Monday, March 2, 2026
No menu items!

City News

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய குடிவரவு சட்டம் நடைமுறை!!

பிரான்ஸில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் journal official ஆல் புதிய குடிவரவு சட்டம் வெளியாகி உள்ளது. இந்த குடிவரவு சட்டத்தின் படி புலம்பெயர்ந்தவர்களின் வருகையை கட்டுப்படுத்துதளும் அவர்களின் நிலவுகையை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது. இதனை 5 விதமாக பிரித்து உள்ளனர். வேலையினை பொருத்த வரை உணவகம், கட்டிடங்கள்,வீட்டு வேலை பனி செய்பவர்களுக்கு வதிவிட...

பிரான்ஸில் தடைபட போகும் ரயில் பாதைகள்!!

நாளை RER B ரயில் பாதைகள் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனது தாக்கம் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியை அதிகம் பாதிக்கிறது.CGT-RATP ஏழு மாத வேலைநிறுத்த அறிவிப்பை முன்னரே தாக்கல் செய்தது. அரசாங்கதிடம் இருந்து பல நாட்களாக மேலதிக அறிவிப்பு வராததால் இன்று முழு RER B ரயில்...

பிரான்ஸீல் 75 வயது தாத்தாவின் காம லீலைகள்!!

பிரான்ஸில் Haute-Loire எனும் பிரதேசத்தை சேர்ந்த 75 வயது காந்தவியல் நிபுணர்கு பாலியல் வன்கொடுமைகள் என்ற குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.இக் குற்ற சாட்டு 19 வயது இளம் பெண்ணால் இப் புகார் தாக்கல் செய்யப்பட்டது. பொலிசார் மேற்கொண்ட விசாரனையில் தங்களுடைய பிறப்புறுப்பு மற்றும் மார்பைத் தொட்டதாக மேலும் 13 பெண்கள்...

பிரான்ஸ்: பரிதாப நிலையில் குழந்தையின் சடலம்!!! தாயின் முட்டாள்தனம்

பிரான்ஸில் Dordogne இல் உள்ள Bosset கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர். திங்கட்கிழமை ஜனவரி 29 அன்று ஆறு வயது குழந்தை தனது காரால் தெரியாமல் நசுக்கப்பட்டு குழந்தை இறந்தது.அதிர்ச்சியில் இருக்கும் சிறுவனின் தாய்கு இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை. நடத்தப்பட்ட விசாரணையின் படி குழந்தையும் மற்றும் அவரது தாயார் பள்ளியிலிருந்து காரில்...

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? பாரிஸ், பிரான்சில் ரியல் எஸ்டேட் மிகவும் பிரபலமான இடங்களில்  ஒன்றாகும். பாரிஸில் ஒரு வீட்டைவாங்குவது சிறந்ததா அல்லது வாடகைக்கு எடுப்பது சிறந்ததா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இந்தகட்டுரை அதன்  நன்மை தீமைகளையும் ஆராய்கிறது. பாரிஸில் வீடு வாங்குதல் : Achat Maison à Paris பாரிஸில் ஒரு வீட்டை வாங்குவது ஒரு பெரிய முதலீடாகத் தோன்றலாம், ஆனால் அது குறிப்பிடத்தக்கநன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட கால நிலைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இதுகருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விருப்பமாகும். சொத்து மற்றும் முதலீடு | Propriété et Investissement  வீடு வாங்குவது என்பது ரியல் எஸ்டேட் வைத்திருப்பதாகும். வாடகை செலுத்துவதற்கு பதிலாக, உங்கள்சொந்த சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். ரியல் எஸ்டேட் கடன் | Crédit Immobilier ரியல் எஸ்டேட் கிரெடிட் என்பது உங்கள் வாங்குதலுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முக்கிய அம்சமாகும் . பிரான்சில் குறைந்த வட்டி விகிதங்கள் இந்த விருப்பத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. அதிக சுதந்திரம்: உரிமையாளராக, உங்கள் இடத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. உங்கள்விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் வீட்டை தனிப்பயனாக்கலாம். பாரிஸில் அபார்ட்மெண்ட் வாடகை | Location Appartement...

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை ஒரு கட்டத்தில் தவற விட்டுவிடுவீர்கள்,மக்கள் போனால்,தொழில் இல்லை.ஆகவே தொழில் மட்டும் கவனம் வையுங்கள்,காசு தானாக உங்களை தேடி வரும்.அப்படி வருவதே...

பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!  பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான். அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img