Monday, March 23, 2026
No menu items!

பிரான்ஸ்:புற்றுநோய் அபாயம்; புல தமிழர்கள் தவிர்க்க வேண்டிய உணவு!

Lay’s பொதிகள் மீளப்பெறப்படுவதாக Rappel Conso அறிவிப்பு; புற்றுநோய் அபாயம் காரணம்
நாடு முழுவதும் Lay’s உருளைக்கிழங்கு பொரியல் பொதிகள் மீளப்பெறப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான Rappel Conso அறிவித்துள்ளது.

இந்த பொதிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணையில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாகவும், இது ஐரோப்பிய அளவீடுகளை மீறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மீளப்பெறப்படும் பொதிகளின் விவரங்கள்
உற்பத்தி இலக்கம்: 340057333, காலாவதி திகதி: 23 août 2025,
விற்பனை இடம்: Action விற்பனையகங்கள்

Rappel Conso அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட உற்பத்தி இலக்கம் மற்றும் காலாவதி திகதி கொண்ட Lay’s பொதிகள் அனைத்தும் மீளப்பெறப்படுகின்றன. இந்த பொதிகளை உண்ண வேண்டாம் எனவும், அவற்றை Action விற்பனையகங்களுக்கு மீளக் கையளித்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Lay’s பொரியலில் பயன்படுத்தப்பட்ட எண்ணையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அளவீடுகளை மீறும் அளவு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாக Rappel Conso தெரிவித்துள்ளது. இதனால், நுகர்வோர் இந்த பொதிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உற்பத்தி இலக்கம் மற்றும் காலாவதி திகதி கொண்ட Lay’s பொதிகளை உடனடியாக உபயோகிக்க வேண்டாம்.
பொதிகளை Action விற்பனையகங்களுக்கு எடுத்துச் சென்று முழுமையான பணத்தை திரும்பப் பெறவும்.

மேலதிக விவரங்களுக்கு Rappel Conso இணையதளத்தை அணுகவும். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த மீளப்பெறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Lay’s பொரியல் விரும்பிகளுக்கு இது ஒரு முக்கிய எச்சரிக்கையாகும்.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here