பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
- யாழில் தற்சார்பு மாடி வீடு மாதிரி திட்டம்: நிறைந்த வாழ்வு
- யாழில் ஒரு ஏக்கரில் தற்சார்பு பண்ணை அமைப்பு முறை : முழு வழிகாட்டி
- 🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
- பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!



