Sunday, March 15, 2026
No menu items!
Home Blog Page 65

பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்

0

இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடைக் காலத்தின் ஆரம்ப நாட்களை போல ஒரு அசாதாரண வெப்ப நிலையை உணர்ந்துள்ளனர். இரவு முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தில் பதிவான வெப்பநிலை 13°C முதல் 14°C வரை இருந்தது, இது ஏப்ரல் மாதத்தில் வளமையாகக் காணப்படும் வெப்பநிலையைவிட சுமார் 5°C அதிகமாகும்.

அதாவது, பரிஸில் உணரப்பட்ட இந்த வெப்பநிலை ஜூன் மாத தொடக்கத்தில் நிலவும் வெப்பமாகும், இது வினோதமான காலநிலை சுழற்சியின் ஒரு வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. மேலும், சில இடங்களில் சனிக்கிழமை இரவில் பதிவான வெப்பநிலை ஞாயிறு காலை வரை மாற்றங்கள் ஏதுமின்றி ஒரேயளவாக இருந்துள்ளது. அதாவது இரவு முழுவதும் வெப்பம் நிலைத்திருந்தது.

இந்த வெப்பமான இரவுக்கு முக்கியக் காரணமாக, தெற்குப் பகுதிகளிலிருந்து பரவும் சூடான காற்று குறிப்பிடப்படுகின்றது. மத்திய மற்றும் தெற்குப் பிரான்ஸில் ஏற்பட்ட வெப்ப அலைகள் பரிஸின் தெற்கு வழியாக நகரத்தில் நிலவிய காற்று அலைகளில் கலந்து, நகரத்தின் வெப்பநிலையை உயர்த்தியதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் ‘வெப்பமான இரவுகள்’ அதிகரித்து வருகின்றன. இதனாலேயே கடந்த காலங்களில் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலைகள், இப்போது ஏப்ரலிலேயே காணப்படுகின்றன. இது ஒரு காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாகக் கருதப்படுகிறது.

ஏப்ரல் மாதம், பொதுவாக குளிர்கால முடிவும், கோடைக்கால தொடக்கமும் சேரும் மாறுபட்ட பருவம். இத்தகைய பருவங்களில் வானிலை ஏற்றத்தாழ்வுகள் வழக்கமானவை என்றாலும், இந்த அளவுக்கு அதிகமான வெப்பம் வருவது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தொடரக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வானிலை ஆய்வாளர்கள் இதே போன்ற காலநிலை தொடரலாம் என்றும், இவ்வாறு அதிகரிக்கும் வெப்பம் நகர மக்களின் வாழ்நிலையிலும், சுற்றுச்சூழலிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் கூட இரவுகளில் குளிர் காற்றுக்கு பதிலாக வெப்பமான காற்று நிரம்புவது, நகர திட்டமிடலிலும், சக்தி நுகர்விலும் மாற்றங்களை தேவைப்படுத்தும்.

பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!

0

ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த இந்த அகதிகள், அச்சத்துடன் கடற்படையின் உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.

தகவல் பெறப்பட்டவுடன், Centre Régional Opérationnel de Surveillance et de Sauvetage (CROSS) என்ற பிராந்திய மீட்பு மற்றும் கண்காணிப்பு மையம் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டது. அதன்படி, அகதிகள் அனைவரும் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம், கடந்த சில வாரங்களில் Pas-de-Calais வழியாக மேற்கொள்ளப்படும் அகதிகளின் கடற்பயணங்களில் ஒரு முக்கிய சம்பவமாகும். அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதத்தின் தொடக்க நாட்களிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதங்களைவிட, இந்த மாதத்தில் கடல்வழி பயணிக்கும் அகதிகளின் முயற்சிகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

இத்தகைய பயணங்கள் பெரும்பாலும் மனிதகடத்தல் குழுக்களால் ஏற்பாடு செய்வதாலும், பழைய மற்றும் பாதுகாப்பற்ற படகுகளை பயன்படுத்துவதாலும் ஆபத்தானதாகும். இது போன்ற நடவடிக்கைகள் மீது ஐரோப்பிய நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அகதிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த நாடுகளில் நிகழும் உள்நாட்டு கலகம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் வெளியேறி, ஒரு புதிய வாழ்க்கையை தேடி பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு செல்ல முயல்கின்றனர்.

