உயர்கல்வி கற்கும் மாணவன் ஒருவர் லீசேக்கு பெற்றோல் எரிகுண்டு எடுத்துவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 25, நேற்று செவ்வாய்க்கிழமை காலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Évry (Essonne) நகரில் உள்ள Montesquieu லீசேக்கு பெற்றோல் எரிகுண்டுடன் மாணவன் ஒருவர் வருகை தந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலை 8.30 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். லீசேக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த மாணவனை சோதனையிட்டனர்.
அதன் போது இலகுவில் தீப்பற்றி எரியக்கூடிய பெற்றோல் எரிகுண்டு, கூரான கத்தி ஒன்று அத்துடன், சுத்தியல் போன்ற பொருட்களை எடுத்துவந்திருந்தமை தெரியவந்தது.
உடனடியாக மாணவன் கைது செய்யப்பட்டார். இதனால் காலை 10 மணி வரை கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டது.
மேலும், காவல்துறை இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மாணவனின் செயலின் பின்னணி, எந்தவொரு அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளாரா என ஆராயப்படுகிறது.
மாணவனின் உளவியல் நிலை குறித்தும் பரிசோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் Montesquieu லீசேவின் மாணவர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Montesquieu லீசே நிர்வாகம் மற்றும் Essonne காவல்துறை இணைந்து, லீசே மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்த திட்டத்தில் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.