Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

பிரான்ஸ்: பயங்கர தீவிபத்து! 70 தீயணைப்பு வீரர்கள் களத்தில்!

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

Seine-et-Marne மாவட்டத்தில் திடீரென பரவிய தீ – பலியானோர் குடும்பத்துக்கு பகிரங்க இரங்கல்!

மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 11:50 மணியளவில், Meaux (Seine-et-Marne) நகரில் உள்ள Square Edmond-About பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 34 வயது பெண் மற்றும் அவரது 13 வயது மகள் உயிரிழந்தனர்.

திடீர் தீ விபத்து – கட்டிடம் முழுவதும் பரவல்!
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தீயணைப்பு வீரர்கள் ஆரம்ப கணிப்பில் இது மின்கசிவு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

தீ மிக வேகமாக கட்டிடத்தின் பல்வேறு தளங்களுக்கு பரவி, தீவிர புகை மூடுகை காரணமாக மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. வெளியேற முயன்றவர்களில் சிலர் சிறிய தீக்காயங்களுடன் உயிர்தப்பினர்.

தீயணைப்பு வீரர்களின் போராட்டம்!
12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் தீயை கட்டுப்படுத்தப் பெரும் சிரமம் ஏற்பட்டது, ஏனெனில் கட்டிடத்திற்குள் புகைமூட்டம் அதிகமாக இருந்தது.
பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தயக்கமின்றி உயிரை காப்பாற்றிய வீரர்கள்!
தீயணைப்பு வீரர்கள் 15 வயது சிறுமியை தீக்காயங்களுடன் மீட்டனர். அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்து நிலையை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

30 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்!
இந்த தீவிபத்தில் கட்டிடத்தில் வசித்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் தற்போது அருகிலுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக சேவை அமைப்புகள் அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றன.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கருத்து
Meaux நகர மேயர் Jean-François Copé சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரில் சந்தித்து உரையாடினார்.

“இது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், வீட்டை இழந்தவர்களுக்கும் நகராட்சி முழுமையான உதவியளிக்கும்” என அவர் உறுதியளித்தார்.

அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

விசாரணை தீவிரம் – காரணம் என்ன?
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், பொலிஸார் மற்றும் தீவிபத்து விசாரணை குழு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“இந்த கட்டிடத்தில் நீண்ட காலமாக மின்கட்டமைப்பு பழுதாக இருந்ததாகவும், மக்கள் இதுகுறித்து தீ விபத்து இடம்பெற முன்னரே புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் பற்றிய மேலதிக ஆய்வுகளும் விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் மறுபடியும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
விசாரணை முடிந்த பின், அரசாங்கம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தீவிபத்தைக் குறைக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் Meaux நகர மக்களிடையே பெரும் சோகத்தையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here