Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

உணவு – உலக இயங்கியல் : பகுதி I

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான  மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால்.. சூரிய ஒளியில் இருந்து நேரடியாக உணவை தயாரித்து வாழும் தாவரங்கள் சார் உணவுகளை உட்கொள்வதாகும்… அசைவ உணவுகள் என்பன விலங்குகள் அவற்றின் இறைச்சிகளை உண்ணுவதாகும்.. 

இங்கு உண்மையில் உணவுகள் எவற்றால் வித்தியாசப்படுகின்றன என்று பார்த்தால்..சூரிய ஒளியை முதலில் உறிஞ்சி கொள்ளும் தாவரங்கள்,பின்னர் தாவரங்களை உண்ணும் விலங்குகள்,விலங்குகளை உண்ணும் விலங்குகள் என இந்த சங்கிலி இருக்கின்றது.இங்கு மனிதர்கள் அதிகமாக தாவரங்களையும் விலங்குகளையும் உண்கிறார்கள்.

சரி இந்த 10% சைவ உண்ணும் மக்களும் 90% மாமிச உண்ணும் மக்களும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என பார்த்தால்,சைவ உணவுகளை உண்பவர்கள் தாவரத்தின் , சூரிய இயல்புகளை அதிகம் பெறுகின்றனர்.அதாவது  

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

Stilness இயல்புடையவர்களாக அதிகம் இருப்பார்கள்.. இவர்கள் அதிர்ந்து பேசமாட்டார்கள்,உடல் உழைப்பு மிக குறைவாக செய்வார்கள்..மனம் கட்டுக்குள் இருக்கும்,அலைபாயும் எண்ணங்களை இலகுவாக அடக்க கூடியவர்களாக இருப்பார்கள்,சிறு முதலாளிகள் தொடக்கம் உலகை ஆளும் இயக்கும் பெரும் தொழில்களில் ஈடுபடுவார்கள்,கல்வி கற்றல் கற்று கொடுத்தல்,திட்டங்கள், ராஜதந்திரங்கள் வகுத்தல் நாடுகளை ஆளுதல் போன்ற ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்துக்குரிய இயல்புகளை கொண்டிருப்பார்கள்.

இதற்கு காரணம் இவர்களின் மன – உடல் இயல்பு சூரியனின் இயல்பை அதிகமாக உள்வாங்கி கொண்டிருப்பதுதான்.தவிர  Stillness இயல்பு மூலம் இவர்கள் இத்தகைய தகுதிகளை பெற்று கொள்கிறார்கள்.இவர்கள் அசையமாட்டார்கள்,இருந்த இடத்தில் இருந்து உலகை,மக்களை அசைத்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள்,சூரியனின் , ஒளியின் வேலை இதுதான்.

உடல் உழைப்பு இவர்களுக்கு தேவையில்லை என்பதால் மெல்லிய தோற்றமுள்ளவர்களாகவே அதிகமாக இருப்பார்கள்..உடல் அதிகமாக இல்லாமல் இருப்பதால் இவர்கள் மூளை அதிகமாக வேலை செய்யும்.. 

[உலகின் புத்திசாலிகள்,அறிவாளிகள் பெரும்பாலும் மெல்லிய உயரமானவர்களாக இருப்பார்கள் என்கின்றது உளவியல் ஆய்வு.. ]

இவர்கள் தனிமை விரும்பிகள்,இது சூரியனின் ஒரு குண இயல்பு என்று கூட சொல்லலாம்..சமூகத்தை விட்டு ஒதுங்கியே வாழ்வார்கள்,உலகிலேயே மொத்தம் 10% தான் சைவம் உண்பவர்கள்,இவர்கள் அநேகம் உலகத்தோடு தொடர்பே இல்லாமல் வாழ்பவர்கள்தான்.

இத்தகைய இயல்புகளால் இவர்கள் இருந்த இடத்தில் இருந்தே சமூக உலக மனிதர்களின் இயல்புகளை அறிந்து கொள்கிறார்கள்,கொள்கைகள் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்துகின்றனர்.உலகை இணைத்தல்,பெரிய வியாபாரங்கள்,சமூக அரசியல்கள் என்று எல்லாவற்றையும் இவர்களே தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதற்கு இதுவே காரணமாகும்.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

அடுத்து மாமிச உணவு உண்பவர்களை பார்க்கலாம்,இவர்கள் நிலையற்ற தன்மை உடையவர்களாக இருப்பார்கள்,சமூகமாக சார்ந்து இயங்குவார்கள்..இவர்கள் இயக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள்..நிலையாமை இவர்களின் அடிப்படை குணம்..இவர்கள் உடலும் மனமும் தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கும்.கூட்டமாக வாழ்வார்கள்… உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்..இவர்கள் உலகில் 90% ஆக இருந்தாலும் ஆளப்படுகிற கூட்டமாக இருப்பார்கள் [கடைசி இரண்டாயிரம் வரலாறு படி] கல்வியறிவு சார் விடயங்களில் ஒரு எல்லையை தாண்டி இவர்களால் சிந்திக்க முடியாமல் இருக்கும்.அதனால் நாடு சமூக விதிகளை கடைப்பிடித்து வாழ வேண்டிய நிர்பந்தமும் அதனால் ஏற்படும் மன அழுத்ததங்களினுள்ளும் வாழ்வார்கள்.

சரி இந்த 90% ஆளப்படும் மக்களை ஆளும் 10% இவர்கள் இருவரும் எவ்வாறு ஒரே உலகை இயக்குகிறார்கள் என்றால்,அதற்கு இவர்களின் 10% சைவ சூரிய இயல்பை கொண்ட நிலைத்த தன்மையும்,90% அசைவ மக்களின் நிலையாத தன்மையும் ஒன்று சேரும் போதே நடக்கின்றது. உதாரணமாக சொன்னால் எவ்வாறு ஒரு கார் அச்சு அசையாமல் இருந்தால்தான் அதை சுற்றி காரின் சில்லு அசைந்து காரை இயக்கும்..

அதே போல 10% சைவ இயல்பு மக்கள் Stillness அவர்களின் நிலைதன்மையை அதாவது காரின் அச்சு போன்றது.. அதனை சுற்றி நிலையில்லாத 90% மக்கள் கூட்டமாக சில்லு போன்று சுற்றுகின்றது..உலகம் இப்படிதான் இயக்கப்படுகின்றது..சிறிதாக நிலையாக இருக்கும் அச்சு தேய்ந்து அழிந்து போவதில்லை.. அதன் இயல்பால் இது வலிமையாக இருக்கின்றது.ஆனால் சுற்றி சுழலும் சில்லு பெரிதாக இருந்தாலும் தேய்ந்து அழிவடைந்து கொண்டே இருக்கும்,அடிக்கடி சில்லுகள் மாற்றப்பட்டு கார் அதாவது உலகமும் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும்.

இங்கு சில்லு , அச்சு தனிதனியாக இருந்தால் பலன் ஏற்படாது தமது இயல்புகளை இணைக்கும் போதே இயங்கியல் சாத்தியமாகின்றது.உலகமும் இயங்க இந்த இரண்டும் தேவை..அதுவும் 90:10 என்ற விகிதம் போதுமான சமனிலையை ஏற்படுத்துகின்றது என்று நாம் எடுத்து கொள்ளலாம்..அதாவது உலகின் 10% கூட்டம்தான் 90% மக்கள் கூட்டத்தை இயக்குகின்றது என்று எடுத்து கொள்ளலாம்…

தொடரும்…

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here