இன்று மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளின் பல மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Creuse மாவட்டம் மிகுந்த பாதிப்பு
Creuse மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், அங்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மஞ்சள் நிற எச்சரிக்கைக்கு உட்பட்ட மாவட்டங்கள்
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, மொத்தம் 38 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது. அவை:
Auvergne-Rhône-Alpes: Ain, Allier, Cantal, Haute-Loire, Loire, Puy-de-Dôme, Rhône, Savoie, Haute-Savoie
Nouvelle-Aquitaine: Charente, Corrèze, Dordogne, Haute-Vienne, Vienne
Occitanie: Ariège, Aveyron, Haute-Garonne, Hautes-Pyrénées
Bourgogne-Franche-Comté: Côte-d’Or, Haute-Saône, Nièvre, Saône-et-Loire, Yonne
Grand Est: Haute-Marne, Haut-Rhin, Vosges
Centre-Val de Loire: Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret
Pays de la Loire: Maine-et-Loire, Sarthe, Vendée, Deux-Sèvres
Territoire-de-Belfort
எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்:
வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும்.
கடும் பனியால் சாலைகள் மந்தமாகும், வாகன ஓட்டிகள் அவதானமாக இருக்க வேண்டும்.
அவசர தேவைகளுக்கு மட்டுமே பயணிக்கவும்.
நிலைமைகளை தொடர்ந்து கவனித்து வானிலை செய்திகளை கேட்கவும்.
வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதால், தேவையான மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.