ட்ரம்ப் வரிகள்: உலக சந்தை பதட்டம்! வரி விலக்கு பெறும் இரண்டு நிறுவனங்கள்!

0

ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென ஒரு முக்கிய தீர்வை வழங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள், கணினி சிப்கள் மற்றும் பிளாட்ஸ்கிரீன் திரைகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு தற்போது அமெரிக்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விலக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்டன. விலக்குகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அமலில் வந்துள்ளன. இவை, ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 125% சீனாவுக்கு எதிரான வரி, மற்றும் உலகளாவிய 10% அடிப்படை வரி ஆகியவற்றிலிருந்து குறித்த தயாரிப்புகளை விலக்குகின்றன.

ஆப்பிள் மற்றும் என்விடியாவுக்கு நேரடியான பலன்
இந்த நடவடிக்கையால், Apple Inc., Nvidia Corp. உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியான வரி விலக்கைப் பெற்றுள்ளன. அமெரிக்காவில் பெரும்பாலும் தயாரிக்கப்படாத இந்த மின்சாதனங்கள், உள்நாட்டுப் பயன்பாட்டில் பரவலாக இருப்பதால், நுகர்வோருக்கும் இது நற்செய்தியாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், வரிகள் உயரும் என்ற அச்சத்தில், ஐபோன் மற்றும் பிற சாதனங்களை மக்கள் திடீரென வாங்கத் தொடங்கினர். தற்போது அந்த விலை உயர்ச்சி பயம் தற்காலிகமாக குறைவடைந்துள்ளது.

வரி விலக்குகளின் பொருளாதார தாக்கம்
ராண்ட் சீனா ரிசர்ச் சென்டரின் துணை இயக்குநர் ஜெரார்ட் டிப்பிப்போ வழங்கிய தரவுகளின்படி, இந்த விலக்குகள் 2024ஆம் ஆண்டு அடிப்படையில் அமெரிக்கா இறக்குமதி செய்த $390 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை உள்ளடக்கியது. இதில் $101 பில்லியனுக்கும் மேற்பட்டவை சீனாவிலிருந்து.

வரி விலக்குகள் பெற்ற முக்கியமான பிரிவுகள்:
👉$41 பில்லியன் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள்
👉$36 பில்லியன் மதிப்புள்ள கணினிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள்
மொத்தத்தில், சீனாவிலிருந்து வரும் 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இறக்குமதியின் 22% இவை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.

இது அமெரிக்க வரிக் கட்டண திட்டத்திலிருந்து கிடைத்த ஒரு மிகப்பெரிய விடுதலையாகும். ஆப்பிள் போன்ற முக்கிய நிறுவனங்கள் மற்றும் மின்சாதனங்களை வாங்கும் நுகர்வோர்கள் விலை அதிகரிப்பிலிருந்து தப்பிக்கலாம், என டிப்பிப்போ தெரிவித்துள்ளார்.

ஆனால், பல பிற நுகர்வோர் மற்றும் முதலீட்டு பொருட்கள் இன்னும் உயர் வரிகளை எதிர்கொள்கின்றன. இந்த விலக்கு, அமெரிக்க பொருளாதாரத்தின் ஒரு பகுதியையே மட்டுமே காப்பாற்றுகிறது.
ட்ரம்ப் தலைமையிலான வரிக் கொள்கைகள், உலக சந்தைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பங்குச் சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தி, சீனாவுடன் தீவிரமான வர்த்தக யுத்தத்தை தூண்டின. இப்போது, இந்த விலக்கு நடவடிக்கை, ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் முக்கிய தளர்வாகக் கருதப்படுகிறது.

