Thursday, March 12, 2026
No menu items!

பிரான்சில் Euromillions: €130 மில்லியன் பரிசு!

மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.

இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5 சரியான இலக்கங்களையும், 12 இலக்கங்களில் இருந்து 2 நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கணிக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம், அதிர்ஷ்டசாலி ஒருவர் €52.4 மில்லியன் பரிசை வென்றுள்ளார். அதேநேரம், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 8 நபர்கள் தலா €20,632 வென்றிருந்தனர்.

குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஒரு பிரெஞ்சு நபர் €220 மில்லியன் பரிசு வென்றமை குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டியவை
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் உள்ளன. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உதவிக்காக: 09 74 75 13 13 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பாரிஸ் தமிழரின் ஐந்து லட்சம் சுவாகா! திருத்த கஷ்டம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.  இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது. கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்.. இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.  நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...  உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று. À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent...

10 Tips for Raising Healthy and Active Kids in the Digital Age

Introduction: In today's digital age, children are growing up surrounded by technology, making it more challenging than ever for parents...

Sacred Hindu Pilgrimage Tour: Discovering Divine Temples in Sri Lanka 9 Days

Embark on a spiritual journey that traverses the holy land of Sri Lanka, where ancient Hindu temples stand as...

More Articles Like This