Latest Posts

Sale!

half saree

Original price was: 71,00 €.Current price is: 33,00 €.
Sale!

Saree

Original price was: 88,00 €.Current price is: 64,00 €.
Sale!

Saree

Original price was: 171,00 €.Current price is: 140,00 €.
Sale!

Saree

Original price was: 64,00 €.Current price is: 32,00 €.
Sale!

Half saree

Original price was: 67,00 €.Current price is: 37,00 €.
Sale!

Saree

Original price was: 64,00 €.Current price is: 35,00 €.
Sale!

Half saree

Original price was: 67,00 €.Current price is: 40,00 €.
Sale!

hs

Original price was: 55,00 €.Current price is: 37,00 €.

பணத்தின் இயல்பும் இயங்கியலும்…

Sale!

ch

Original price was: 31,00 €.Current price is: 20,00 €.
Sale!

Saree

Original price was: 55,00 €.Current price is: 29,00 €.
Sale!

Saree

Original price was: 91,00 €.Current price is: 71,00 €.
Sale!

lehenga

Original price was: 61,00 €.Current price is: 39,00 €.

பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது பணம் உண்டான காலம் மிக சிறியது இருந்த போதிலும் இந்த பணம் எப்படி இந்தளவுக்கு மனிதர்கள் வாழ்வில் நிலைபெற தொடங்கியது அதன் இயல்புகள் என்ன? பணத்தை எப்படி நாம் பார்க்கிறோம்? எப்படி பார்க்க வேண்டும் என்று சற்று விளக்கமாக ஆய்ந்தறிவோம்.

நீரானது உலகில் மொத்த மேற் பகுதியில் அதிகமான சதவீதத்தை தன்னுள் வைத்துள்ளது.நிலமானது பூமி எங்கும் மேற்பரப்பில் உள்ளது.நெருப்பானது பூமிக்கடியில் உட்கோள பகுதியில் எரிந்து கொண்டுள்ளது.காற்றானது வாயு மண்டலமாக பூமியை சுற்றி ஒரு படையாக உள்ளது.ஆகாயம் அதற்கு அடுத்து ஒரு படையாக ( layer ) ஆக உள்ளது.ஐம்பூதங்களும் இவ்வாறே பூமி என்ற ஒன்று உருவாகி இயக்கி கொண்டுள்ளது.

பூமியில் மனிதர்களால் செய்யப்படும் எல்லாமே இயற்கையில் இருந்து எடுத்து கொள்ளப்படுபவைதான்,இயற்கையின் இயல்புகள் அவற்றில் ஆழமாக காணப்படும்.பூமியில் பெருமளவு நீரானது உப்பாக கடலாக காணப்படுகின்றது,சிறிதளவு நீரே குடிக்க உகந்ததாக உள்ளது.அதே போல பணமும் சிறிதளவு பணமே பாவனைக்கு உகந்த அளவில் இருக்கும்.உப்பு கடல் நீர் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிப்பதற்கு உகந்தது அன்று! பணத்தின் பெரும்பான்மையும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பயன்படாது,வேறு தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு பயன்படுகின்றது.

நீரானது நகர்ந்து சென்று கொண்டே இயற்கையை வளமாக்கி கொள்ளும்,ஓரிடத்தில் தேங்குவதால் நீர் அசுத்தமாகி அதன் இயல்பை இழந்துவிடும்.பணமும் அதே போல ஓடி கொண்டே இருக்கும் போதே அது தனது பெறுமதியை அதிகரித்து கொள்ளும்,ஒரே இடத்தில் ஆங்காங்கே குவியும் போது பணம் தீமையாகி அதன் இயல்பை இழந்து விடுகின்றது.அதனால் தீமைகளே விளையும்.

பணத்தை நீர் போல ஓட விடுவது அதாவது முதலீடுகளில் இட்டு தொடர்ந்து பணத்தை ஓட வைத்து கொள்பவர்களை நோக்கியே பெருமளவு பணம் ஈர்க்கப்படுகின்றது.அவர்களே பெரிய செல்வந்தர்களாகிறார்கள்.அவர்களை நோக்கி பணம் நீர் போல நகர்ந்து வரும்.இன்றைய உலகில் பெரிய செல்வந்தர்கள் எல்லோருமே பணத்தை நகர்ந்து செல்லும் நீரை போன்று செல்லும் பணத்தால் பெரும் பணக்காரன் ஆனவர்கள்,அதாவது நகர்ந்து செல்லும் நீரை சரியாக கையளா தெரிந்து கொண்டவர்கள்.

