Sunday, March 15, 2026
No menu items!

பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!

ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்ஸின் பா-து-கலே (Pas-de-Calais) கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியாவை நோக்கி புறப்பட்ட ஒரு அகதிகள் படகு, நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக பழுதடைந்து நின்றது. இந்த படகில் 72 அகதிகள் பயணம் செய்தனர்.

Saint-Etienne-au-Mont நகரப்பகுதியை ஒட்டிய கடல் எல்லை வழியாகக் கடந்து சென்ற படகு, இயந்திரக்கோளாறால் நடுக்கடலில் கட்டுப்பாட்டை இழந்ததும், அவசர தகவல் centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) என்ற கடற்படை மீட்புப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

CROSS அமைப்பின் துரிதச் செயல்பாட்டினால், 72 அகதிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடல் பயணத்தின் போது யாருக்கும் பெரும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம், கடந்த சில வாரங்களாகவே பிரான்ஸ் – பிரிட்டன் கடற்கரைகளில் அதிகரித்து வரும் சட்டவிரோத அகதிப் பயணங்களுக்கு வலுவான ஒரு ஆதாரமாகத் தோன்றுகிறது. இதே போன்று ஏப்ரல் 3ஆம் திகதி, Wimereux (Pas-de-Calais) நகரப்பகுதியைச் சேர்ந்த கடலோரத்திலிருந்து இரண்டு படகுகளில் பிரிட்டன் நோக்கி பயணித்த 115 அகதிகளும் மீட்கப்பட்டிருந்தனர்.

சட்டவிரோதமாக கடல் வழியாக பிரிட்டன் செல்ல முயற்சிக்கின்ற அகதிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இத்தகைய மீட்புச் செயல்பாடுகள் பரபரப்பையும், மனிதாபிமான சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சுடானுக்கு ஆகிய நாடுகளிலிருந்து யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகள் இவ்வாறு பயணிக்கின்றனர்.

பிரான்ஸ் அரசு மற்றும் யூக சந்தா நாடுகள், இந்த பயணங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி வருகின்றன. அதே சமயம், இவை தொடர்பான நடவடிக்கைகளின் போது அகதிகள் பாதுகாப்பும், மற்றும் மனித உரிமைகளும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உருவாகியுள்ளது.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...

More Articles Like This