Thursday, April 23, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

இந்த ஈழ தமிழ் அகதி, கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா?

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

இந்தத் தமிழ் அகதி நாடு கடத்தப்படுவாரா ? குகதீஸ்வரன் துரைசிங்கம் கனடாவுக்கு வந்து 16 ஆண்டுகள். 492 தமிழ் அகதிகளுடன் MV Sun Sea கப்பலில் மாதக்கணக்கில் கொடூரமான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு (B.C.) வந்தவர் இந்தக் குகதீசன் துரைசிங்கம்.

இன்றும் கனடாவில் அகதி அந்தஸ்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான அந்தச் சரக்குக் கப்பலுடன் தொடர்பு கொண்டதால் மட்டுமே இலங்கையில் தனக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் அபாயம் இவரை எதிர்நோக்கியுள்ளது.

Sun Sea கப்பலில் ஏறுவதற்கு என்ன காரணம்?

குகதீஸ்வரன் துரைசிங்கம் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவருக்கு ஐந்து வயதிருக்கும் போது தாயார் இறந்தார். பின்னர் அவரது தந்தை அவரையும் மூன்று உடன்பிறப்புகளையும் பள்ளிப்படிப்பிலிருந்து விலக்கினார்.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

குகதீஸ்வரன் துரைசிங்கம் இரும்பு வேலை செய்யும் (iron smith) மற்றும் மரவேலை (carpentry) நிலையங்களில் சின்ன வயதில் வேலைக்கு அனுப்பப்பட்டார்.குகதீஸ்வரன் துரைசிங்கம் 13 வயதில் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்தார். டயர்களைப் பழுது பார்ப்பது அவரது வேலை.

தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தங்கள், வன்முறை மற்றும் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவர் இவர்.இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான யுத்தத்துக்கு மத்தியில் அவர் வளர்ந்தார்.

2001 இல் மணம் புரிந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் மூன்று பிள்ளைகளின் தந்தை. நீண்டகாலமாகத் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் பிரிந்த நிலையில் கனடாவில் அவரது அவல வாழ்வு தொடருகிறது.

2009ஆம் ஆண்டின் இறுதியில் அவர் தாய்லாந்துக்கு சென்று, அங்கிருந்து MV Sun Sea கப்பலில் ஏறினார். “அந்தப் படகில் நீண்ட பயணம். நிறையப் பேர் கப்பலுக்குள். உணவும் தண்ணீரும் போதவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம்” என்று குகதீஸ்வரன் துரைசிங்கம் ‘ரொறொன்ரோ ஸ்ரார்’ பத்திரிகைக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கப்பல் பயணம் மூன்று மாதங்கள் நீடித்து 2010 ஓகஸ்ற் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை வந்தடைந்தது.கப்பலுக்குள் கனடிய அதிகாரிகள் வந்தபோது பயணிகளுக்கு ஆறுதலாக இருந்தது.ஆனால் அதன் பின்னர் சிறைவாசமும், “மனிதக் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள்” என்று அரசால் முத்திரை குத்தப்படுதலும் தொடர்ந்தது.

பின்பு பலர் விடுதலையானார்கள். விடுதலையானவர்கள் அகதி அந்தஸ்து கேட்டார்கள். அதிகமானவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு நிரந்தர வதிவிட அனுமதி, குடியுரிமை என்றெல்லாம் பெற்றார்கள்.அவரது வழக்கை முதலில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் திறமையற்றதாக இருந்ததால், கப்பலில் வந்த தமிழர்களைக் கனடிய அரசும் ஊடகங்களும் சித்தரித்த விதத்தால் ஏற்படும் ஆபத்துகள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அவரின் தற்போதைய வழக்கறிஞர் கூறுகிறார்.2012இல் அவரது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேல் முறையீடுகள், Pre-Removal Risk Assessment (PRRA) அனைத்தும் தோற்றன.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

முக்கிய காரணம்: MV Sun Sea கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பினால் எதிர்கொள்ளும் ஆபத்துகள் (துன்புறுத்தல், கண்காணிப்பு, இராணுவ அச்சுறுத்தல்) அவரது வழக்கில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படவில்லை.முந்தைய வழக்கறிஞர் இந்த முக்கிய ஆதாரங்களைச் சேர்க்கத் தவறிவிட்டார் என்று தற்போதைய வழக்கறிஞர் கூறுகிறார்.

கடந்த 16 ஆண்டுகளில் அவர் பட்ட வேதனைகள்:

நீண்டகால மனச்சோர்வு, மது பழக்கம்,மனநோய் (psychosis) – குரல்கள் கேட்டல், நினைவிழப்பு, தெரியாத இடங்களில் அலைதல் வீடு இல்லாமை (homelessness), பேருந்துத் தரிப்புகளில் இரவுநேர நித்திரை பல தடவைகள் தற்கொலை முயற்சிகள், மருத்துவமனை அனுமதி

2022-ல் அகதி விசாரணைக்கு வராததால் கைது, 2024-ல் மீண்டும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது.அப்போதுதான் Refugee Law Office வழக்கறிஞர் தலையிட்டு, அவருக்கு மனநோய் உள்ளதெனக் கண்டறியப்பட்டது.மவுண்ட் சினாய் மருத்துவமனைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்.

தற்போது தமிழ் மனநல ஆதரவுக் குழுவின் peer support worker அவர் விடயத்தில் பணியாற்றுகிறார். அவரது மனநல நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.2025இல் முன்னைய நீக்க உத்தரவு (removal order) நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.ஆனால் கடந்த வாரம் எல்லை அதிகாரிகள் மீண்டும் அவரது நீக்க உத்தரவை ஒத்திவைக்க மறுத்துவிட்டனர்.

“இலங்கை அரசுக்கு அவர் MV Sun Sea மூலம் கனடா சென்று இப்பொழுது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளமை நன்றாகத் தெரியும்” என்று கூறும் தற்போதைய வழக்கறிஞர் Kes Posgate, “இவர் வீடு இல்லாமல், மனநோயால் பாதிக்கப்பட்டும், ஒருபோதும் சோர்வடையவில்லை. இப்போது தமிழ் சமூகத்துக்கு உதவுகிறார். ஆகவே இவரை நாடு கடத்தும் அநீதி மிகப் பெரியது” என்கிறார்.

இது MV Sun Sea கப்பலில் வந்த 492 தமிழ் அகதிகளில் ஒருவரின் நீண்டகாலப் போராட்டக் கதை. இன்னும் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிற்குறிப்பு : யூலை 2015 ஆம் ஆண்டு Candian Council for Refugees அறிக்கையின்படி MV Sun Sea கப்பலில் வந்தவர்களில் 228 பேரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்டது.116 பேரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.20 பேர் தங்களது தஞ்சக் கோரிக்கையை மீளப்பெற்றார்கள் அல்லது இல்லாமலாகியது.

பதிவுக்கு நன்றி – முரளிதரன் நடராஜா

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here