப்புத்தகத்தை வாசித்த பின்பு ஒரு ஒழுக்கமான பயிற்சி, ஒரு நாளை எவ்வளவு பயன்மிக்கதாய் மாற்றியமைக்கலாம் என்ற திட்டமிடல் என்று ஒரு நாளில் நான் செய்யும் வேலைத்திட்டம், நேர முகாமைத்துவம் என எனக்குள் பெரும் மாற்றமே ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் நான்  சரியான கோபக்காரி ஏனோ நான் புத்தக வாசிப்பை தொடர்ந்ததாலோ என்னவோ எனது கோபம் எங்கே சென்று விட்டது என்று எனக்கே தெரியவில்லை. இப்படி என் வாழ்க்கை ஒரு புத்தகத்தால் மாற்றப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இப்பொழுது முதல் இருந்ததை காட்டிலும் மிகவும் சந்தோஷமாக  உள்ளேன்.

எனது தந்தை எப்போதும் சொல்லுவார் நிறைய புத்தகங்களை வாசி என்று . அப்பொழுது  புரியவில்லை  இப்பொழுது  புரிகின்றது அதன் தாக்கம் என்னை பெரிதும் மாற்றி உள்ளதை. நான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளேன் என்று சிந்திக்க வைக்கின்றது . முன்பு எனது அப்பா கூறும்போது பொருட்ப்படுத்தாமல் விட்டுவிட்டு  இப்பொழுது ஆச்சரியப்பட்டு நிற்கின்றேன். தத்தமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம். மகிழ்ச்சியை விரும்பாதவர் எவரும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்று நம்புகின்றேன்.என்னுடைய புத்தக தாகத்தை  தூண்டுவதற்க்கும்  முக்கியமான ஒன்றாக இப்புத்தகம் எனக்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றது.

நன்றி.

தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்

0

ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில் எதுவாக இயங்கி கொண்டுள்ளோம் என நாம் நினைத்தாலும் நாம் உண்மையில் ஒரு ஒழுங்கில்தான் இருக்கிறோம்.

அந்த ஒழுங்கு சிலவேளை எமக்கு சாதகமற்ற,எமக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனாலும் இங்கு சரிகள் தவறுகள் தாண்டி நாம் ஒரு ஒழுங்கில்தான் இயங்கி கொண்டுள்ளோம்.நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம் இதுதான்.

ஒழுங்காக படிக்கவில்லை என ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்கு சொல்லலாம்.ஆனால் அந்த பிள்ளை ஒழுங்காக டீவி பார்த்து கொண்டிருக்கலாம் அல்லது படிப்பு தவிர்ந்த ஏதோ ஒன்றின் ஒழுங்கில்தான் இயங்கி கொண்டிருக்கும்..அங்கு ஒரு ஒழுங்கு / ஒழுக்கம் இருக்கின்றது.

இந்த இயங்கியல் அடிப்படையை நாம் விளங்கி கொள்ளும் போது இலகுவாக எமது ஒழுங்கு ஒழுக்கம் சார் பிரச்சினைகளை இலகுவாக எதிர்கொள்ள முடியும்.நாம் எப்படியும் ஒரு ஒழுங்கில்தான் இயங்குகிறோம் அதில் எமக்கு பிடித்ததை கொண்டு வருவது என்பது இலகு..ஆனால் ஒழுங்கில் இயங்குவது தெரியாமல் நமக்கு சாதகமற்றவைகளை செய்து கொண்டு நாம் ஒழுங்கில்லாமல் ஒழுக்கத்தை தவற விட்டுகொண்டு இருக்கிறோம் என நினைப்பது தவறு,

நமது உண்மை இயல்பை அறிந்து கொள்ளும் போதே எமக்கு எம்மை பற்றிய விழிப்புணர்வுகளை நாம் அதிகமாக பெற்று கொள்ள முடியும்.நாம் ஏற்கனவே இயங்கி கொண்டுள்ள ஒழுங்கை முதலில் கண்டறிய வேண்டும்..அதில் எமக்கு சாதகமற்றவகைகளை சாதகமானவைகளை கொண்டு ஒவ்வொன்றாக பிரதியிட்டு கொள்ளவேண்டும்.இதன் மூலம் எமது ஒழுங்கு ஒழுக்கத்தை சரியாக பேண முடியும்..

எமது வாழ்வில் ஒழுங்கை ஒழுக்கத்தை பேண சில விதிமுறைகள்..

1.முடிந்தவரை சகல வழிகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ கற்று கொள்ளுங்கள்

2.உங்கள் வாழ்க்கையை எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள்

3.ஒவ்வொரு நாளும் போதுமானளவு நேரம் தனிமையில் செலவிடுங்கள்

4.பேச்சு,சிந்தனை,உணவு,தூக்கம் அளவாக வைத்திருங்கள்.

5.அதிகாலையில் துயில் எழுங்கள்

6.உடல் களைத்து வேலை செய்யுங்கள்

போதை காட்டும் பாதை : தமிழர்களின் இயங்கியல் இரகசியம்!

0

யாழ் உட்பட வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைகாலமாக போதை பழக்கங்களும் அதனால் வரும் விளைவுகளும் சில பல மரணங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இது குறித்த தமது அச்சத்தையும் உடனடி தீர்வுகளையும் முன்வைத்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் எமக்கும் இருக்கும் சமூக பொறுப்புடைமையை கருத்தில் கொண்டு நாம் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

போதை போதை போதை… அப்படி என்றால் என்ன? சாதரணமாக எங்கோ இருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்படும் போதைபொருட்களுக்கு இங்குள்ள இளைஞர்கள் அடிமையாகிவிடுகின்றனர்,இதனால் சமூக குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதே பரவலான குற்றசாட்டு! ஆனால் இதனை தாண்டி யாரும் பார்ப்பது இல்லை.நாம் பார்ப்போம்.

