Wednesday, March 18, 2026
No menu items!

பயங்கரத்தின் முன்னறிவிப்பு? பாரிசில் 5 சவபெட்டிகள் மீட்பு!

பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மிக அருகே வீதியோரம் காணப்பட்ட ஐந்து முழு அளவிலான பிரேதப் பெட்டிகளைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். 

கோபுரத்தின் அடியில் Jacques-Chirac Quay பக்கமாக நேற்று ஜூன் முதலாம் திகதி காலை இந்தச் சவப் பெட்டிகளை ஈபிள் கோபுரப் பணியாளர்கள் முதலில் கண்டுள்ளனர். உடனடியாகப் பொலீஸார் அங்கு அழைக்கப்பட்டனர். ஐந்து சவப் பெட்டிகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன.பிரெஞ்சுக்கொடி சுற்றப்பட்டிருந்தது. அவற்றின் மீது”உக்ரைனில் உயிரிழந்த பிரெஞ்சு வீரர்கள்”(soldats français morts en Ukraine”) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் பாரிஸ் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. 

அறிவியல் பொலீஸ் பிரிவினர் பெட்டிகளை நுணுக்கமாகச் சோதனை செய்தபின் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன. 

இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனச் சாரதி ஒருவரைப் பொலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேறு இரண்டு பேரை அவர் அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் பஸ்ஸில் ஜேர்மனிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் மூவரும் பல்கேரியா, உக்ரைன், ஜேர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பரீஷியன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...
- Advertisement -

More Articles Like This