Sunday, March 22, 2026
No menu items!

பிரான்ஸ்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது!

பிரான்சின் Meaux (Seine-et-Marne) நகரில், கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 36 வயதுடைய பெண்ணும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.

மேலும், அவரது இன்னொரு மகள் தீவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திங்கட்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது முதல் இது இயல்பான விபத்து அல்ல என்று சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையின் போது,

அவ்வழியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு வீடற்றவர்களே இந்த தீவிபத்திற்கு காரணம் என காவல்துறையினர் உறுதிசெய்தனர். இதனை அடுத்து, காவல்துறையினர் குறித்த இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த அடுக்குமாடி கட்டிடம், இடைமாற்றப் பகுதி என்பதால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் நீண்டகாலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், சட்டவிரோத குடியிருப்பாளர்கள் இப்பகுதியில் தங்கியிருப்பது இயல்பான விடயமாக இருந்துள்ளது. இந்த சம்பவம், அங்கு நிலவிய பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட இருவரும் மது போதையில் இருந்தபோது தீயை உண்டாக்கியதாக கருதப்படுகிறது.

இதனால், சட்டவிரோத குடியிருப்பாளர்களின் நிலையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

சம்பவம் நடந்த இடத்திற்குச் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் எதிர்காலத்தில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் நகராட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here