பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பிரளயத்தை தோற்றுவித்துள்ளநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளதாகதெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருக்குநன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €1,005,800 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நிதி சேகரிப்புநடவடிக்கைக்கு கடும் கண்டனக்களை வெளியிட்டு வருகின்றனர்…ஒரு பகுதி மக்களை போட்டு தள்ளினால்பரிசு என்று இன்னொரு பகுதி மக்கள் அறிவிக்கிறார்கள் என்றால் எத்தகை நிலையில் மனிதாபிமானம்இருக்கின்றது..?
அதேவேளை இது மறைமுகமா காவல்துறையை இவ்வாறு குற்றம் செய்ய இன்னும் தூண்டும் செயற்பாடாக அமையும்…அதுவும் மில்லியன் கணக்காக லஞ்சம் போல் கொடுக்க அலையும் இவர்கள் சொல்ல வருவது இது எங்கள் நாடு இங்கு உள்ள மாற்றார் மாற்றார்தான்! ஆகையால் கவனமாக இருங்கள் என்று சொல்ல வருகிறார்கள்
- யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
- யாழில் தற்சார்பு மாடி வீடு மாதிரி திட்டம்: நிறைந்த வாழ்வு
- யாழில் ஒரு ஏக்கரில் தற்சார்பு பண்ணை அமைப்பு முறை : முழு வழிகாட்டி
- 🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
- பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!

