Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

புலம்பெயர் தமிழர்கள்: தாயகம் காலியாகிறது – கனடா நிரம்புகிறது!

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

வடக்கு மாகாணம், தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கருதப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் சனத்தொகை குறைந்த மாகாணமாகவும், கனடா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன், ஒரு புதிய சமூகப் பரிமாணத்தை உருவாக்கியுள்ளதையும் பிரதிபலிக்கிறது.

2024 கணக்கெடுப்பு மூலம் வெளியான முக்கிய விபரங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில்:
👉மேல் மாகாணம் 28.1% சதவீதத்துடன் அதிக சனத்தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது.
👉வடக்கு மாகாணம் 5.3% சதவீதம் மட்டுமே கொண்டதாக, சனத்தொகை குறைந்த மாகாணமாக பதிவாகியுள்ளது.
👉முல்லைத்தீவு மாவட்டம் – ஒரு சதுர கிலோமீட்டருக்கு வெறும் 50 நபர்களே வசிக்கின்றனர்.
👉கொழும்பு மாவட்டத்தில் இது 3,549 நபர்கள் ஆக உயர்ந்துள்ளது.
👉கம்பஹா மாவட்டம் 24,34,000 மக்கள் தொகையுடன் நாடில் அதிக மக்கள் உள்ள மாவட்டமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தின் சனத்தொகை விரிவான விபரங்கள்

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
மாவட்டம்சனத்தொகைஆண்டு வளர்ச்சி விகிதம்
முல்லைத்தீவு1,23,0002.23%
மன்னார்1,24,000
கிளிநொச்சி1,36,000
வவுனியா1,72,0000.01%

இடம்பெயர்வும் உலகத் தமிழர் பரவலும்
இலங்கையின் வடக்கிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக:
👉கனடாவில் தற்போது 2.4 முதல் 3 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.
👉1983இல் வெறும் 150 பேர் மட்டுமே இருந்த நிலையில்,
👉2021இல் 1,40,000 பேர் கனடாவில் பிறந்துள்ளனர்.
👉பிரித்தானியா – 2 லட்சம் தமிழர்கள்
👉ஐரோப்பா, ஸ்காண்டிநேவியன் நாடுகள், அவுஸ்திரேலியா – மொத்தமாக 2 லட்சம் மக்கள்
👉இந்தியா – 1.5 லட்சம் தமிழர்கள்

தமிழர்களின் பரவல் – பன்முக சமூக அமைப்பாக மாறியமை
இப்போது உலகிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மூன்றாகப் பிரிக்கப்படலாம்:
மூன்றில் ஒரு பகுதி – வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – தென்பகுதிகளில், நாட்டிற்குள் சிதறி வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – இலங்கைக்கு வெளியே, பெரும்பாலும் மேற்கு நாடுகளில் வசிக்கின்றனர்

யுத்தம் முடிவடைந்தது ஒரு திருப்புமுனை
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையாதிருந்தால்:
தமிழர்களின் பெரும் இடம்பெயர்வு தொடர்ந்திருக்கும்
வடக்கு கிழக்கு மக்கள் இலவசமான பிரதேசங்களாக மாறியிருக்கும்

2004இல் “தேசம்” சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை, “சமாதானத்தின் அவசியம்” என்பதைக் கூறி, தொடர்ந்து யுத்தம் இடம்பெற்றால் தமிழர்கள் நாடு முழுவதும் அல்லது வெளிநாடுகளுக்கே முற்றாக இடம்பெயர்வர் எனக் கணித்திருந்தது
இன்று வடக்கு மாகாணம் மக்கள்தொகை குறைவாக இருப்பது, யுத்தம், இடம்பெயர்வு, வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணிகளால் விளைந்த நீண்டகால சமூக விளைவாக பார்க்கப்பட வேண்டும். புதிய கணக்கெடுப்புகள், உலகத் தமிழர்களின் பரவல், மற்றும் சமாதானத்தின் மதிப்பு ஆகியவற்றை இணைத்து நம்மால் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும்.

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here