Monday, March 2, 2026
No menu items!

சொல்றதுக்கு ஒன்றுமில்லை : பகுதி I

நிறுத்துங்கள்! சற்று சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதானா என்று. ஆழமாகபோனால் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றில் வேறுபட்ட  ஒன்றாக தான் உள்ளது. இப்பொழுது சொல்வீர்கள் எல்லாமே வேறு வேறு தானே  என்ன சொல்ல வருகிறாள் இவள் என்று. எல்லோருமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது என்று கூறிவிட்டு ஏன் தொழில், கல்வி என்று வரும்போது பொதுவாக எல்லோருமே ஆண் என்றால் பொறியியலாளர் பெண் என்றால் மருத்துவர். இந்த இரண்டு வேலையை தவிர உலகத்தில் ஒன்றும் இல்லை என்பது போல திட்டமிட்டு சொல்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும் எல்லோரும் ஓர் வேறுபட்ட உயிரினம் தான் என்று ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு திறன் இன்னொருவரை காட்டிலும் சிறப்பாகவே இருக்கும். அனைவருமே ஒரே வகையான வேலையைத்தான் செய்ய வேண்டுமென்றால் மற்றைய வேலைகளை செய்ய நாம் புதிதாக ஒன்றை  உருவாக்கத்தான் வேண்டும்  இல்லையானால் அனைவருமே எல்லாம் அறிந்தவராய் தான் இருக்க முடியும். இங்கு அனைத்தும் அறிந்தவர் என்று யாரும் இல்லை. ஏனோ நாம் அதை பொருட்படுத்தாமல் அனைவரும் செல்லும் பாதையில் செல்ல வேண்டும்?

சற்று நாட்களுக்கு முன் என் நண்பனின் உரையாடல் என்னை சற்று யோசிக்க வைத்ததென்றே சொல்லலாம். “ஏன் அனைவரும் யாரோ ஒருவனின் திறனால் ஒழுங்கமைத்து உருவாக்கப்பட்ட ஒரு தொழிலை நோக்கியே  சென்றுகொண்டு இருக்கின்றோம்” என்ற கேள்வியே. அவரின் கேள்வி, கேட்கும்போது விநோதமாக இருந்தாலும் ஆழமாக  பார்க்கும்போது சிந்திக்கவேண்டிய ஒன்றாகத்தான் இருக்கின்றது.

உதாரணமாக வைத்தியர் தொழிலையோ பொறியியலாளர் தொழிலையோ பார்த்தோமானால் … என்னடா இது இரண்டும்தான் இவளுக்கு தொழில் போல் தோன்றுகின்றது என்று எண்ணாதீர்கள். நான் கேட்டு அறிந்ததில் அதிகப்படியாக 90 சதவீதமானோர்  கூறுவது இதைத்தான் அதனால்தான் இதை உதாரணம் காட்டுகின்றேன். சரி நமது கருத்திற்குள் செல்வோம் . வைத்தியர் தொழிலோ பொறியியல் தொழிலோ எந்த தொழிலோ ஆழமாக சென்றால் அது யாரோ ஒருவரின் உருவாக்கமும் திட்டமிடலுமாகத்தான் உள்ளது . நாம் தானே  சொல்கின்றோம் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவரும் மறுபட்ட வேறுபட்டவர்கள் என்று ஏன் நம்மில் உள்ள ஒரு திறனை கொண்டு நாமே புதியதாக உருவாக்க முடியாதா?

அப்படி பார்த்தோமானால் பூமியிலுள்ள அத்தனை உயிரிடமிருந்தும் புதியதாக எத்தனை பொருள் உருவாகியிருக்கும்.சற்று சிந்தியுங்கள். இங்கு ஒருவர் உருவாக்கியதைத்தான் தூக்கிக்கொண்டு  உலகமும் நாமும் செல்வதாலேயோ என்னவோ  மனிதமூளை  பயன்படுத்தவேண்டிய அளவிலும்  குறைவாகவே பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம் . இங்கு பல பேரிற்கு  தன்னை பற்றி சிந்திக்கவே இக்கால கட்டத்தில் நேரம் இல்லையென்றபோது எப்படி நமக்குள் இருக்கும் திறனை வெளிக்கொணர்வது? என்ற எனது கேள்வி முடடாள் தனமாகத்தான் உள்ளது.

பிரபஞ்சத்தில் அனைவரும் ஏதோ ஒன்றின் கீழ் அடிமைப்பட்டுதான் காணப்படுகின்றோம் . ஒருவர் மட்டும் சிந்தித்து எந்த பயனுமில்லை மாறவேண்டியது மனித இனத்தில் நிறையவே உள்ளது .நமது முந்தய சந்ததி எழுதி நிறுவி வைத்தது ஒன்றை வழிகாட்டியாக பயன்படுத்தலாம். அதனையே எடுத்துகொண்டு  சிறு மாற்றமும் செய்து விட்டு திட்டமிட்டு  செயற்ப்படுத்துகின்றோம் என்றால் ஏதோ ஒன்றின் கீழ்தான் நாம் இருக்கின்றோம் என்பதை அறிய வேண்டும். நாமாக எதனை செய்தோம் என்றால் கேள்விக்குறிதான்.

இதை பார்த்துவிட்டு மாறுபவர்களும்  தேவைதான் மாறாமல்  இருப்பவர்களும் தேவைதான் எல்லோரும் ஒன்றை ஒரேடியாக விட்டு வந்தாலும் சமநிலையும் குழம்பிவிடும் அல்லவா? குழப்புகின்றாள் என்றாலும் பரவாயில்லை குழம்பி தெளியுங்கள்.  நான்  சொல்வது நல்ல திறமை நல்ல சிந்தனை இருப்பவர் கூட அதை பயன்படுத்த தெரியாமல் ஏதோ ஒன்றின் பின் செல்வதுதான் முட்டாள்தனமாக உள்ளது. எனது சிந்தனையில் தோன்றியதை உங்கள் முன்வைத்துள்ளேன் இனி மாறுவதும் மாற்றுவதும் தத்தமது கைகளில் தான் உள்ளது.

தொடரும்…

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

பிரான்ஸ்: நீண்டகாலம் வேலை செய்யும் தமிழர்களுக்கு சலுகை!

பிரான்ஸ் ஓய்வூதியத் திட்டத்தில் early retirement for long careers எனப்படும் "நீண்ட கால வேலை செய்தவர்களுக்கான ஆரம்ப ஓய்வு" திட்டம், உதவி தேவைப்படுவோருக்கே மிகக்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img