Jaffna tamil news
🐯 தாயகம்
யாழில் இன்று பிரான்சிலிருந்து வந்தவர்கள் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி
Castro -
யாழ்ப்பாணத்தில் கார் - முச்சக்கர வண்டி மோதல் விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகள் உட்பட 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், மார்ச் 12, 2026 – யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி (ஆட்டோ) இடையேயான மோதல் விபத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரும்...
City News
இன்று மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அருச்சுனா எம்பி
Kuruvi -
யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சையில்... யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன், இன்று (05) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேசுவதற்கான வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாகஅவர் குற்றம்சாட்டினார். 77 நாட்கள் நான் இங்கு பேச முடியவில்லை,என்று அவர் கூறினார். இது தொடர்பாக அவர் சமர்ப்பித்தஆவணத்தின் உள்ளடக்கத்தையே மட்டும் வாசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில், இராமநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இராமநாதன் கூறுகையில், ஜனவரி 20ஆம் தேதி அனுராதபுரம் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உத்தியோகபூர்வமான பாராளுமன்ற அடையாள அட்டையை வழங்காத காரணத்தால் தன்னுடைய உரிமைகள்மீறப்பட்டதாக தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வழிமத்திய சட்டத்தரணியுடன் பயணித்த போது, போக்குவரத்து காவலர்கள் தடுக்கின்றனர். ஆனால் ஏன் தடுக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. நான் தமிழ்த்சமூகத்துக்கான பிரதிநிதி என்றும் விளக்கினேன். ஆனால், அவர்கள் உத்தியோகபூர்வ பாராளுமன்ற அடையாளஅட்டையை மட்டுமே கோரியிருக்கிறார்கள் என்று கூறினார். இதையடுத்து, இராமநாதன் பாராளுமன்றத்தில் தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம்சாட்டி, இரண்டுமாதங்களுக்கு பிறகும், எனக்கு வழங்கப்பட்ட ஒரே ஆவணம் இதுதான். பாராளுமன்ற அடையாள அட்டைமற்றும் அனுமதி அட்டை எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகே, ஜனவரி 22ஆம் தேதியன்றுகாலை எனக்கு வழங்கப்பட்டது என்று விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இவர் ஒருபக்கம் பாராளுமன்றத்தை குறை கூறுகிறார். மறுபக்கம் இனப்பிரச்சினையை தூண்டுகிறார். ‘சிறுபான்மை’ போன்ற சொற்களை எங்களால் ஏற்க முடியாது. இவருக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம். அவரைமருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,உங்கள் மீது போக்குவரத்து மீறல் தொடர்பாக புகார் உள்ளது. இந்த நாட்டின்சட்டம் அனைவருக்கும் சமம். எம்.பி. என்கிற பதவி கொண்டவர் என்ற விதிவிலக்கு இல்லை,என்றுசுட்டிக்காட்டினார். இந்நிலையில், அவை தலைவர் பிமல் ரத்நாயக்க, அருச்சுனாவின் பேச வாய்ப்பு கொடுக்கும் உரிமைப்பிரச்சினையை எதிர்க்கட்சி தீர்க்க வேண்டும். ஆனால் அவர் வேறு விஷயங்களை முன்வைக்கிறார்,என்றுகூறினார். இராமநாதன் அறிக்கையில் தொடர்பில்லாத விடயங்களை பாராளுமன்ற நிகழ்வுகள் பதிவேட்டிலிருந்து நீக்கசபாநாயகர் உத்தரவிட்டார்.
Latest News
யாழில் 1 ஏக்கர் முருங்கை தோட்டத்தில் ஊடுபயிர்கள்: 100% இயற்கை முறை
முருங்கை மரங்கள் முதல் 1–2 ஆண்டுகளில் (குறிப்பாக நடவு செய்த முதல் 2 ஆண்டுகளில்) முழுமையாக வளர்ந்து நிழல் கொடுக்காது. இதனால் ஊடுபயிர்கள் போடுவது மிகவும்...


