City News
சோதிட சேவை
உங்கள் மகன்,மகள் மருத்துவர்கள் ஆவார்களா?
1980 to 1990 –கால கட்டங்களில் தமிழக நகர்புறங்களில் வாழ்ந்து வந்த அத்துனை மேல்தர மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் இலட்சியம், குறிக்கோள் ஒரே மாதிரியாக இருந்தது. அது “நான் எனது மகனை Doctor –ஆக்கிகாட்டுவேன். Doctor –ஆக்காமல் ஓயமாட்டேன்” என்பதே.
அச்சமயம் இதை இலட்சியம் என்பதை விட ஒருவிதமான “வெறி” என்றே சொல்லலாம். இதற்கு காரணம்நிச்சயம் “பணமாக” இருக்க முடியாது. ஏன் எனில், அக்காலத்தில் 7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்அளவிற்கு பணம் படைத்த மேட்டுக்குடி குடும்பத்தினர்கள் கூட தன் மகனை மருத்துவம் படிக்க வைக்கஇலட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தளவிற்கு ஒரு மருத்துவருக்கு சமூக அங்கீகாரம் மற்றும் உயர்தர மரியாதை அளிக்கப்பட்டது. Dotor சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ற எண்ணம் வெகுசன மக்களின் மனதில் புரையோடிக் கிடந்தது. ஒருசபையில் “மருத்துவர்” நுழைந்ததுமே அத்துனை பேருமே எழுந்து நின்றுவிடுவார்கள்.
இது 80 – 90 களில் நடந்த உண்மை நிலவரம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டங்களில்“மருத்துவத் தொழிலுக்கு” இந்தளவிற்கு மரியாதை இல்லை. அது ஒரு ரெண்டாந்தர சேவைத் தொழிலாகவேமக்கள் பார்த்தார்கள். ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்கே தேடிவந்து வைத்தியம் பார்ப்பார்.
மருந்தை தானே தயாரித்து புண்களை சுத்தம் செய்து பராமரிப்பார். காரணம் மருத்துவம் ஒரு சேவையாகபார்க்கப்பட்ட காலம் அது. சோதிடத்தில் சூரியன் என்பது மருத்துவம் (அ) அரசியலைக் குறிக்கும். சந்திரன்என்பது சேவையைக் குறிக்கும். நாட்டு வைத்தியம் இவ்விரண்டு கர்மாவின் கலவைகளாக இருந்த காலம் அது.
ஆனால் இதே (சூரி+சந்) கர்மவினை பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மருத்துவராக” பரிணமிக்க வில்லை. மாறாக“Nurse” என்ற கீழ்நிலை மருத்துவப் பணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது. காரணம் அப்பணியில்சூரியனோடு சந்திரன் என்ற சேவைக் கர்மவினையும் கலந்திருந்தது. பிரிட்டிஷ் ஆங்கில மருத்துவர்கள்கீழ்நிலை மருத்துவப் பணியை நேரடியாக களத்தில் இறங்கி செய்யமாட்டார்கள்.
எமது தனித்துவமான ஜோதிட சேவைகளை பெற கீழுள்ள வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளுங்கள்...
எல்லா பணிகளுக்குமே அவருக்கென வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது தலைமை மருத்துவம்என்பது Policy & Decision Making என்ற அளவிற்கு மிக உயர்வாக கருதப்பட்டது. இதன் அடிப்படையில்கவர்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பில் செல்லும் போது அரசாங்க ஆணைகளில் கையெழுத்திடுவதுமற்றும் அரசாங்க காரியங்களுக்கான மேற்பார்வை செய்வது என்ற அளவில் ஆங்கில மருத்துவர்களின் பணிஇருந்தது.
அச்சமயம் அரசு அதிகார மையத்தின் 3 –வது படிநிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 1947...
சிறப்பு கட்டுரை
பிரான்ஸ்: வீடு கனவை எப்படி நிறைவேற்றலாம்?
உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு பணம் வீடு வாங்க நீங்க வரி இல்லாமல் கொடுக்க முடியும்..?
ரியல் எஸ்டேட் சொந்த வீடு வாங்குவதற்கு எனது பிள்ளையின் தனிப்பட்ட பங்களிப்பைக் கட்ட நான் பணம்கொடுத்தால், வரி செலுத்தாமல் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்? இந்த கேள்வி பிரான்ஸில் பலபெற்றோர்களுக்கு உள்ள ஒரு கேள்வியாகும்.
முதலாவது பண நன்கொடை, அதிகபட்சம் 31,865 யூரோக்கள். "உங்கள் சந்ததியினருக்கும்குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும். கொடுப்பவர் 80 வயதுக்கு உட்பட்டவராகவும், பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்
இந்த நன்கொடை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.இந்த தொகையை தந்தையும் தாயும்கொடுக்கலாம், எனவே இது தொகையை இரண்டால் பெருக்குகிறது. இந்த தொகை மொத்த வரி விலக்குமூலம் பயனடைகிறது. இது ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்
இந்தத் தொகை பணமாக வழங்கப்படலாம், அசையும் சொத்து (கார், நகைகள்...), ரியல் எஸ்டேட் மற்றும்பத்திரங்கள் (பங்குகள், பங்குகள்...) ஆகியவற்றிலும் கொடுக்கப்படலாம். "ஒவ்வொரு பெற்றோரும் ஒருகுழந்தைக்கு 100,000 யூரோக்கள் வரை நன்கொடை கட்டணம் செலுத்தாமல் கொடுக்கலாம்.
எனவே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு 200,000 யூரோக்களை உரிமைகளில் இருந்து விலக்குஅளிக்கலாம். இந்த 100,000 யூரோக்கள் குறைப்பு ஒன்று அல்லது பல முறை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, முதல் நன்கொடையின் போது குறைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாவிட்டால், இன்னும் 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பிரான்ஸ் வரிஇணையதளம் நினைவுபடுத்துகிறது.
ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து 200,000 யூரோக்கள் (100,000 x2) மற்றும் 127,460 யூரோக்கள்(31,865 x 4) அவரது நான்கு தாத்தா பாட்டிகளிடமிருந்து ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் நன்கொடை உரிமைஇல்லாமல் பெறலாம்...