Monday, March 2, 2026
No menu items!

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் Tamil diaspora மக்களால் யாழில் வாங்கப்பட்ட investissement immobilier Sri Lanka, achat de terrain à Jaffna போன்ற காணிகள் தற்போது மோசடிக்காரர்களின் இலக்காக மாறியுள்ளன.


புலம்பெயர் தமிழர்களின் காணிகளை இலக்காகக் கொண்ட கும்பல்

அண்மைய நாட்களாக, ஒரு ஹயஸ் ரக வாகனத்தில் சுமார் ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று இந்த மோசடியை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் யாழ் நகர், கே.கே.எஸ் வீதி, A9 வீதி, மானிப்பாய் வீதி, பலாலி வீதி போன்ற முக்கிய இடங்களில் செயல்படுகின்றனர்.இந்தக் குழு பூட்டிய காணிகளை பூட்டு உடைத்து சிரமதானம் செய்ய, அயலவர்கள் கேட்டால் தாங்கள் “இத்தளத்தை வாங்கிவிட்டோம்” என்று பொய்யாக தெரிவிக்கின்றனர்.


பாதிக்கப்பட்டவர்களின் கவலை

பல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொத்துகளை வெளிநாடுகளில் இருந்து வாங்கி விட்டு விட்டபின்னர், அவற்றை பாதுகாப்பின்றி காலியாக விட்டிருப்பது தான் இம்மாதிரியான மோசடிகளுக்கான வாய்ப்பாகியுள்ளது.

சமீபத்தில் யாழில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பிரபல நபரின் காணியை அபகரிக்க முயன்றபோது, அயலவர்கள் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் யாழில் வந்து சந்தித்தபோது, அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து ஓடி விட்டது.


சட்ட வலையில் மாட்டிய கள்ள உறுதி முடித்த வழக்கறிஞர்கள்

இவ்வாறான மோசடிகளில், சில சட்டத்தரணிகளும் போலியான உறுதி ஆவணங்கள் (documents de propriété falsifiés) தயாரித்து கும்பலுடன் இணைந்திருப்பதாகவும், அண்மையில் சிலர் சட்ட வலையில் மாட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமூக தலைவர்களின் எச்சரிக்கை

சமூக தலைவர்கள் தெரிவித்ததாவது:

“புலம்பெயர் தமிழர்கள் தங்கள் காணிகளை அவ்வப்போது உறவினர்கள் அல்லது நம்பகமான நண்பர்களின் மூலம் சரிபார்க்க வேண்டும். யாழில் நிலம் வைத்திருப்பவர்கள், அதை ‘வாங்கிவிட்டோம்’ என கூறும் அந்நியர்களிடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.”


⚠️ Important Keywords for awareness

  • Investissement immobilier Sri Lanka
  • Achat de terrain à Jaffna
  • Fraude immobilière Tamil diaspora
  • Propriété au Sri Lanka
  • Immobilier Jaffna Tamil diaspora

இந்தச் சம்பவம், புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வேர்களை மறந்துவிடாமல், தாய்நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பது அவசியம் என்பதைக் கடுமையாக நினைவூட்டுகிறது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கை

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்  தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி  உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது. நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது. பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் "கும்பல் மனோபாவத்தில்" இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது. ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது. நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img