Wednesday, March 4, 2026
No menu items!

💁 ஊர் விடுப்பு

பிரான்ஸ் மாப்பிளைக்கு நாமம் போட்ட யாழ்.இளம் பெண்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூகஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த யுவதி, தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன்குடும்பத்தினருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, யுவதிக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரான்ஸைச் சேர்ந்தமணமகனே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு இறுதியில், அவருக்கு பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகனுக்கு பிரான்ஸில் நிரந்தர குடியுரிமை இல்லாததால், யுவதியை சட்டப்பூர்வமாக அழைத்துச் செல்வதில்சிக்கல்கள் எழுந்தன. இதனால், சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, யுவதி தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக கொழும்பில் சிகிச்சைகள் பெற்றார் மற்றும் பலாலிவீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக மணமகன் கணிசமானபணத்தை செலவிட்டதாக தெரிகிறது. மேலும், விசா சந்தேகங்களைத் தவிர்க்க, யுவதி தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு மணமகனை சந்தித்தபோது, அவர் சில அந்தரங்கப்புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரான்ஸ் பயணம் தொடர்ந்து தாமதமான நிலையில், யுவதி உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில்பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் அவருடன் சென்றுவிட்டார். இதன்பின், அனாமதேய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் இந்தக் கணக்குகளை முடக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் புகைப்படங்கள் தொடர்ந்துபரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில், யுவதி தன்னை விட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த மணமகனே இந்த செயலில்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இரு பக்கத்தாலும்தேவைப்படுகின்றன. உறவுகளில் தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இன்றியமையாதவை. தாமதங்கள் அல்லதுதெளிவற்ற திட்டங்கள் பெண்கள் நம்பிக்கையை பாதிக்கின்றன...இப்படி ஏமாறு முதலாவது பிரான்ஸ்மாப்பிள்ளை இல்லை... எத்தனையோ பேர்,, ஆண்கள் இதே மாதிரி ஏமாந்து இருக்கிறார்கள் இன்னும் இதுதொடரபோகுது...  உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்படிதான் வாழ்க்கை... இவ்வளவுதான் காசு... இத்தனை கஷ்டத்தில்தான் இந்த பணம் உழைக்கப்படுகின்றது என்பதை ஒரு நாளும்மறைக்காதீர்கள்.  கோவத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரின் அனுமதியின்றி பகிர்வது தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலுமாகும். இது மன உளைச்சலையும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும்ஏற்படுத்தும்.நாளை இன்னொரு பெண் உங்களை திருமண செய்ய யோசிக்க கூடும்..ஆகையால்புத்திசாலிதனமாக நடந்து கொள்ளுங்கள்...வீண் கோவமும் வெறியும் உங்களையே அழித்து விடும்... இன்னொரு பெண் செய்த தவறுக்கு ஏன் நீங்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளுகிறீர்கள்..?  தோல்வியில் இருந்து கற்கவும் : ஒரு உறவு முறிந்தால், அதைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்தில் சிறந்தமுடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பழிவாங்குதல் உங்களை மேலும் கீழிறக்கும். சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் மன, உடல், மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறமுயற்சியுங்கள். சுயமரியாதையும் நோக்கமும் உள்ளவர்கள் சிறந்த பெண்களை ஈர்ப்பார்கள். உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பகிரப்பட்ட இலக்குகளால் செழிக்கின்றன. இவைஇல்லாதபோது, தவறான புரிதல்களும் வலியும் ஏற்படுகின்றன. அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வது போன்றபழிவாங்கல் செயல்கள் வலியை அதிகரிக்கின்றன மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும். சமூகமும் இத்தகைய செயல்களை கண்டிக்க வேண்டும், 

இலங்கையின் முன்னேற்றம் – ஒரு குரங்கின் பார்வை!

ஒரு காலத்தில், பரந்த பசுமையான காட்டில், சில குரங்குகள் ஒன்றாக கூடி, வாழைப்பழங்களை மென்று கொண்டு, தங்கள் தொலைதூர உறவினர்கள்—மனிதர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன. "நீங்கள் அவங்களை சமீபத்தில் பார்த்தீர்களா?" என்று வயதான குரங்கு போபோ தலைகீண்டு கேட்டது. "நம்மைப் போலவே மரங்களில் பூந்தோன்றாக ஊர்ந்து, பழங்களை உண்டுக் கொண்டே இருந்தார்கள். இப்போது? உடை அணிந்து,...

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8

பாரிஸில் தமிழ் பெண் பலாத்காரம்! நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது. குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.

பிரான்சில் சொந்த மனைவி மீது கை வைத்த கணவர் சூட்டில் பலி

Eure துறையில் உள்ள லூவியர்ஸ் நகரில் இரவு நேர காவல் பணியின் போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் முதற்கட்ட தகவலின்படி, 39 வயதுடைய ஆண் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்ததாகவும், துணைவி மற்றும் சகோதரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, கத்தி ஏந்தியிருந்த சந்தேக நபர்...

பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!

பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.

கோடிகளில் புரளும் பிரான்ஸ் தமிழ் ஏஜென்சிகள்!

பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன. இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது. உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு! 

பிரான்ஸ்: யாழ் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம்!

பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்.. அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை... ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல் சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது.. இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?

இலங்கை தொடர்பாக உண்மையை சொன்ன பாரிஸ் சாமியார்!

இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார். இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார். பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...

பாரிஸ்: வட்டி காசு கொடுக்கும் தமிழரின் அட்டகாசம்!

பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!  உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை  மிரட்டியிருக்கிறார் தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?  இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img