பாரீஸ்: இன்று காலை Gare du Nord தொடருந்து நிலையத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீற்றர் நீளமுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, Eurostar சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக, பாரீஸ்-லண்டன், லண்டன்-பாரீஸ், பாரீஸ்-பிரசெல்ஸ், பிரசெல்ஸ்-பாரீஸ் ஆகிய அனைத்து Eurostar சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தொடக்கத்தில், மாலை வேளைகளில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போதைய சூழ்நிலைக்கிணங்க Eurostar சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இயங்கும் சேவைகள்:
எவ்வாறாயினும், Bruxelles – Marne La Vallée, Londres – Bruxelles, Londres – Amsterdam ஆகிய சேவைகள் வழக்கம்போல இயங்கும் என Eurostar நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மூலம் பொதுமக்கள் பெறலாம்.