Monday, March 2, 2026
No menu items!

தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்

ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில் எதுவாக இயங்கி கொண்டுள்ளோம் என நாம் நினைத்தாலும் நாம் உண்மையில் ஒரு ஒழுங்கில்தான் இருக்கிறோம்.

அந்த ஒழுங்கு சிலவேளை எமக்கு சாதகமற்ற,எமக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனாலும் இங்கு சரிகள் தவறுகள் தாண்டி நாம் ஒரு ஒழுங்கில்தான் இயங்கி கொண்டுள்ளோம்.நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம் இதுதான்.

ஒழுங்காக படிக்கவில்லை என ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்கு சொல்லலாம்.ஆனால் அந்த பிள்ளை ஒழுங்காக டீவி பார்த்து கொண்டிருக்கலாம் அல்லது படிப்பு தவிர்ந்த ஏதோ ஒன்றின் ஒழுங்கில்தான் இயங்கி கொண்டிருக்கும்..அங்கு ஒரு ஒழுங்கு / ஒழுக்கம் இருக்கின்றது.

இந்த இயங்கியல் அடிப்படையை நாம் விளங்கி கொள்ளும் போது இலகுவாக எமது ஒழுங்கு ஒழுக்கம் சார் பிரச்சினைகளை இலகுவாக எதிர்கொள்ள முடியும்.நாம் எப்படியும் ஒரு ஒழுங்கில்தான் இயங்குகிறோம் அதில் எமக்கு பிடித்ததை கொண்டு வருவது என்பது இலகு..ஆனால் ஒழுங்கில் இயங்குவது தெரியாமல் நமக்கு சாதகமற்றவைகளை செய்து கொண்டு நாம் ஒழுங்கில்லாமல் ஒழுக்கத்தை தவற விட்டுகொண்டு இருக்கிறோம் என நினைப்பது தவறு,

நமது உண்மை இயல்பை அறிந்து கொள்ளும் போதே எமக்கு எம்மை பற்றிய விழிப்புணர்வுகளை நாம் அதிகமாக பெற்று கொள்ள முடியும்.நாம் ஏற்கனவே இயங்கி கொண்டுள்ள ஒழுங்கை முதலில் கண்டறிய வேண்டும்..அதில் எமக்கு சாதகமற்றவகைகளை சாதகமானவைகளை கொண்டு ஒவ்வொன்றாக பிரதியிட்டு கொள்ளவேண்டும்.இதன் மூலம் எமது ஒழுங்கு ஒழுக்கத்தை சரியாக பேண முடியும்..

எமது வாழ்வில் ஒழுங்கை ஒழுக்கத்தை பேண சில விதிமுறைகள்..

1.முடிந்தவரை சகல வழிகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ கற்று கொள்ளுங்கள்

2.உங்கள் வாழ்க்கையை எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள்

3.ஒவ்வொரு நாளும் போதுமானளவு நேரம் தனிமையில் செலவிடுங்கள்

4.பேச்சு,சிந்தனை,உணவு,தூக்கம் அளவாக வைத்திருங்கள்.

5.அதிகாலையில் துயில் எழுங்கள்

6.உடல் களைத்து வேலை செய்யுங்கள்

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

லாச்சப்பலில் தவிக்கும் ஈழதமிழர்கள்! தொடரும் சம்பவங்கள்!

லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்... ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.. குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர். இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்...காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img