பிரான்ஸ்: ஓலிவர் புயல்! – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

0

பாரீஸ்: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை, இடியுடன் கூடிய பலத்த மழை, வானிலை மையம் எச்சரிக்கை!
ஓலிவர் (Oliver) என பெயரிடப்பட்ட புயல், ஸ்பெயினிலிருந்து பிரான்சின் தெற்கு பகுதிக்குள் நுழைவதாகவும், இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் மாலை வரை தெற்குப் பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் காரணமாக, மாலையில் 3 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய புயல் காற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது போக்குவரத்து, வெளிவிளையாட்டு நிகழ்வுகள், மற்றும் திறந்தவெளி சந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள்:
வானிலை மையம், மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Alert) எனப்படும் முன்செய்தியை கீழ்க்காணும் 12 மாவட்டங்களுக்கு விடுத்துள்ளது:

👉Ariège
👉Corrèze
👉Dordogne
👉Gers
👉Haute-Garonne
👉Landes
👉Lot
👉Lot-et-Garonne
👉Pyrénées-Atlantiques
👉Hautes-Pyrénées
👉Tarn-et-Garonne
👉Haute-Vienne

இப்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், புயல் மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின் பாதிப்பு – ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்:
ஒலிவர் புயல் முதலில் ஸ்பெயினில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரான்சின் தென்மேற்கு பகுதிகளுக்கு விரைந்து வருகின்றது. ஸ்பெயினில் இப்புயலால் மழை வெள்ளம், Strom Surge மற்றும் காற்றழுத்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பிரான்ஸில், அதிகரித்த ஈரப்பதம் மற்றும் காற்றழுத்த மாற்றங்களால் வானிலை மாறுபாடுகள் திடீரென ஏற்படும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாதுகாப்பு ஆலோசனைகள்:
👉வெளிவேலைகளை தவிர்க்கவும்
👉மின்சார சாதனங்களை பாதுகாப்பாக அணைத்து வைக்கவும்
👉வாகன ஓட்டம் குறைத்துவைத்து, பாதுகாப்பாக இயக்கவும்
👉அவசர தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் தயாராக வைத்துக்கொள்ளவும்

பிரான்ஸ்: பாரிஸில் இரவு நேரத்தில் தடைப்படும் ரயில் சேவைகள்!

0

ஏப்ரல் மாதத்தில் இரவு நேர RER A சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாரிஸ் நகருக்கும் அதன் புறநகரங்களுக்கும் இடையிலான மிக முக்கியமான போக்குவரத்து இணைப்பாக செயல்படும் RER A ரயில்சேவை, ஏப்ரல் 2025 மாதத்தில் இரவு நேரங்களில் தடைப்படும் என RATP நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

RER A (Réseau Express Régional ligne A) என்பது பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களை இணைக்கும் மிகப்பெரிய மற்றும் அத்தியாவசியமான நகரப்புற விரைவு ரயில்வழிமுறை ஆகும். இது தினசரி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது, ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் ரயில் சேவைகளில் ஒன்றாகும்.

RER A, மேற்கு புறநகரங்களிலுள்ள Cergy, Poissy போன்ற இடங்களை மைய நகரத்துடன் இணைக்கிறது. இது பொதுவாக வேலைக்கு செல்வோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என பல தரப்பட்ட பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது.

ஏப்ரல் 2025 – தற்காலிக இரவு சேவை தடை அட்டவணை:
ஏப்ரல் 14 முதல் 18 வரை:
Maisons-Laffitte ↔ Cergy-Le Haut இடையே இரவு 10:15 மணிக்கு பிறகு சேவை இல்லை.

ஏப்ரல் 21 (ஈஸ்டர் திங்கள்):
Maisons-Laffitte ↔ Poissy இடையே இரவு 10:15 மணிக்கு பிறகு சேவை இல்லை.

ஏப்ரல் 22 முதல் 25 வரை:
Sartrouville ↔ Cergy-Le Haut / Poissy இடையே இரவு 10:15 மணிக்கு பிறகு சேவை இல்லை.

ஏப்ரல் 28 முதல் 30 வரை:
Maisons-Laffitte ↔ Poissy இடையே இரவு 10:15 மணிக்கு பிறகு சேவை இல்லை.