இதற்கு மாறாக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என நினைப்பவர்களை நோக்கி பணம் வருவதில்லை,அப்படி வரும் பணமும் தன் இயல்பை இழந்து தானும் கெட்டும் அவர்களை கெடுத்துவிடும். இயற்கையில் எதுவும் தன் இயல்பை இழக்க விரும்புவதில்லை,தங்களை ஒத்த இயல்புகளை நோக்கியே கவரும் நகர்ந்து கொண்டே இருக்கும்.இவர்கள் இருக்கும் செல்வத்தையும் இழந்து கொள்கிறார்கள்.

அதே போல பெரும் தவறான அதிர்வுகளால் கிளர்ந்து எழும் பண அலைகள் சுனாமி போன்று நாடுகளை துவம்சம் செய்து மூழ்கடித்துவிடும்.சுனாமியை எதிர்க்க முடியாது? ஓடி தப்புவதான் தப்புவதற்கு ஒரே வழி! ஆழமான கடல் எவ்வாறு அமைதியாக இருக்குமோ அதே போல் பணத்தின் ஆழம் அதிகமாக அமைதி தரும்.இரைச்சலை ஏற்படுத்தி பணம் பற்றிய பயத்துடன் இருப்பவர்கள் கரைகளில் நின்று அலைகளிடம் அடி வாங்கி கொண்டிருப்பார்கள்,கடலின் மிகபெரிய எதிர்மறையான சுனாமி,ஆழம் குறைந்த கடலிலேயே பாதிப்பை உண்டு பண்ணும்.ஆழமான கடலில் சுனாமி அலை நகர்வதே தெரியாமல் இருக்கும்.அதாவது பணத்தின் ஆழம் அறிந்தவர்களுக்கு அங்கு நிற்பவர்களுக்கு அதனால் ஆபத்து இல்லை. ஆழத்தை பார்த்து பயந்து கரையில் நிற்பவர்களுக்குதான் ஆபத்து.

பெரும் செல்வந்தர்கள் பணத்தை பற்றி பெரிதாக அலட்டிகொள்வதில்லை.பணத்தின் இயல்பிலேயே அதனை எடுத்து கொள்வார்கள்,ஆனால் மற்றவர்கள் பணத்தை புனிதபடுத்தி பயந்து கொள்வார்கள்! அது அவர்களது பலவீனத்தையும் அவர்கள் ஆழ கடலில் போக பயந்து கரையில் நிற்பதால் ஓய்வே இல்லாத அலைகளை தமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் எதிர்கொள்கிறார்கள்.அது அவர்கள் வாழ்வில் அமைதியீனத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கும்.

இயற்கையை இயக்கும் நீரை இயக்குவதில் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று என்பன காரணிகளாகவும் இருக்கின்றன.உயர்வான நிலபகுதியில் இருந்து தாழ்வான நிலபகுதி நோக்கி நீர் பாயும்.அதே போன்று நெருப்பு நீரை எரித்து ஆவியாக்கி உலகெங்கும் நகர்த்தி செல்லும்.காற்றும் ஆகாய அதிர்வுகளும் நீரை நகர்த்தி செல்வதில் தமக்குரிய பங்குகளை வகிக்கின்றன.பணம் காற்று போல பறக்கும்,நெருப்பை போல எரிக்கும்,ஆகாயம் போல அந்தரத்தில் தொங்கும்,தொங்க விடும்.எல்லாவிதமான ஐம்பூத இயல்புகளையும் பணம் தன்னகத்தே கொண்டுள்ளதால்தான் அது ஒரு பெரிய சக்தியாக இருக்கின்றது.

இந்த பூமியும் சரி மனித உடலும் சரி நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என ஐம்பூதங்களினால் ஆனது.இங்கு நமக்கு தெரியும் எல்லாவற்றிலும் ஐம்பூத இயல்புகள் உண்டு,நமது அறிவை வைத்து அதன் இயல்புகளை தெரிந்து கொள்ளும் போது எமது வாழ்க்கை வாழ இலகுவாகின்றது.

Sale!

samudrika

Original price was: 763,00 €.Current price is: 647,00 €.
Sale!

Saree

Original price was: 205,00 €.Current price is: 151,00 €.
Sale!

Saree

Original price was: 196,00 €.Current price is: 148,00 €.
Sale!

samudrika

Original price was: 625,00 €.Current price is: 514,00 €.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img