Wednesday, March 11, 2026
No menu items!

பிரிட்டன்: பயணிகள் கடவுச் சீட்டுகளைப் பரிசீலிக்கவும்! ஐரோப்பா செல்ல புதிய விதிமுறைகள்!

பிரித்தானியாவின் பர்கண்டி நிற புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் செங்கன் நாடுகளுக்கான பயணங்களில் இரண்டு முக்கியமான விதிமுறைகள் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.

முதன்மையான புதிய விதிமுறைகள் என்ன?
பாஸ்போர்ட் வெளியீட்டு தேதி:
உங்கள் பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்குள் (வெளியிடப்பட்ட நாளிலிருந்து) பயண நாளுக்குள் இருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்கள் பாஸ்போர்ட் 2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தால், கடவுச் சீட்டுக்கான முடிவுத் திகதி 2025 மே மாதத்திற்கு பின்னர் இருந்தாலுமே 2025 மே மாதத்திற்கு பிறகு அதை பயன்படுத்த இயலாது

கடவுச் சீட்டு முடிவுத் திகதி:
நீங்கள் ஐரோப்பாவில் இருந்து திரும்பும் நாளிலிருந்து உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாக இருக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் ஏன் வந்தன?
2020ல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை (Brexit) தொடர்ந்து, பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது ‘மூன்றாவது நாடுகளின் குடிமக்கள்’ (third-country nationals) என வகைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் செங்கன் நாடுகளுக்கான நுழைவு விதிமுறைகள் கடுமையானதாக மாறியுள்ளன.

பாஸ்போர்ட் காலம் குறித்து விழிப்புணர்வு
2018க்குப் பிறகு வெளியான பாஸ்போர்ட்: சரியாக 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.
2018க்கு முன் வெளியானவை: பழைய முறையில் கூடுதல் 9 மாதங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது அவை ஏற்கப்படுவதில்லை.

வெறும் ஐரோப்பா பயணிகளுக்கே இது பொருந்தும்!
இந்த புதிய விதிகள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. இவை குறிப்பாக செங்கன் பகுதியில் உள்ள நாடுகளுக்குப் பயணிக்க விரும்பும் பிரித்தானியர்களுக்கே பொருந்தும்.

90 நாள் சட்டம்:
மேலும் அறிந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான நுழைவு விதி; செங்கன் பகுதிகளில் நீங்கள் ஒரு காலாண்டில் மிக அதிகபட்சமாக 90 நாட்கள் தங்கத்தான் அனுமதிக்கப்படுகிறீர்கள். Brexitக்கு முன் இந்த கட்டுப்பாடு இல்லை.

விரைவு சேவைகள் மற்றும் தகவல்:
உங்கள் பாஸ்போர்ட் விரைவில் காலாவதியாக இருப்பின் அல்லது புதிய விதிகளை பூர்த்தி செய்யாத நிலையில் இருப்பின், விரைவாக புதுப்பிக்க UK Passport Office-இன் விரைவு சேவைகளை பயன்படுத்தலாம். இவை வழக்கமான சேவைகளை விட அதிக கட்டணமுடையதாக இருக்கும்.
மேலும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக GOV.UK இணையதளத்தை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பாரிஸ் மெட்ரோ பயணம்! அபராதம் அதிகரிப்பு! கவனம் மக்களே!

Paris இல் பொது போக்குவரத்து மோசடியை எதிர்கொள்ள, RATP ஜூன் 2, 2025 முதல் அபராதத் தொகையை உயர்த்துகிறது. உடனடி செலுத்துதலுக்கான அபராதம் 50 யூரோவிலிருந்து...

பாரிஸில் முடங்கிய குறிப்பிட்ட ரயில் சேவை!

03 மே 2024, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஷோசி-லெ-ரோய் RER நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கிய RER C சேவை பாதிக்கப்பட்டது. விபத்தில்...

பிரான்சில் எதிர்காலம்! தமிழர்கள் கவலை படும் நிலை! கவனம்!

பாரிய சைபர் தாக்குதல், மின் துண்டிப்பு, இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகக் குறிப்பிட்ட அளவு திரவப் பணத்தை வீட்டில் சேமித்து...

More Articles Like This