Wednesday, March 11, 2026
No menu items!

பிரான்சில் தட்டம்மை நோய் தீவிரம்!

பிரான்சில் சில பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்றுநோய் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய், Hauts-de-France மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதிகளில் மிகுந்த கவலைக்குரிய அளவில் பரவி வருகிறது.

அறிகுறிகள் மற்றும் தாக்கம்:
சிவப்பு திட்டுகள் தோன்றுதல், 39–40°C வரை கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, வலி, தலைமுதல் பாதம் வரை அரிப்பு போன்ற தீவிர அறிகுறிகள் இந்த நோய்க்கு உள்ளன. மேலும், நோய் பாதித்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இவை காரணமாக சீரியசான உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

தற்போதைய பாதிப்பு நிலைமை:
Hauts-de-France பகுதியில் இதுவரை 50 நோயாளிகள் மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதியில் 23 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரான்ஸ் முழுவதும் கடந்த மாதங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைப்புகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை:
பிரான்ஸ் சுகாதார அமைப்பு, 2018-ம் ஆண்டிற்கு பிறகு பிறந்த அனைவரும் தட்டம்மை தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. Hauts-de-France பகுதிக்கான மருத்துவ ஆலோசகர் Dr. Patrick Goldstein தெரிவித்ததாவது: “தட்டம்மை நோய் சிலவேளைகளில் சாதாரணமாகக் கடந்து செல்லலாம். ஆனால் சில நேரங்களில் அது ஆபத்தானதாக மாற்றமடையக்கூடும். அமெரிக்காவில், இந்நோயின் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • குழந்தைகள் மற்றும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு தடுப்பூசி அவசியம்.
  • தொற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
  • மருத்துவ மையங்களில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குவதும் மிக முக்கியமானவை என பிரான்ஸ் சுகாதார துறை வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பாரிஸ்: வானிலை நிலையம் எச்சரிக்கை!

வானிலை நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது – கிழக்கு பிரதேசங்களில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு பாரிஸ், மார்ச் 13, 2025 – நாட்டின் கிழக்கு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை...

பாரிசில் கடும் பரபரப்பு! தமிழர்கள் அவதானம்!

ஈரான் - இஸ்ரேல் போர் முற்றுகை உச்சம் பெறும் நிலையில்,ஈரான் அனுதாபிகள் இஸ்ரேல் ஆதரவு நாடும்,ஈரான் மீதான போருக்கு பக்கபலமாக இருந்து மறைமுகமாகவும்,வெளிப்படையாகவும் உதவி வரும்...

பிரான்ஸ்: ரயிலில் கோவப்பட்டு கையை தூக்கியவருக்கு நேர்ந்த கதி!

Lille : TGV ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்திய SNCF களப் பரிசோதகர் மீது பயணி தாக்குதல் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டார் மே 15, 2024 அன்று மாலை 6:43...

More Articles Like This