Sunday, April 12, 2026
No menu items!

City News

பாரிஸில் மூடப்படும் முக்கிய வீதி! பயணிகள் அவதி!

பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத்திறப்பது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப்போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று தெரிகின்றது.. தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென்குளூட் (Saint-Cloud) - வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில் தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.  அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல்நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள்அவதானிக்கப்பட்டுள்ளன. வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதைஇல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பைஇப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிசில் மூடப்படும் மெற்றா RER ரயில் நிலையங்கள்

ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு ஒருவாரம் முன்பாகப் பாரிஸ் நகரின் மையத்தில் 17 க்கும் மேற்பட்ட மெற்றோ மற்றும் RER ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அவற்றை விட வேறு சில நிலையங்கள் மாதக்கணக்காக மூடப்பட்டிருக்கும். தொடக்க விழா மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள நகரின் மையத்தில் பயங்கரவாத எதிர்ப்புப்...

இல்-தூ-பிரான்ஸில் ரயில் விபத்து! ஒருவர் பலி! சேவைகள் ரத்து!

செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய ரயில் நிலையம் மற்றும் Marne-la-Vallée இடையே நடைபெற்றது. பாதிப்பு: இந்த விபத்து காரணமாக, வடக்கு மண்டலத்திற்கு செல்லும் மற்றும் வடக்கு மண்டலத்திலிருந்து வரும்...

பாரிஸில் பிரபலமாகும் 50€ மோசடி! தமிழர்கள் அவதானம்!

தகவல் பாதுகாப்பு எச்சரிக்கை: கார் விண்ட்ஷீல்டில் 50 யூரோ நோட்டு வைக்கப்படுவது தொடர்பான மோசடி முயற்சி குறித்து கவனமாக இருங்கள். தேசிய காவல்துறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மோசடி முயற்சி குறித்து எச்சரிக்கிறது. இது நீண்ட காலமாக இருந்து வரும் மோசடி தந்திரம். இதில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் கார் விண்ட்ஷீல்டில்...

பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!

மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet  அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார். ஜூலை 8ஆம் தேதி முதல் காணாமல் போன எமில் என்ற சிறுவனின் எலும்புகள் மார்ச் 30 சனிக்கிழமை Haut-Vernet  கிராமத்திற்கு அருகில் கண்டறியப்பட்டதாக...

பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!

பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.  பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர். இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன. அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏற்கனவே கோரியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற கோரி விவசாயிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

பிரான்ஸில் தனது சொந்த குடும்பத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்..

13 வருடங்கள் ஏழு சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 52 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். Saranda உள்ள Mouthiers-sur-Boëme இல் வசிக்கும் 52 வயதான நபர், சிறார்களை பல கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற செயல்களிள் ஈடுபட்டமையால் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று Angouleme அரசு...

பாரிஸில் FlixBus இல் இரவில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

Bruxelles உம் Paris உம் இணைக்கும் பேருந்தில் இரவு நேரத்தில் சென்ற ஒரு இளம் பெண் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 வயது ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் அந்த நபருக்கு திங்கள்கிழமை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் வயது பெண் கூறியது தனது தொடையில் ஒரு...

பாரிஸில் முடக்கப்பட இருக்கும் 15 ரயில் பாதைகள் !!

பாரிஸில் 2024 திட்டமிடப்பட்ட 15 போக்குவரத்து வழிகளில், அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் வடக்கின் Saint-Denis - Pleyel மற்றும் தெற்கின் Orly இல் உள்ள 15 பாதைகள் மூடப்படும் எனவும்.RER E பகுதியிலிருந்து Nanterre வரை மற்றும் பயன்பாட்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட சில Tram பாதைகள் மட்டுமே பொதுமக்களுக்குத்...

பாரிஸ்: குண்டாக இருந்த அதிகாரியிடம் வம்பிழுத்தவருக்கு நேர்ந்த கதி!

காற்பந்தாட்டத்தின் Mali அணிக்கு எதிராக Côte d'Ivoire வெற்றி பெற்றதை அடுத்து சனிக்கிழமை மாலை பாரிஸ் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். வழக்கம் போல், ரசிகர்களிள் ஒருவர் தலைநகரின் தெருக்களில் வாகனம் ஓட்டும் போது ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்து கேலி செய்தது அவரை கோபப்படுத்தி உள்ளது. கோபம் அடைந்த அதிகாரி...
- Advertisement -spot_img

Latest News

Lik திரை விமர்சனம்: வித்தியாசமான காதல் முயற்சி!

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன்...
- Advertisement -spot_img