இந்த இரவு நேர தடைகள், குறிப்பாக வேலை முடிந்த பிறகு வீடு திரும்பும் பயணிகள், இரவு நேர வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நள்ளிரவு விமான நிலைய அல்லது தொடருந்து நிலைய பயணிகளை பெரிதும் பாதிக்கக்கூடியவை. குறிப்பாக Cergy, Poissy, Sartrouville போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

RATP நிறுவனம் இந்த தடைக்குப் பதிலாக மாற்றுப் போக்குவரத்து வழிகளை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்தாலுமே, பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுவது, மாற்று வழிகள் (பஸ்கள் அல்லது பிற RER/மெட்ரோ இணைப்புகள்) குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

பயணிகளுக்கான பரிந்துரைகள்:
👉🏻பயணம் தொடர்பான திட்டங்களை முன்கூட்டியே சரிபார்க்கவும்.
👉🏻RATP இணையதளத்திலோ அல்லது கையடக்க தொலைபேசி செயலிகளிலோ சேவை மேம்பாட்டு அறிவிப்புகளை பின்தொடரவும்.
👉🏻மாற்றுப் போக்குவரத்து வசதிகளை ஆராயவும்.
👉🏻தொடர்பு தகவல்கள் மற்றும் நேரடி பயன்பாட்டு வரைபடங்கள் RATP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ratp.fr) கிடைக்கின்றன.

பாரிஸ்: அதிகரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் குடியேற்றம்! அகதிகள் மீதான குற்றச்சாட்டு!

0

பிரான்ஸின் தலைநகர் பரிஸை ஒட்டியுள்ள Seine-Saint-Denis மாவட்டம், தற்போது வெளிநாட்டவர்கள் அதிக அளவில் குடியேற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியதாக கருதப்படும் இம்மாவட்டம், இப்போது அதிகரித்த குடியேற்றம் மற்றும் அதன் விளைவுகளால் சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக பலர்
தெரிவிக்கின்றனர்.

Seine-Saint-Denis மாவட்டம், பிரான்ஸின் மிகவும் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பிராந்தியத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக வளங்களை விட அதிகமாக சட்டபூர்வமான குடியேற்றக் குழுக்கள், அகதிகள் மற்றும் சிறிய வருமானம் பெறும் குடும்பங்கள் வாழ்வதனால்தான் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வளங்களின் பற்றாக்குறையானது அங்கு வாழும் மக்களை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் குடியேற்றம் குறித்த விளைவுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. இதில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குடியேற்றவாசிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினரிடம் இருந்து சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் ஆவணம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை – அவர்களின் நாட்டு விபரம், அடையாள ஆவணங்கள், வதிவிடங்கள், மற்றும் குற்றத்தினைச் சார்ந்த பின்னணி தகவல்கள் உடனடியாக நகரசபைக்குத் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சமூகப்பலவீனங்கள் மற்றும் பாதுகாப்பு விவாதங்களை பொதுமக்களும், சமூக அமைப்புகளும் கவனித்து வருகின்றனர். சிலர், இது வெளிநாட்டவர்களின் மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் கண்டிக்கின்றனர். மற்றொருபுறம், சிலர் நாட்டு பாதுகாப்பிற்காக சீரான கண்காணிப்பு அவசியம் எனவும் வாதிடுகின்றனர்.

இந்த நடவடிக்கைகள், எதிர்காலத்தில் வதிவிட அனுமதிகள் வழங்கப்படும் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தேவையை ஏற்படுத்துமா என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சரியான தகவல்களூடான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் குற்றவாளிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிரான்ஸ்: மூடப்படும் நிலையில் அமெரிக்க நிறுவனம்! 316 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

0

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, பிரான்சில் உள்ள அமெரிக்க நிறுவனமான Owens-Illinois (O-I) தனது தொழிற்சாலைகளில் பணியாற்றிய 316 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கண்ணாடி போத்தல் உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ள O-I, மதுபான கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சில் Vergèze (Gard) மற்றும் Vayres (Gironde) என இரண்டு நகரங்களில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.