நவீன உளவியல் ஆய்வுகளின்படி போதைக்கு அடிமையாகிறது என்பது ஒரு Higher intelligence Sign, எமது பிரதேசங்களில் அதிகமாக அடிமையாகிறார்கள் என்றால் அவர்கள் Higher intelligence வகையை சேர்ந்தவர்களாகதான் இருக்க வேண்டும்… இனத்தின் மரபணுவில் இருக்கும் அந்த அதி உயர் நுண்ணறிவுக்கு ஏற்ற புற வாழ்க்கையை சமூகத்தில்/உலகத்தில் உருவாக்க முடியாத போதே அவர்கள் மனம் அந்த அதியுயர் நுண்ணறிவை சமப்படுத்த போதை பொருள் போன்றவற்றை நாடுகின்றது.

அக புற வாழ்க்கையில் ஏற்படும் சமனிலையற்ற தன்மையே (physical,emotional Instability) இத்தகைய போதை பழக்கங்கள்,வீண் சண்டைகள் போன்றவற்றுக்கு காரணம்.அதுவும் அதியுயர் நுண்ணறிவு கொண்ட இனத்தில் என்றால் இது இன்னும் அதியுயர்வாக இருக்கும்.

இந்த போதைபழக்கத்தை புனர்வாழ்வுக்கு அனுப்பியோ,பிடித்து உள்ளே வைத்தோ திருத்த முடியாது.ஏன் என்றால் இந்த இனத்தின் கூட்டு சக்தி (energy level) அதிகம்… ஒரு இனத்தை பலவீனபடுத்த இவை பயன்படுகின்றது என்று சிலர் பயப்பிடுகின்றனர்.இல்லை.. இனம்தான் இவர்களை பயன்படுத்தி கொள்கின்றது.எப்படி? சாதரணத்தை விட ஒரு இனத்தில் அதிகரித்த போதைபழக்க பாவனை,அந்த இனம் அதியுயர் நுண்ணறிவு தளத்தில் இயங்குகின்றது என்பதற்கு சான்று கொடுக்கின்றது.அவர்களது அதியுயர் நுண்ணறிவு மனதே இவற்றை இந்த இனத்தை நோக்கி கவர்ந்திழுத்துள்ளது.

இனத்தின் குறிப்பிட பகுதி வேகமாக அடிமையாகி தங்களை அழித்து கொள்ளும்,ஒரு பகுதி அழித்து கொள்ளுவதை வைத்து பாடங்களை கற்றுகொள்ளும் அதை வைத்து மீதி இனம் ஆக்கத்தை கொண்டு தளைக்கும் [Transformation].இது இயற்கை விதி, உலகின் பெரிய சாதனைகள்,செயல்பாடுகளை செய்யும் நோக்கில் பரந்து விரிந்திருக்கும் எமது இனத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்களுக்காக இந்த தயார்படுத்தல்கள் இருக்கலாம்.

பல்லாயிர ஆண்டு வரலாற்றில் இதுதானே நடந்திருக்கின்றது.இனத்தில் ஒரு பகுதி அடிமையாகி உலகெங்கும் வேலைசெய்யும் இன்னொரு பகுதி இருந்த இடத்தில் இருந்து உலகத்தை ஆண்டுகொள்ளும்.இந்த இனத்தில் பலவீனர்களுக்கு இடமில்லை,உங்களால் முடிந்தால் அரியணை ஏறிகொள்ளலாம்,

சாதாரண சிறு வேலைகள் செய்து உலகில் வாழும் இனத்திற்கு இந்த மாதிரி பெரிய Transformation தேவைபடாது.அது அவர்களுக்கு கிடைக்காது,ஏன் என்றால் அந்த பாரத்தை மற்ற இனங்களால் தாங்க முடியாது. வரலாறில் பெரிய பெரிய சம்பவங்களை செய்த,செய்ய போகின்ற இனத்திற்கே இந்த மாதிரி பக்க விளைவுகள் இருக்கும்.அவையும் நல்லதுக்குதான்.

ஆக ஒரு பழமைவாய்ந்த ஆற்றல்வாய்ந்த இனம் தனது அதிக நுண்ணறிவுதன இயல்பால் கவரும் சில தீய காரணிகளை கொண்டு தனது சிறு பகுதியை அழித்து மீதி பகுதியை கூர்மையாக்கி கொள்ளும் இயற்கையான ஒரு செயற்பாடாக எடுத்து கொள்வதே சரியான ஒரு முறையாகும். போதைபழக்கத்தை திணித்து இனத்தை அழித்து அடக்கி விடலாம் என்று நினைப்பவர்களும்,போதையால் இனம் அழிந்துவிடும் என கண்ணீர்விடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது..

போதைபழக்கத்தை இந்த இனத்தின் அதியுயர் நுண்ணறிவு அதற்கு உண்டான அக புற காரணிகளையும் சேர்த்து அதுவாக கவர்ந்து கொண்டது. அதற்கு தெரியும் அதை எப்படி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று..அவ்வாறுதான் அது மிகசரியாக பயன்படுத்தி இயங்கி கொண்டுள்ளது.

யாரும் இறந்தகாலம்,எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம். பெரிதாக ஒன்றும் நடந்து கொண்டு இல்லை. ஆக இங்கு ஒரு இனம் இயங்கிகொண்டுள்ளது அவ்வளவுதான்