Tuesday, March 3, 2026
No menu items!

City News

பாரிஸில் முடங்கிய குறிப்பிட்ட ரயில் சேவை!

03 மே 2024, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஷோசி-லெ-ரோய் RER நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கிய RER C சேவை பாதிக்கப்பட்டது. விபத்தில் ஓட்டுநர் வாகனம் பாலத்திலிருந்து தடம் மாறி தண்டவாளங்களில் விழுந்தது. RER C ரயில் காரை மோதியது, ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இல்லை. விபத்து விசாரணைக்காக குறிப்பிட்ட தண்டவாள பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. விரிவான...

பாரிஸில் கண்டறியப்பட்ட கொடும் தொற்று! அவசர சிகிச்சை!

பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண்  ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள்  மேற்கு ஆபிரிக்காவின்...

இனி 49€ இல்லை 2.45€ தான்! பிரான்ஸ் தமிழர் அவதானம்!

எச்சரிக்கை! SNCF லாப வாய்ப்புகள் அட்டைக்கான புதிய மோசடி முயற்சி 03/05/2024 சமீப காலங்களில், எஸ்என்சிஎஃப் லாப வாய்ப்புகள் அட்டையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை திருட முயற்சிக்கும் மோசடி கும்பல்கள் எஸ்என்சிஎஃப் லாப வாய்ப்புகள் அட்டை , €49 க்கு விற்பனை செய்யப்படும் இந்த அட்டை, தொடருந்து டிக்கெட்டுகள் மற்றும் பல சேவைகளில் தள்ளுபடிகளைப் பெறுவதற்கான வசதியை...

பாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

பாரிஸ்: ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கத்தியால் ஆயுதபாவிப்பட்ட சந்தேக நபரை நான்கு தோட்டாக்கள் மூலம் செயலிழக்க வைத்தனர் பாரிஸ் நகரின் 13வது மாவட்டத்தில், பிரான்சுவா-மிட்டர்ராண்ட் மெட்ரோ நூலகத்திற்கு அருகில் இன்று அதிகாலை 12:25 நடைபெற்ற சம்பவத்தில், கத்தியால் ஆயுதபாவிப்பட்ட ஒரு மனிதர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சந்தேக நபர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளின் ரோந்து வாகனத்தை தாக்க...

பிரான்ஸில் தமிழர் வாழும் பகுதியில் நடந்த கொடூரம்!

Seine saint denisல் கொலையாக சந்தேகப்படும் வழக்கில், முந்தைய வன்முறை குற்றச் செயல்களுக்காக அறியப்பட்ட 33 வயதான ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். . ரோஸ்-டெஸ்-வென்ட்ஸ் பகுதியில் உள்ள பிளேஸ் ஜுபிடர் பகுதியில் அதிகாலை 1:00 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்தது. குடியிருப்பாளர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்தபோது நபர் ஒருவர் சுருண்டு கிடப்பதைக்...

இல்-தூ-பிரான்சை தாக்கிய மழை,இடி

புல்லட்டின் அளவு ஆலங்கட்டி மழை , வெள்ளம், மூடப்பட்ட விமான நிலையங்கள், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட வீதிகள், ஈபிள் கோபுரத்தில்மின்னல் தாக்கம்...  புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் குறிப்பிடத்தக்க மோசமான வானிலைதாக்குதலுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட அபோகாலிப்டிக் காட்சிகள்.  புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழைமற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. Val-d'Oise  பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. மே 1 புதன் அன்று Météo France முழு பாரிஸ் பிராந்தியத்தையும் செம்மஞ்சள் எச்சரிக்கையில்வைத்திருந்தது.  Ile-de-France வீதிகள் A1 இல், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று X Météo Express இல்தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..

பிரான்ஸில் முக்கிய கட்டுபாடு அமுல்…

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கானவழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர்மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது. மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது. 13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம்.  ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப்பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, தனிமை, மன அழுத்தம் போன்ற ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது. இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர்வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடைசெய்யலாம். -அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதுசவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாகஉள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப்பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்" என்று ஆணைக்குழுவில்இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களைஅணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பாரிஸ் தமிழ் வர்த்தகருக்கு நடந்தது என்ன..? தீயாய் பரவும் செய்தி!

பாரிஸ் தமிழ் வர்த்தகர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிரும் புதிருமான இருகருத்துக்கள் பாரிஸ் வாழ் தமிழர்களிடையே பரவி வருகின்றது.. அதில் ஒன்று சுவிசில் இருந்து வந்து மேற்படி வர்த்தகர் வீட்டில் தங்கி நின்ற சொந்தகார பிள்ளை மீதானபாலியல் சேட்டை எனவும் இதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு கதை!  இன்னொரு புறம் குறித்த வர்த்தகர் மனைவி இவற்றை மறுத்திருப்பதாகவும் கடை கொழுவல் மற்றும் சில பணவிவகாரங்களை இலக்கு வைத்து தனது கணவன் மீது அபான்டமான குற்றசாட்டை போட்டு சிறையில் தள்ளும்நோக்கோடு திட்டமிட்டு சுவிஸ் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்னொரு கதை பரவிவருகின்றது.. சிக்கல் என்னவென்றால் தமிழர்கள் பிரிந்து பிரிந்து காணப்படுவதாலும் தமது வேலை வீடு என்று இருப்பதால்தகவல்கள் எடுப்பது கஷ்டமாக உள்ளது...மேற்குறித்த தகவல்கள் ஒரு இணையம் ஒன்று முதலில் வெளியிட்டதுபின்னர் அனைவரும் அதனை பிரதி செய்து பரப்பியிருக்கிறார்கள்.. உண்மையில் இப்படி ஒன்று நடந்ததா என்றுஉறுதிப்படுத்த கூட போதுமான தகவல்கள் பாரிஸில் இல்லை...

பாரிஸில் பயங்கர தீ விபத்து! மூவர் பலி!

திங்கள் முதல் செவ்வாய் கிழமை இரவு பாரிஸின் 2வது மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு, பாரிஸில் உள்ள பவுலேவார்ட் டெஸ் இத்தாலியன்ஸில் உள்ள படிக்கட்டு கிணற்றில் தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பாரிஸ் நகர மையத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம். திங்கள் முதல் செவ்வாய் கிழமை அதிகாலை...

பிரான்ஸில் கடுமையாகும் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி கொடுப்பனவு!

தகவல் பாரிசியான் : july 1 முதல் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு விதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேலையின்மைக்கான இழப்பீடு வழங்குவதற்கு முன் காத்திருக்கும் காலத்தை அதிகரிப்பது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிர்வாகிகள் முதலில் பாதிக்கப்படலாம். வேலைவாய்ப்பின்மை காப்பீடு சீர்திருத்தம் குறித்த நடவடிக்கைகளை அரசு மெதுவாக துரிதப்படுத்தி வருகிறது. "வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை" ஊக்குவிப்பதற்காக பிரதம மந்திரி...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img