மொத்தம் 2,200 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், தற்பொழுது Vergèze பகுதியில் 164 பேரையும், Vayres பகுதியில் 81 பேரையும் வேலையிலிருந்து நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேசமயம், தொழிற்சங்கமான CGT, இந்த வேலைநீக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 20% வரி உயர்வை அமுல்படுத்தியது. இந்த வரி உயர்வு மதுபான விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் (Wine) உள்ளிட்ட முக்கிய மதுபானங்கள், விலை உயர்வால் போட்டியில் பின்னடைவு கண்டுள்ளன.
இதன் நேரடி தாக்கமாக, O-I நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடர் கிடைக்காததால் உற்பத்தி அளவை குறைத்து, அதன் விளைவாக ஊழியர்களை நீக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த வேலை இழப்புகள் பிரான்சின் உற்பத்தித் துறையில் நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியுள்ளதுடன், சர்வதேச வர்த்தக கொள்கைகள் உள்நாட்டு வேலைவாய்ப்பில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டாகிறது. மேலும், இந்தத் தீர்மானம் ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும், உள்நாட்டு தொழிற்துறையின் ஸ்திரத்தன்மையிலும் கேள்வி எழுப்புகிறது.

பிரான்ஸ்: தோல்வியடைந்த வன்முறை! மகனால் தாயின் உயிர் தப்பியது!

0

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2025, பிரான்சின் Noisy-le-Grand பகுதியில் முன்னாள் கணவரால் நடந்த கொலை முயற்சி, குடும்பக் பிரச்சனைகள் எவ்வளவு மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை காட்டுகிறது.

35 வயது பெண் ஒருவர், தனது முன்னாள் கணவரால் வன்முறை தாக்குதலுக்குள்ளானார். அவர், குடியிருப்பின் பொது வெளியில், கழுத்திலும் வயிற்றிலும் பல முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த பயங்கரமான தாக்குதல் நடப்பதற்குள் தாயை காப்பாற்ற முயன்ற 13 வயது மகனின் துணிவால் ஒரு பெரிய பேரழிவைத் தடுக்க முடிந்தது.

சம்பவத்தின் போது, தாயை காப்பாற்ற முயன்ற 13 வயது மகனின் செயல், தாயின் உயிரைக் காப்பாற்றும் முக்கிய காரணி ஆனது. தாயின் கைகளில் ஏற்பட்ட காயங்கள், தன்னை காக்க முயன்றபோது ஏற்பட்டவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர் 37 வயது ஆண், இவர் அவரின் முன்னாள் கணவர் எனக் கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, உடற்கூறு காயம் விளைவித்தல், மற்றும் பிள்ளைகளின் முன்னிலையில் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் “protocole féminicide” எனப்படும் அவசர பாதுகாப்பு திட்டத்திற்குட்பட்டது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் உடனடியாக பாதுகாக்கப்படுகிறார்கள்.
தற்போது, தாயும், அவரது இரண்டு பிள்ளைகளும் l’hôpital Robert-Ballanger (Aulnay-sous-Bois) மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின், l’Aide Sociale à l’Enfance (ASE) எனப்படும் சிறுவர் நலத்துறை பராமரிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், பிரான்சில் குடும்ப violence (வன்முறை) மற்றும் féminicide (பெண்களுக்கு எதிரான கொலை முயற்சிகள்) என்ற பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதை வெளிக்கொணர்கிறது. குழந்தைகளின் மனநிலையும், இவாறான சம்பவங்களின் பின்னர் அவர்களிடம் ஏற்படும் மனத்தாக்கமும் பெரும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறான சம்பவங்களின் பொருட்டு
சட்டத்துறையும், சமூக சேவையுயும் மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் தெளிவாகத் தெரிகிறது.

நம்பிக்கைக்குரிய Navarro: Trump-க்கு தோழரா, உலக பொருளாதாரத்துக்கு சோதனையா?

0

Peter Navarro என்ற நபர் சமீப காலங்களில் ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றவர்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் அவர்களின் முக்கிய பொருளாதார ஆலோசகராக பணியாற்றியதோடு, பல சர்ச்சைகளுக்குப் பின்னணியாக இருந்தவரும் இவரே.

