Monday, March 23, 2026
No menu items!

பாரிஸ் வீதியில் 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவனுக்கு மாரடைப்பு

ஸ்கூட்டரிலிருந்து வீதியில் விழுந்த 2 வயது சிறுவன் மீது ஏறிய கார்! படுகாயமடைந்த சிறுவனை
நெக்கர் மருத்துவமனைக்கு (15வது மாவட்டம்) விரைவாகக் கொண்டு செல்ல காவல்துறை துணை இருந்த போதிலும், பயணத்தின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் அவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தையின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் பகுதி மேயர் எரிக் ப்ளீஸ், “வியாழக்கிழமை மாலை அவரது தாய், சிறுவன் செயற்கை மயக்க நிலையில் வைக்கப்பட்டதாக என்னிடம் கூறினார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.” என்று தெரிவித்தார்.

மேலதிக தகவல்

  • ஓட்டுநர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல் நிலையில் வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் இரத்தத்தில் மது அல்லது போதை மருந்துகள் இல்லை என தெரியவந்துள்ளது.
  • விபத்து தொடர்பான நீதித்துறை விசாரணை (Service de Traitement Judiciaire des Accidents – STJA) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here