ஈரான் – இஸ்ரேல் போர் முற்றுகை உச்சம் பெறும் நிலையில்,ஈரான் அனுதாபிகள் இஸ்ரேல் ஆதரவு நாடும்,ஈரான் மீதான போருக்கு பக்கபலமாக இருந்து மறைமுகமாகவும்,வெளிப்படையாகவும் உதவி வரும் பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் எதாவது வெறிதனமான தாக்குதலை பொதுமக்களை இலக்கு வைத்து நடாத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது
இதன்படியே பாரிஸ் நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.கடந்த 50 வருடங்கள் காணாத பெரும் பதட்டம் மத்திய கிழக்கு,ஐரோப்பாவில் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
தமிழர்கள் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்..அதிக நேரம் தேவையில்லாமல் மக்கள் கூட்டங்கள் அருகில் நிற்காதீர்கள்,எதாவது சிறு வேடிக்கை நிகழ்வுகளை பார்க்க மினகெடாதீர்கள்,வீதியில் காரை கொண்டு மக்கள் கூட்டத்தை அடித்து மோதும் ஒரு உக்தி அண்மை காலங்களில் பாவிக்கப்படுகின்றது.. ஆக வீதியில் கரையில்,கடக்கும் போது அவதானமாக இருங்கள்.
துப்பாக்கிளை தாண்டி கத்திகள் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அதிகம். ஆக எச்சரிக்கை சத்தம் எதிவும் கேட்க போவதில்லை. மெட்ரோ நிலையத்தில் கூட அவதானமாக இருங்கள். யாரும் எம்மை காப்பாற்ற வர போவதில்லை,நாம்தான் நம்மை காப்பற்றி கொள்ள வேண்டும். இதனை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்..நன்றி