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலின் போது, தனக்கு ஒரு பொருளாதார ஆலோசகர் தேவை என Donald Trump தனது மருமகனான Jared Kushner-க்கு தெரிவித்திருந்தார். அதனையடுத்து, Jared, Amazon தளத்தில் தேடலில் ஈடுபட்டார். அப்போது அவரது கவனத்திற்கு ‘Death by China’ என்ற நூல் கிடைத்தது. இதை எழுதியவர்களில் ஒருவராக இருந்த Peter Navarro மீது Jared கவனம் செலுத்தினார்.

Navarro, Harvard பல்கலைக்கழகத்தில் MBA மற்றும் PhD பட்டங்களைப் பெற்றவர் என்பதால், அவரை Trump-க்கு பொருத்தமான ஆலோசகராக Jared பரிந்துரைத்தார்.

Navarro எழுதிய புத்தகங்களில் “Ron Vara” என்ற நபரின் கருத்துக்கள் அடிக்கடி மேற்கோளாக வந்தன. ஆனால், பின்னர் Ron Vara என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பனை நபரெனவும், Navarro தனது பெயரில் உள்ள எழுத்துகளை மாற்றி உருவாக்கிய உருவகப் பாத்திரமெனவும் தெரிய வந்தது. Harvard-ல் PhD பட்டம் பெற்ற ஒருவர் கற்பனை நபரின் வாயிலாக தமது கருத்துக்களை வலுவாக்க முயன்றது பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பியது.

Trump போன்று சீனாவிற்கு எதிரான வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த Navarro, அவரது நம்பிக்கைக்குரிய நெருங்கிய ஆலோசகராக மாறினார். Trump தனது முதல் ஆட்சி காலத்தில் Navarroவை வெள்ளை மாளிகையின் சர்வதேச வர்த்தகத் துறையின் பணிப்பாளராக நியமித்திருந்தார்.

இருப்பினும், Treasury செயலாளர் Steven Mnuchin மற்றும் தேசிய பொருளாதார சபையின் இயக்குனர் Gary Cohn ஆகியோர் அதிக செல்வாக்குடன் இருந்ததனால் Navarroவின் கொள்கைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

எனினும் 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி குறித்து சாட்சியமளிக்க மறுத்தமையால் இவர் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
Trump ஐ பாதுகாக்கும் முயற்சியல் தன்னை முன்னிலைப்படுத்தியதும் சீனாவிற்கு எதிரான Trump இன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தததும் அவரை Trump இன்நம்பிக்கைக்குரிய விசுவாசியாக மாற்றியுள்ளது.

Navarroவின் நம்பிக்கைகள் தெளிவானவை: சீனா எப்போதும் அமெரிக்காவுக்கு ஒரு நெருக்கடியான போட்டியாளர். சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகும். அமெரிக்கா உலக வல்லரசாக திகழவேண்டும் என்றால், பிற நாடுகளை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் Navarro நம்புகிறார்.

இந்த எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பு என்ற கொள்கையை அமெரிக்கா வகுத்தது. கடந்த 2ம் திகதி, இந்த திட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், உலகப் பொருளாதார ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. பங்குச் சந்தைகள் சரிந்தன.
Donald Trump-இன் தீவிர ஆதரவாளராக இருப்பவர் Elon Musk இந்த வரிவிதிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார். இதனால், Trump நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு தோன்றியது.

இந்த வரிவிதிப்புகள் காரணமாக Tesla நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் 49% விற்பனை இழந்தது. இதன் விளைவாக, அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து எழுந்த அழுத்தங்களால், Trump தனது வரிவிதிப்பு திட்டத்தை 90 நாட்கள் பின்வைக்க முடிவு செய்தார்.

Elon Musk இன் தலையீடு இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இத்தாலிய துணைப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே 0% வரி பரிமாற்றம் பற்றிய கருத்து எடுத்துக்கூறப்பட்டது.

Navarro, இந்த சிக்கல்களைப் பற்றி கருத்து வெளியிடும்போது, Elon Musk-ன் கருத்துகள் அவருக்கு ஆச்சரியத்தைத் தருவதாகவும், அவருக்கு வரிவிதிப்பு குறித்து புரிதல் இல்லையெனவும் விமர்சித்தார். இதனால், Trump-இன் நெருக்கமான இரு நபர்களுக்கு இடையில் முரண்பாடுகள் வெளிப்பட்டன.

இந்த வரிவிதிப்புகள் பல அமெரிக்க வர்த்தகர்களை பாதித்தன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125% வரி விதிக்கப்பட்டது. பதிலுக்கு, சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 84% வரி அறிவித்தது.

அமெரிக்காவின் இறக்குமதிகளில் 14% சீனாவிலிருந்து வருகிறது. ஆண்டுக்கு 440 பில்லியன் டொலருக்கு மேல் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மறுபுறம், சீனா 145 பில்லியன் டொலருக்கு மதிப்புடைய அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.

சுமார் 440 மில்லியன் பன்றிகளுக்குத் தேவையான சோயா பருப்பு சீனாவிற்கு அமெரிக்காவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துடன், மரவளி, எரிபொருட்கள், மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்றன. இந்த வரிவிதிப்பு காரணமாக, ஐபோன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக Apple பங்குகள் 20% வரை வீழ்ச்சியடைந்தன.

உலகப் பொருளாதாரத்தில், அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து 43% பங்குகளை வைத்துள்ளன. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் உலகம் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு கொண்ட Peter Navarro, தமக்குக் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி உலக பொருளாதாரத்தை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளார்.
இப்போது, இந்த நெருக்கடியில் இருந்து உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது யார்?
“Death by China” என்ற நூல் இறுதியில் “Death of World Economy” ஆக மாறக்கூடுமா என்பதனை காலமே கூற வேண்டும்…

பிரான்ஸ்: கார்கள் மீது கடும் பரிசோதனை – நிறுவனங்கள் சிக்கலில்!

0

பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட சில மகிழுந்துகளில் உள்ள AirBag அமைப்புகள் சரிவர இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல முன்னணி நிறுவனங்களின் மகிழுந்துகள் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக Volkswagen மற்றும் Citroën நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மகிழுந்துகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தன. தற்போது இந்த பட்டியலில் Toyota மற்றும் Mercedes-Benz ஆகிய பிரபல நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கைகள், குறிப்பாக 2001 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட சுமார் 20 மொடல் வகை மகிழுந்துகள் மீது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக, ஜப்பானிய நிறுவனம் Takata தயாரித்த AirBags உள்ளன. இந்த நிறுவனம் கடந்த ஒரு தசாப்தமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. Takata தயாரித்த AirBags, குறிப்பாக அவை விரிக்கப்படும் வேளையில் தேவையான அளவு திடப்படுத்தப்படாமல், பாதுகாப்பு மட்டத்தில் மிகப்பெரிய குறைபாடுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இந்த AirBags விரிக்கப்படும் போது உலோக துண்டுகள் பயணிகளுக்கு காயங்கள் ஏற்படுத்தியதாகவும், சில நிகழ்வுகளில் மரணங்கள் கூட ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்னைக்கு எதிராக உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 67 மில்லியன் கம்போனெண்டுகள் மீளப்பெறப்பட்டுள்ளன, இது உலக வரலாற்றில் மிகவும் பெரிய பாதுகாப்பு மீளவழிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிரான்ஸில் மட்டும் 2 மில்லியன் மகிழுந்துகள் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக French Road Safety Authority (DSR) தெரிவித்துள்ளது. ஏற்கனவே சோதனைக்குட்பட்ட Volkswagen மற்றும் Citroën நிறுவனங்கள், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட AirBags-ஐ இலவசமாக மாற்றி பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தற்போது Toyota மற்றும் Mercedes-Benz நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

Takata நிறுவனத்தின் AirBag சிக்கலால் ஏற்கனவே நிறுவனமே 2017-இல் திவாலானதாக அறிவித்து, அதன் சொத்துக்கள் மற்றும் தொழில்நுட்பங்களை Key Safety Systems என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு முன்னர் கடந்த காலங்களில் விற்பனையான பல்வேறு வகையான மகிழுந்துகள் இன்னும் பாவனையில் இருப்பதால், பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன.

பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தங்கள் மகிழுந்து மீளவழிமாற்ற பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், உரிய நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் சென்று VIN எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.